R News: சினிமா
Headlines News :
Powered by Blogger.

Latest Post

Showing posts with label சினிமா. Show all posts
Showing posts with label சினிமா. Show all posts

42 மனைவிகளுடன் வடிவேலு

Written By Unknown on Friday, July 5, 2013 | 2:00 PM

திரையுலகிற்கு ரீஎண்ட்ரி கொடுத்துள்ள வடிவேலு நடித்து வரும் புதிய படம் ஜெகஜால புஜபல தெனாலிராமன். இதன் முதல் கட்ட படப்பிடிப்பிற்கு ஏ.வி.எம் ஸ்டூடியோவில் பிரமாண்டமான செட் அமைக்கப்பட்டு, படப்பிடிப்பு நடந்துள்ளது. இதில் தெனாலிராமன் கெட்டப்பில் வடிவேலு நடித்த முதல் காட்சியை படமாக்கினர். இக்காட்சியில் அவருக்கு 42 மனைவிகளும், 56 பிள்ளைகளும் இருப்பது போன்று கதாபாத்திரங்களை வைத்து படமாக்கி உள்ளனர். குறிப்பாக இப்படத்திற்காக பிரத்யேக பயிற்சிகளை எடுத்துக் கொண்ட வடிவேலு, தன் அம்மாவை பார்ப்பதற்காக மதுரைக்கு சென்று விட்டாராம். 

வுண்டர்பார் ஸ்டுடியோ: சொந்தமாக மியூசிக் நிறுவனம் தொடங்கினார் தனுஷ்!

Written By Unknown on Wednesday, May 15, 2013 | 12:43 PM

தயாரிப்பாளராக முதல் வெற்றியை ருசிக்க ஆரம்பித்துள்ள நடிகர் தனுஷ், அடுத்து சொந்தமாக மியூசிக் நிறுவனம் தொடங்கியுள்ளார். நிறுவனத்துக்கு வுண்டர்பார் ஸ்டுடியோ என்று பெயர் சூட்டியுள்ளார்.

Dhanush to launch own music company இவரது தயாரிப்பு நிறுவனத்துக்கும் இதே பெயர்தான் என்பது நினைவிருக்கலாம். வுண்டர்பார் நிறுவனம் மூலம் தனுஷ் முதலில் தயாரித்த படம் 3. அனிருத் இசையில் இதில் இடம்பெற்ற கொல வெறிடி பாடல் உலகையே கலக்கியது. சோனி நிறுவனம் இந்தப் பாடல்களை வெளியிட்டது. மீண்டும் அதே அனிருத் இசையில், தனுஷ் தயாரித்த எதிர்நீச்சல் படப் பாடல்களும் பெரும் வெற்றியைப் பெற்றுள்ளன. தமிழகத்தின் பட்டிதொட்டியெல்லாம் இந்தப் பாடல்கள்தான் இன்று சக்கை போடுபோடுகின்றன. இந்த தொடர் வெற்றியைக் கண்ட தனுஷ் இப்போது சொந்த இசை நிறுவனம் தொடங்கியுள்ளார். தன் தயாரிப்பு நிறுவனப் பெயரையே இந்த இசை நிறுவனத்துக்கும் சூட்டியுள்ளார். விரைவில் இந்த நிறுவனத்தின் முதல் வெளியீடு குறித்து அறிவிக்கப் போவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார் தனுஷ்.

தமிழில் அம்பிகாபதியாக வெளியாகும் ராஞ்ஜ்னா

தனுஷ் நடிக்கும் ராஞ்ஜ்னா இந்திப் படம் தமிழில் அம்பிகாபதி என்ற பெயரில் டப் செய்யப்படுகிறது. இந்தியில் தனுஷ் நடிக்கும் முதல் படம் ராஞ்ஜ்னா. இந்தப் படம் வரும் ஜூலை மாதம் உலகம் முழுவதும் திரைக்கு வருகிறது. இதில் தனுஷுக்கு ஜோடியாக சோனம் கபூர் நடித்துள்ளார். ஆன்ந்த் எல் ராய் இயக்கியுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். டீன் ஏஜ் காமெடியையும் காதலையும் மையமாகக் கொண்டு இந்தப் படத்தை உருவாக்கியுள்ளனர். 

தனுஷ் நடிப்பை ஷூட்டிங்கின்போதும், டப்பிங்கின் போதும் படக்குழு வெகுவாகப் பாராட்டியிருந்தது. அண்மையில் வெளியான இந்தப் படத்தின் டிரைலர் ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. எனவே, ராஞ்ஜ்னா படத்தை தமிழிலும் வெளியிட முடிவு செய்திருக்கின்றனர். தமிழில் அம்பிகாபதி என்ற பெயரில் டப் செய்கின்றனர். இந்தியில் வெளியாகும் ஜூன் 21 ஆம் தேதியே தமிழிலும் அம்பிகாபதியை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

என்னை விட சிறந்த நடிகர் தனுஷ்தான் - விஜய்யின் பாராட்டு

Vijay Hails Dhanush சிறந்த நடிகருக்கான விருதுகள் எனக்குக் கிடைத்திருந்தாலும், என்னைவிட சிறந்த நடிகர் தனுஷ்தான் என்று பாராட்டு தெரிவித்தார் நடிகர் விஜய். விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சியில் நடிகர் விஜய்க்கு சிறந்த நடிகருக்கான பிரிவுகளில் இரு விருதுகள் வழங்கப்பட்டன. இந்த விருதுகளைப் பெற்றுக் கொண்ட விஜய், மேடையில் பேசுகையில், "எனக்கு இரு விருதுகள் கிடைத்துள்ளன. ஆனால் என்னைவிட சிறந்த நடிகர் ஒருவர் இங்கு உட்கார்ந்திருக்கிறார்... அவர் தனுஷ். உண்மையிலேயே மிகச் சிறந்த நடிகர்," என்று பாராட்டினார். 

விஜய்யின் பாராட்டுக்கு நன்றி தனது ட்விட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார் தனுஷ். அதில், "விஜய் சாரின் உயர்ந்த வார்த்தைகளுக்கு என் தனிப்பட்ட வணக்கம். ஆனால் என்றைக்கும் அவர் தான் சிறந்த, பெரிய நடிகர். எனக்கு இந்தமுறை இரண்டு விருதுகள் கிடைத்திருக்கின்றன. ஒன்று ‘விஜய் விருதுகள்', மற்றொன்று ‘விஜய்' சாரின் பாராட்டு எனும் விருது" என்று குறிப்பிட்டுள்ளார். 

தனுஷ் போன்ற கணவர் வேண்டும்! சோனம் கபூர் பரபரப்பு பேட்டி

Written By Unknown on Tuesday, May 14, 2013 | 2:55 PM

இந்தியில் தனுஷ் முதன்முதலாக நடித்துள்ள படம் ராஞ்சனா. இந்த படம் அம்பிகாவதி என்ற பெயரில் தமிழிலும் வெளியாக உள்ளது. இப்படத்தில் தனுசுக்கு ஜோடியாக நடித்திருப்பவர் சோனம் கபூர். தனுசைப்போலவே உடல் எடையைக்குறைத்து பள்ளி மாணவி கெட்டப்பில் நடித்திருக்கும் சோனம்கபூர், அப்படத்தில் தனுசுடன் நடித்த இனியமையான அனுபவங்களை மும்பை மீடியாக்களில் பகிர்ந்து கொண்டு வருகிறார். அது மட்டுமின்றி, நடிகர் அனில்கபூரில் மகளான சோனம்கபூர், எதிர்காலததில் தனக்கு கணவராக வருகிறவர் தனுஷ் மாதிரியே இருக்க வேண்டும் என்று பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.



மேலும், இந்த படத்தில் ராஞ்சனா என்றால் அது தனுஷ்தான். அவரைப்போன்று யாருமே கிடையாது. அப்பாவித்தனமான அவர் பழகுவதற்கு ரொம்ப இனிமையானவர். அவருடன் பழகின பிறகு எதிர்காலத்தில் இவரை மாதிரி மாப்பிள்ளை பார்த்துதான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற முடிவுக்கே வந்து விட்டேன் என்று கூறியுள்ள சோனம் கபூர், தமிழ்நாட்டுக்கு சென்று தனுஷ் மாதிரியான ஒருவரைத்தான் தேர்வு செய்வேன் என்று நினைக்கிறேன் என்றும் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

அசினின் கோலிவுட் முயற்சி தோல்வியில் முடிந்தது!

Written By Unknown on Sunday, March 31, 2013 | 8:28 AM

த்ரிஷாவை வீழ்த்தி விஜய், அஜீத், சூர்யா, ஜெயம்ரவி போன்ற நடிகர்களுடன் ஜோடி சேர்ந்தவர் அசின்.அதையடுத்து கோலிவுட்டின் முன்னணி நடிகையானார். ஆனால் முருகதாஸ் இயக்கத்தில் அவர் நடித்த கஜினி படம் இந்திக்கு செல்லவே இந்தி ரீமேக்கிலும் நடித்து இந்தியில் முன்னணி நடிகையானார் அசின். என்றாலும், சமீபகாலமாக பாலிவுட் நடிகைகளுக்கிடையே பலத்த போட்டி நிலவுகிறதாம். குறிப்பாக, அசினை குறிவைத்து தாக்குகிறார்களாம் சில நடிகைகள். இவர் தென்னிந்திய நடிகை என்பதால் வடக்கத்திய நடிகைகள் அனைவரும் ஒன்றுகூடி இவரை விரட்டியடிக்க திட்டம் தீட்டி வருகிறார்களாம். அதனால் முடிந்தவரை சமாளித்த அசின், அடுத்தபடியாக மீண்டும் கோடம்பாக்கத்துக்கு வந்து விடலாமா என்றுகூட யோசித்தார்.

துப்பாக்கியைத் தொடர்ந்து விஜய் நடிக்கும் படத்தில் தான் இடம்பிடித்து விட பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் அந்த நேரம்பார்த்து, கோலிவுட் நடிகைகள் யாரும் இலங்கைக்கு செல்லக்கூடாது என்று விதிக்கப்பட்டிருநத தடையை மீறி ஒரு இந்தி படப்பிடிப்புக்காக அவர் இலங்கை சென்று வந்ததால், மீண்டும் அசின் தமிழில் நடிப்பதற்கு எதிர்ப்பு எழுந்தது. இதன்காரணமாக, அவரை நடிக்க வைத்தால் படம் திரைக்கு வரும் நேரத்தில் தேவையில்லாத பிரச்சினை வரும் என்று அசினை ஓரங்கட்டி விட்டனர். இதனால் இப்போது பாலிவுட்டிலும் தாக்கு பிடிக்க முடியாமல், கோலிவுட்டுக்கு வர முடியாமல் தடுமாறிப்போய் நிற்கிறார் அசின்.

கோடிகளில் புரளும் திரை நட்சத்திரங்கள்! முதலிடத்தில் ரஜினி, தனுஷ நல்ல படம் நல்ல கதை என்றால் சம்பளத்தை பெரிதாக கருத மாட்டார்.

இன்றைக்கு உடனடி கோடீசுவரனாக இருக்கும் ஒரே வழி, சினிமா நட்சத்திரமாகி விடுவதுதான். அதனால்தான், ரியல் எஸ்டேட் புள்ளிகளும் திடீர் பணக்காரர்களும் பணத்தை மடியில் கட்டிக் கொண்டு படம் எடுக்க வருகிறார்கள். அவர்களது வாரிசுகளை ஹீரோக்களாக அறிமுகப்படுத்துகிறார்கள். ஒரு படம் ஹிட்டாகிவிட்டால் அடுத்த நாளே அவர் கோடீஸ்வரன்தான். இதற்கு தற்போதைய உதாரணங்கள் பவர் ஸ்டாரும், விஜய் சேதுபதியும். பவர் பணம் கொடுத்து நடித்தார். பணம் போட்டு சொந்தப் படம் எடுத்தார். ஒரு பட வெற்றி அவரை இழந்த பணத்தை மீட்க வைத்து கோடீஸ்வரனாக்கி விட்டது. கூத்துப் பட்டறையில் கிளர்க்காக இருந்தவர் விஜய்சேதுபதி. குறும்படங்களில் நடித்துக் கொண்டிருந்தவர் வெறும் 20 ஆயிரம் சம்பளத்தில் "தென்மேற்கு பருவக்காற்று" படத்தில் நடித்தார். "பீட்சா"வின் வெற்றிக்கு பிறகு இப்போது அவர் கையில் பத்து படங்கள். "நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம்", "பீட்சா" படங்களுக்கு எட்டு லட்சம் சம்பளம் வாங்கியவர். இப்போது கேட்பது ஒண்ணேகால் கோடி.

முதலிடத்தில் ரஜினி

இந்த சம்பள விஷயத்தில் முதலிடத்தில் இருப்பது எப்போதும் போல சூப்பர் ஸ்டார் ரஜினிதான். "எந்திரன்" படத்துக்கு அவர் பெற்ற சம்பளம் 23 கோடி. "கோச்சடையான்" மகள் படம் என்பதால் சம்பளம் வாங்காமல் நடிக்கிறார். படத்தின் பட்ஜெட்டில் ரஜினியின் சம்பளமும் சேர்த்துக் கொள்ளப்படும். ரஜினி அடுத்து வெளி பேணர்களில் நடித்தால் 50 கோடி சம்பளம் தர பல நிறுவனங்கள் தயாராக இருக்கிறது. 

இரண்டாம் இடம் கமலுக்கு

கமலுக்கு இரண்டாவது இடம். கமலை பொறுத்தவரை இவ்வளவு தான் சம்பளம் என்று பிக்ஸ் பண்ணிக்கொள்ள மாட்டார். வெற்றிகளுக்கு ஏற்ப ஏற்றி இறக்கி வாங்குவார். "தசாவதாரம்" படத்துக்கு 10 கோடி சம்பளம் கொடுத்தார் ஆஸ்கார் பிலிம்ஸ் ரவிச்சந்திரன். அடுத்து அவர் நடித்த உன்னைபோல் ஒருவனும், விஸ்வரூபமும் சொந்தப் படங்கள். விஸ்வரூபம் வெற்றி பெற்று விட்டதால் தற்போது தன் சம்பளத்தை 25 கோடியாக பிக்ஸ் செய்திருக்கிறார்.

மூன்று - நான்கில் விஜய் - அஜித் 

10 கோடி வரை சம்பளம் பெற்றுக் கொண்டிருந்த விஜய் "துப்பாக்கி" ஹிட்டுக்கு பிறகு 15 கோடியாக உயர்த்தி விட்டார். "தலைவா"வுக்கும் "ஜில்லா"வுக்கும் உயர்த்திய சம்பளத்தைத்தான் வாங்குகிறார். 2014ல் தன் சம்பளத்தை 20 கோடியாக உயர்த்துவார். ஒருவேளை தலைவாவும், ஜில்லாவும் சரியாக போகவில்லை என்றால் மீண்டும் 10 கோடியிலிருந்து கணக்கை துவக்குவார்.

* கிட்டத்தட்ட விஜய் ரேன்ஞ்சுதான் அஜீத்தும். 8 முதல் 12 கோடி வரை ஆளுக்கு தக்கபடி பெற்றுக் கொள்வார் "பில்லா 2" வுக்கு அவர் வாங்கிய சம்பளம் 12 கோடி. ஏ.எம்.ரத்தினம் தயாரிப்பில் தற்போது நடித்து வரும் படத்துக்கு சம்பளம் கேட்கவில்லை. படத்தின் லாபத்தில் இத்தனை சதவிகிதம் கொடுங்கள் என்று பேசியிருப்பதாக தகவல். காரணம் தயாரிப்பாளர் இப்போது சம்பளம் கொடுக்கும் நிலையில் இல்லை. அடுத்து விஜயா புரொடக்ஷன் தயாரிக்கும் படத்துக்கு 15 கோடி சம்பளம் கேட்டிருக்கிறார்.

* நடிகர்களில் சம்பள விஷயத்தில் சூர்யாவும், கார்த்தியும் மிகவும் புத்திசாலிகள். தெலுங்கு பக்கம் தங்கள் படம் நன்றாக ஓடும் என்பதால் அதற்கும் சேர்த்து சம்பளம் பேசுவார்கள். அல்லது தெலுங்கு ரைட்சை தனியாக வாங்கிக் கொண்டு அதை பலகோடிக்கு விற்று விடுவார்கள். இது தவிர சூர்யா படத்துக்கு 7 முதல் 10 கோடி வரை வாங்குகிறார். கார்த்தி 5 முதல் 7 கோடி வாங்குகிறார். விளம்பர வருமானங்கள் தனி. ஆக.... இப்போது சினிமாவில் அதிகம் சம்பாதிப்பது சிவகுமார் பேமிலிதான்.

* சூர்யாவைப் போலவே தெலுங்கு ரைட்சையும் சேர்த்து வாங்கும் நடிகர் விஷால். 3 முதல் 5 கோடி சம்பளம் வாங்கும் விஷால் கூடவே தெலுங்கு ரைட்சை வாங்கி அதனையும் 3 கோடி வரைக்கும் விற்றுக் கொள்வார். ஆர்யாவின் சம்பளம் விஷால் அளவுதான். ஆனால் தெலுங்கு ரைட்ஸ் கேட்பதில்லை. "சேட்டை" படத்துக்கு நாலரை கோடி சம்பளமாக பெற்றுள்ளார்.

* விக்ரம் 10 கோடியை தாண்டித்தான் சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கிறார். சமீபத்திய அவரது படங்கள் சரியாக போகாததால் கொஞ்சம் குறைத்துக் கொள்ள முன்வந்திருக்கிறார். இருந்தாலும் ஷங்கரின் "ஐ" படத்துக்கு அவர் பெற்றுள்ள சம்பளம் 11 கோடி. சிம்புவின் சம்பளம் 5 முதல் 7 கோடி. கிட்டத்தட்ட தனுஷின் சம்பளமும் சிம்பு அளவுதான். ஆனால் தனுஷிடம் ஒரு நல்ல பழக்கம், நல்ல படம் நல்ல கதை என்றால் சம்பளத்தை பெரிதாக கருத மாட்டார். "மரியான்" படத்தில் குறைந்த சம்பளம் பெற்றே நடித்து வருகிறார். ஜீவாவின் சம்பளம் 5 கோடிக்கு உள்தான். சமீபத்திய படங்களின் தோல்வியால் 3 கோடிக்கு இறங்கி வந்திருக்கிறார். ஜெயம்ரவியின் சம்பளம் 3 முதல் 5 கோடி.

* காமெடியன்களில் அதிகம் சம்பளம் வாங்குவது இன்றைய நிலவரப்படி சந்தானம். ஒரு நாளைக்கு 5 முதல் 7 லட்சம். அதற்கு அடுத்த இடத்தில் இருப்பவர் சத்தியமா நம்புங்க பவர் ஸ்டார். ஒரு நாளைக்கு 3 முதல் 5 லட்சம் வாங்குகிறார். வடிவேலு முன்பு தினசரி சம்பளம் வாங்கினார். இப்போது ஒரு படத்துக்கு இத்தனை கோடி கொடுத்து விடுங்கள் என்கிறாராம். குணசித்திர நடிகர்களில் அதிக சம்பளம் வாங்குகிறவர் பிரகாஷ்ராஜ். காட்சிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப 50 லட்சத்திலிருந்து ஒரு கோடி வரை பெற்றுக் கொள்வார்.

நடிகைகளில் அனுஷ்கா-நயன்தாரா டாப்

நடிகைகளில் கோடியை தாண்டி சம்பளம் பெறுகிறவர்கள் நயன்தாரா, அனுஷ்கா, இலியானா ஆகியோர். இப்போது இந்த பட்டியலில் அமலாபாலும், காஜல் அகர்வாலும், சமந்தாவும், ஸ்ருதியும் இணைந்திருக்கிறார்கள். த்ரிஷா எப்போதும் ஒரே மாதிரியாக சம்பளம் பெறுவார். தமிழ் என்றால் 60 லட்சமும், தெலுங்கு என்றால் 75 லட்சமும் பெற்றுக் கொள்வார். அஞ்சலி 50 லட்சம் வரை சம்பளம் வாங்குகிறார்.

திருமண வைபவத்தில் ரகளை : மதிலேறி குதித்துத் தப்பித்த விஜய்

Written By Unknown on Saturday, March 16, 2013 | 6:05 PM


விஜய் நடத்தி வைத்த திருமண வைபவத்தின் போது கதவுகளை உடைத்துக்கொண்டு திடீரென மண்டபத்தினுள் நுழைந்த விஜய் ரசிகர்களால் அதிர்ச்சிக்குள்ளாகி மதிலேறி குதித்துத் தப்பித்துச் சென்றுள்ளார் விஜய்.

நடிகர் விஜய் நேற்று 11 ஜோடிகளுக்கு இலவசத் திருமணம் செய்து வைத்தார். இதன்போது ஏற்பட்ட கலாட்டாவிலே விஜய் மதிலேறிக்குதித்து தப்பித்துள்ளார். இச்சம்பவத்தின் போது மண்டபத்திலிருந்த பத்திரிகையாளர்கள், புரோகிதர்கள் மற்றும் பலர் கண்ணாடி சிதறியதில் ஏற்பட்ட காயத்துடன் அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.

இவ்வாறு ஏதாவது அசம்பாவிதங்கள் ஏற்படலாம் எனக் கருதியே பத்திரிகையாளர்கள் தவிர 700 பேருக்கு மாத்திரம் இத்திருமண வைபவத்திற்கு அழைப்பு வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. ஆனாலும் இத்திருமண வைபவம் குறித்து அறிந்து கொண்ட சுமார் 1500 வரையிலான விஜய் ரசிகர்கள் அங்கு குழுமியுள்ளனர். 

இதன் பின்னர் அங்கு வந்த விஜய் ரசிகர்களுக்கு கையசைத்துவிட்டு மண்டபத்தினுள் சென்று திருமணத்தை முடித்துவிட்டு பேசிக்கொண்டிருக்கும் போதே விஜயின் ரசிகர்கள், தலைவா எனக் கோசமிட்டுக்கொண்டு அதிரடியாக உள்நுழைந்து கதிரைகள், கதவுகள் மற்றும் கண்ணாடிகள் என உடைத்து கலாட்டா செய்துள்ளனர்.

ஆனால் இவ்வாறு அடிதடியாக விஜயை நெருங்க முயன்ற விஜய் ரசிகர்களுக்கு இறுதியில் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. ஏனெனில் பிரச்சினை ஆரம்பித்து சில நிமிடங்களிலேயே ஏனையோர்களுடன் சேர்ந்து விஜயும் மதிலேறிக் குதித்த தப்பித்துவிட்டார். பின்னர் விஜயை அங்கிருந்தவர்கள் பாதுகாப்பாக வழியனுப்பி வைத்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

தொனாலிராமனைத் தொடர்ந்து 'ஆப்ரிக்காவில் வடிவேலு' - இயக்குகிறார் கேஎஸ் ரவிக்குமார்

Written By Unknown on Friday, March 8, 2013 | 3:19 PM

முழு வீச்சில் மீண்டும் களமிறங்கிவிட்டார் வடிவேலு. அதுவும் காமெடியனாக அல்ல.. முழுமையான கதாநாயகனாக. சட்டமன்றத் தேர்தல் முடிந்து இரண்டு ஆண்டுகள் 'அரசியல்' அஞ்ஞாதவாசத்துக்குப் பிறகு, இப்போது தெனாலிராமன் என்ற படத்தில் நடிக்கிறார் வடிவேலு. இந்தப் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. யுவராஜ் இயக்குகிறார். இதற்குப் பிறகு கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் முழுமையான காமெடிப் படம் ஒன்றில் நடிக்கிறார் வடிவேலு. இந்தப் படத்துக்கு ஆப்ரிக்காவில் வடிவேலு என்று தலைப்பிட்டுள்ளனர்.

இதனை வடிவேலு சில தினங்களுக்கு முன்பு கூறியிருந்தார். இப்போது இயக்குநர் கேஎஸ் ரவிக்குமாரும் இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இதுகுறித்து சமீபத்தில் அவர் விகடனுக்கு அளித்துள்ள பேட்டியில், "வடிவேலுவுக்காக ஒரு கதை கேட்டேன். ரஜினி சார் பயோகிராஃபி எழுதின காயத்ரி சொன்ன கதை அது. கதை எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. வடிவேலுவும் கதையைக் கேட்டுட்டு வந்து என்னைப் பார்த்தார். 'பண்ணலாமாண்ணே'னு கேட்டாரு. சரின்னு சொல்லிட்டேன். இது பிரமாண்டமான படமா இருக்கும். இந்தப் படத்துக்கு சினிமாவை சினிமாவாப் பார்க்கிற தயாரிப்பாளர்கள் வேணும். வந்தா, பிரமாதமா பட்டையைக் கிளப்பலாம்," என்றார்.

 படம்: விகடன்

மீண்டும் விஜய்யுடன் டூயட் பாடுகிறார் அசின்!

Written By Unknown on Saturday, February 23, 2013 | 11:55 AM

ஜெயம்ரவி நடித்த எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி என்ற படத்தில் தமிழுக்கு வந்தவர் கேரளத்து கிளி அசின். அதன்பிறகு விஜய், சூர்யா, விக்ரம் என்று முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து முன்னணி நடிகையானார். அப்போது தமிழில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக கஜினி படத்தின் தமிழ்ப்பதிப்பில் நடித்த அசின், அப்படத்தின் இந்தி ரீமேக்கிலும் நடித்தார். அப்படம் அங்கு மாபெரும் வெற்றி பெற்றதால், அதன்பிறகு கோலிவுட்டை மறந்து விட்டு பாலிவுட்டில் முழுகவனம் செலுத்தினார். இப்போது குறிப்பிடத்தக்க இந்தி நடிகைகளில் அசினும் ஒருவராகி விட்டார்.
இந்தநிலையில், தமிழில் இருந்து சென்ற வாய்ப்புகளை தவிர்த்து வந்த அசின், இப்போது காவலன் படத்தையடுத்து மீண்டும் விஜய் நடிக்கும் படமொன்றில் நடிப்பதற்கு ஒப்புதல் தெரிவித்திருக்கிறார். அந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறதாம். ஆனால் முன்பு ரஜினிக்காக அந்நிறுவனத்திடம் கதை சொல்லியிருந்த கே.வி.ஆனந்தை விஜய் நடிக்கும் படத்தை இயக்க வைக்கவும் அந்நிறுவனம் முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. தலைவா படத்தை முடித்ததும் இப்படத்தின் வேலைகள் தொடங்குகிறதாம்.

தனுஷ்- ஸ்ருதியை மிஞ்சி நெருக்கமான கார்த்திக் மகனும் ராதா மகளும்

Written By Unknown on Sunday, January 20, 2013 | 2:20 PM

மணிரத்னம் இயக்கி வரும் படம் கடல். இதில் கார்திக் மகன் கவுதம், ராதா மகள் துளசி நடிக்கிறார்கள். இந்தப் படத்தில் ஒரு அதிரடியான முத்தக்காட்சி இடம் பெற்றுள்ளது. லிப் லாக் எனப்படும் ஆங்கில முத்தக் காட்சி இது. படத்திற்கு தெலுங்கு, மற்றும் தமிழில் டிரைய்லர் வெளியிடுள்ளார் மணிரத்னம். இதில் தெலுங்கு டிரைய்லரில் இந்த முத்தக் காட்சி இடம் பெற்றுள்ளது. ஆனால் படம் தொடர்பாக வெளியிட்டுள்ள போட்டோக்களில் இந்த முத்தக் காட்சியை வெளியிடவில்லை. "பத்து விநாடிகள் இடம்பெறும் இந்த முத்தக்காட்சி படத்தின் முக்கிய பகுதியாகும். இதற்கு ராதா முதலில் தயங்கினார் ஆனால் துளசி தைரியமாக நடித்ததார். ஹீரோ கவுதம் பல டேக்குகள் வாங்கி நடித்தார். 10 விநாடி முத்தக் காட்சி எடுக்க நான்கு மணி நேரம் ஆனது. துளசி ரொம்ப தயங்கியதால் முக்கியமான டெக்னீஷியன்கள் தவிர மற்றவர்கள் வெளியே அனுப்பப்பட்டு படம் பிடிக்கப்பட்டது" என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அலைகள் ஓய்வதில்லை படத்தில் கார்த்திக்-கும், ராதாவும் பூக்களுக்குள் ஆடையின்றி படுத்திருப்பது போன்ற ஒரு காட்சி படத்தில் வேண்டுமென்று கருதிய மணிரத்னம் இந்த முத்தக் காட்சியை வைத்ததாகவும் கூறுகிறார்கள். அந்தக் காட்சி போன்று இதுவும் பரபரப்பாக பேசப்படுமாம். 

விஜய்யுடன் இணையும் மோகன்லால்!

Written By Unknown on Friday, November 23, 2012 | 12:23 PM

விஜய்யும் மலையாள நடிகர் மோகன்லாலும் இணைந்து புதிய தமிழ் படமொன்றில் நடிக்க உள்ளனர்.
மோகன்லால் தமிழில் பாப்கார்ன் என்ற படத்திலும், இரு ஆண்டுகளுக்கு முன் வெளியான கமலின் ‘உன்னைப் போல் ஒருவன்' படத்திலும் நடித்துள்ளார்.
அடுத்து அவர் விஜய்யுடன் கைகோர்க்கிறார். விஜய், மோகன்லால் இணைந்து நடிப்பதற்கான கதை தயாராகியுள்ளதாகக் கூறப்படுகிறது. இருவரும் கதையை கேட்டு சம்மதம் தெரிவித்துவிட்டார்களாம்.
விஜய் தற்போது இயக்குநர் ஏ எல் விஜய் இயக்கும் புதுப்படத்தில் நடித்து வருகிறார். ஜோடியாக அமலாபால் நடிக்கிறார்.
இந்தப் படத்துக்குப் பிறகு மோகன்லால் - விஜய் படம் தொடங்கும் எனத் தெரிகிறது.

கேரளாவில் அத்தனை விஜய் பட வசூல் சாதனைகளையும் முறியடித்ததாம் துப்பாக்கி!

விஜய் நடித்த துப்பாக்கி படம் வசூலில் பெரிய சாதனையை நோக்கிப் போய்க் கொண்டிருப்பதாக தகவல்கள் வருகின்றன. கேரளாவில் இதுவரை வெளியான அத்தனை விஜய் படங்களின் வசூல் சாதனையையும் இந்தப் படத்தின் வசூல் தாண்டி விட்டதாகவும் கூறுகிறார்கள்.
பல சர்ச்சைகள், விதம் விதமான விமர்சனங்களுக்கு மத்தியில் து்பபாக்கி ஓடிக் கொண்டிருக்கிறது. விஜய்யின் பன்ச் வசனம் இல்லாத இன்னும் ஒரு படம் என்ற புதிய அந்தஸ்தும் இப்படத்திற்குக் கிடைத்துள்ளதால் படத்திற்கு கூட்டம் கட்டி ஏறிக் கொண்டபடிதான் உள்ளது. இந்த நிலையில் இப்படத்தின் பெரிய வெற்றி விஜய்யை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியுள்ளதாம்.
மேலும் இப்படம் கேரளாவில் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறதாம். அத்தோடு இல்லாமல் அங்கு இதுவரை வெளியான விஜய் படங்கள் வசூலித்ததை விட இந்தப் படம் அதிக அளவில் வசூலித்துள்ளதாம்.
அதேபோல ஆந்திராவிலும் இப்படம் பெரிய அளவில் ஓடிக் கொண்டிருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. இது விஜய் தரப்பை மேலும் குஷிப்படுத்தியுள்ளதாம்.
இந்த சந்தோஷத்துடன் விஜய் தனது மனைவி சங்கீதாவுடன் இணைந்து துப்பாக்கி படக் குழுவினருக்கு விருந்தளித்து அசத்தியுள்ளார். அந்த விருந்து பிரமாதம் என்று இயக்குநரான ஏ.ஆர்.முருகதாஸ் டிவிட்டரில் புகழாரம் சூட்டியுள்ளார்.

நித்யானந்தா செஞ்சதுல தப்பே இல்லையாம்... சொல்கிறார் வடிவேலுவிடம் ஆட்டய போட்ட சிங்கமுத்து

'நித்யானந்தா என்ன தப்பு பண்ணிட்டாரு? எல்லாரும் செய்றதைத்தான் அவரும் பண்றாரு. விஸ்வாமித்திரர்ல இருந்து செஞ்சது தானே. நித்யானந்தா மேல புகார்கள் வந்த பிறகு நானே பிடதியில போய்ப் பிரசங்கம் பண்ணினேன்..'
-இப்படி திருவாய் மலர்ந்திருப்பவர் சிங்கமுத்'தானந்தா!
ஒரு வார இதழுக்கு அளித்துள்ள பேட்டியில்தான் இப்படி அவர் கூறியுள்ளார்.
அந்தப் பேட்டியில், நீங்கதான் ஆன்மீகத்துல ஈடுபாடுள்ளவராச்சே, நித்யானந்தா செஞ்சது சரிதானா? என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
அதற்கு சிங்கமுத்து தந்துள்ள பதிலைப் பாருங்கள்:
''நித்யானந்தா என்ன தப்பு பண்ணிட்டாரு? எல்லாரும் செய்றதைத்தான் அவரும் பண்றாரு. விஸ்வாமித்திரர்ல இருந்து செஞ்சது தானே. நித்யானந்தா மேல புகார்கள் வந்த பிறகு நானே பிடதியில போய்ப் பிரசங்கம் பண்ணினேன்.
அங்கே பல ஆன்மிகவாதிகளின் வரலாற்றைச் சொல்லி 'நித்யானந்தா செஞ்சது தப்பே இல்லை'னு பேசினேன். இருந்தாலும் நித்யானந்தாவைத் தனியாப் பார்த்து,
'ரஞ்சிதா விவகாரம் உண்மையா?'னு கேட்டேன். பிடதி ஆசிரமத்துக்குள்ள சுத்திட்டு இருந்த ஆயிரக்கணக்கான இளம்பெண்களைக் காட்டி 'இவங்களைவிடவா ரஞ்சிதா அழகு? அவர் ஆஸ்துமா பிரச்னையால் இங்கு வந்தார். குணப்படுத்தினேன். அதில் இருந்து ஆசிரமத்துக்கு வந்து சேவை செய்ய ஆரம்பித்துவிட்டார்'னு சொன்னார்!'

நேரு ஸ்டேடியத்தில் விஸ்வரூபம் இசை வெளியீடு!


கமல்ஹாஸனின் விஸ்வரூபம் படத்தின் இசை வரும் டிசம்பர் 2-ம் தேதி சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடக்கிறது.
விஸ்வரூபம் படம் எப்போதோ முடிந்துவிட்டதாகச் சொல்கிறார்கள். ஆனால் படத்தின் இசை உரிமை மற்றும் படத்தின் விநியோக உரிமை பிரச்சினை தொடர்ந்ததால், படம் வெளியாவது இதோ அதோ என தள்ளிப் போய்க் கொண்டிருக்கிறது.
மேலும் இஸ்லாமிய அமைப்புகள் வேறு தொடர்ந்து இந்தப் படத்துக்கு மிரட்டல் விடுத்து வருகின்றன.
இந்த நிலையில் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு உரிமையை சோனி நிறுவனம் பெற்றுள்ளது. சங்கர் எஷான் லாய் படத்துக்கு இசை அமைத்துள்ளார்.
படத்தின் இசையை கடந்த நவம்பர் 7-ம் தேதி கமல் பிறந்த நாளன்று, மதுரை, கோவை மற்றும் சென்னையில் நடத்தத் திட்டமிட்டனர். ஆனால் பருவநிலை சரியில்லை என்று கூறி அப்போது அந்த நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டார் கமல்.
இப்போது ஆடியோ உரிமையை சோனி வாங்கிவிட்டதால், இசை வெளியீட்டுத் தேதியை உறுதிப்படுத்தியுள்ளார்.
வரும் டிசம்பர் 2-ம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இந்த நிகழ்ச்சி நடக்கிறது.

'கிரான்ட் பிராண்ட் ரஜினி': பிஸினஸ் மேனேஜ்மென்ட்டில் கலக்கும் இன்னுமொரு ரஜினி புத்தகம்!

ரஜினி எனும் பெயரை சத்தமின்றி பெரிய அளவில் வியாபாரமாக்கி வருகிறார்கள், வர்த்தக உலகில்.

இந்தியாவின் மிகப் பெரிய பிராண்ட் எதுவென்று மேனேஜ்மென்டில் உள்ள யாரைக் கேட்டாலும் கண்ணை மூடிக் கொண்டு ஒருவரது பெயரை உச்சரிப்பார்கள்... அது சூப்பர் ஸ்டார் அல்லது ரஜினி!
வர்த்தக உலகில் முக்கியமான மந்திரம்... பிராண்ட். அதை உருவாக்குவது அத்தனை சாதாரண விஷயமல்ல.
ஒரு நல்ல பிராண்ட் எப்போது மார்க்கெட்டில் அழியாப் புகழ், நம்பகத் தன்மையுடன் நிலைக்கும்?
நேர்மை, நீடித்த பயணம், நிலைத்தன்மை... இந்த மூன்றும் இருந்தால் மட்டுமே அது சாத்தியம்!
சினிமா உலகில் அப்படி ஒரு பிராண்ட் ஆக இன்றைக்குத் திகழ்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
இதனை விளக்கும் வகையில் கிரான்ட் பிராண்ட் ரஜினி எனும் பெயரில் ஒரு புதிய புத்தகம் வெளியாகியுள்ளது. இதனை எழுதியிருப்பவர்கள் பிசி பாலசுப்பிரமணியம் மற்றும் ராம் என் ராமகிருஷ்ணன் ஆகியோர். ரஜினி என்ற கலைஞர் எப்படி இந்தியாவின் இணையற்ற பிரான்ட் ஆகத் திகழ்கிறார் என்பதை அவரது சினிமா வாழ்க்கையை மையப்படுத்தி எழுதியிருக்கிறார்கள்.
இவர்களில் பிசி பாலசுப்பிரமணியம் ஏற்கெனவே ரஜினியின் பஞ்ச் டயலாக்குகளை மையப்படுத்தி பஞ்ச் தந்திரம் எனும் பெயரில் புத்தகம் வெளியிட்டு புகழ்பெற்றவர். மாட்ரிக்ஸ் பிசினஸ் சர்வீஸஸ் எனும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். மற்றொருவர் ராம் என் ராமகிருஷ்ணன் ஒரு ஆடிட்டர்.
பிலிப்கார்ட்டில் இந்தப் புத்தகம் தள்ளுபடி விலையில் ரூ 105-க்கு கிடைக்கிறது.

துப்பாக்கியை 2 வாட்டி பார்த்தேன், அருமை: முருகதாஸை பாராட்டிய ரஜினி

Written By Unknown on Sunday, November 18, 2012 | 7:55 AM


துப்பாக்கி படத்தைப் பார்த்த ரஜினிகாந்த் இயக்குனர் முருகதாஸை செல்போனில் தொடர்பு கொண்டு பாராட்டியுள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த துப்பாக்கி படத்தை ஒரு முறையல்ல இரண்டு முறை பார்த்துவிட்டு இயக்குனரை செல்போனில் தொடர்பு கொண்டு பாராட்டியுள்ளார்.
இது குறித்து முருகதாஸ் டுவிட்டரில் குஷியாக கூறியிருப்பதாவது,
நம்ம தலைவர் ரஜினி சர் போன் செய்தார். உங்கள் துப்பாக்கி படத்தை 2 தடவை பாத்தேன். அருமையாக உள்ளது. நல்ல படம் என்றார். சூப்பர் ஹேப்பி என்று குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையே இயக்குனர் வெங்கட் பிரபு, நடிகர் வைபவ் ரெட்டி உள்ளிட்ட பல பிரபலங்களும் படத்தைப் பார்த்துவிட்டு முருகதாஸை பாராட்டியுள்ளனர். தீபாவளிக்கு ரிலீஸான துப்பாக்கி இதுவரை உலக அளவில் ரூ.10 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ரஜினி காந்த் போன் செய்ததில் முருகதாஸ் ஏக குஷியாக உள்ளார்.

துப்பாக்கி- விஜய் ரசிகர்களுக்கு மட்டுமில்லை எல்லா ரசிகர்களுக்கும் தான்.

Written By Unknown on Tuesday, November 13, 2012 | 2:09 PM


துப்பாக்கி படம் ஒரு பக்கம் எதிர்பார்ப்புகளை எகிர வைத்திருந்தாலும் இன்னொரு பக்கம் ஒரு ஸ்கெப்டிசத்தையும் கூடவே உருவாக்கியிருந்தது. ஏ.ஆர். முருகதாஸ் 7ஆம் அறிவில் கதை நன்றாக இருந்தும் திரைக்கதையில் கோட்டைவிட்டது, அதன் பின் ஒரு அவரசரமாய் இந்த துப்பாக்கியை ஆரம்பித்தது இதெல்லாம் பார்த்தபோது ஒரு வித சந்தேகம் இருக்கத்தான் செய்தது.
 படம் வழக்கமான விஜய் பாடலுடன் ஆரம்பிக்கிறது. ராணுவத்தில் கேப்டனாய் இருக்கும் விஜய் 40 நாள் லீவில் வீட்டுக்கு வருகிறார். வீடு மும்பையில். ரயிலை விட்டு இறங்கிய விஜயை அப்படியே யூனிஃபார்மைக்கூட கழட்டாமல் காஜல் அகர்வாலை பெண் பார்க்கும் படலம். அமைதியாய் ஆரம்பித்து பின் இவர் பிடிக்கலை என காரணங்கள் சொல்வதும் பின் அந்த காரணங்களே காலியாக விஜய் ஜொள்ளு விட்டு அவர் பின்னால் போவதும், அவர் பிடிக்கலை என சொல்வதும் என கலகலப்பான காமெடி காதல் கதையாகி ரசிக்க வைக்கிறது.
ஆனால் மனதில் லேசாய் என்னடா என்னமோ ஆக்சன் படம்னு நினைச்சு வந்தோம் என தோனும்போதே பஸ்ஸில் பிக்பாக்கெட் காரனை செக் பண்ணும்போது குண்டு வெடிக்க, தப்பி ஓடிபவனை துரத்திப்பிடிக்கிறார் விஜய். அவன் தான் குண்டு வைத்தவன். போலிஸில் இருந்து அவன் தப்ப கதை சூடுபிடிக்கிறது. தான் ஆர்மி மட்டுமில்லை DIA எனப்படும் டிபென்ஸ் இன்டெலிஜென்ஸ் ஏஜென்சி அதிகாரியும் தான் என விஜய் அந்த குண்டுவெடிப்பில் சம்பந்தப்பட்டவர்களை வலை வீசிக் கண்டுபிடிப்பதும், அந்த தீவிரவாதிகளின் ஸ்லீப்பர் செல்களை, அவர்களின் 12 இடங்களில் குண்டு வெடிக்கும் பிளானை விஜய் எப்படி தன் ஆர்மி கூட்டாளிகளுடன் முறியடிக்கிறார் என்பதுடன் இடைவேளாயாகிறது.
அந்த எபிசோடே ஒரு பரபரப்பான ஆக்சன் ட்ராமா. அதன் உச்சகட்டமாய் விஜய் சொல்லும் அவங்களுக்கு மட்டும் தான் ஒரே நேரத்துல பல இடங்கள்ல அட்டாக் பண்ண தெரியுமா? நமக்கும் தெரியும்னு காட்டுவோம் என்ற படி சுடும்போது தியேட்டரில் கைதட்டல் அடங்க ரொம்ப நேரமாகிறது.
கடுப்பான தீவிரவாத கமாண்டர் விஜய்யிடம் உன்னைக் கண்டுபுடிச்சு கொல்லுவேன் என சேலஞ்ச் பண்ணுவதும், அவன் எப்படி விஜய் மற்றும் அவரது அணியினரைக் கண்டுபிடிக்கிறான்.. அதன் பின்விளைவுகள் என்ன என்பது படத்தின் மீதிப்பாதி.
சும்மா சொல்லக்கூடாது. முருகதாஸ் IS BACK WITH A BANG! ஒரு ஆக்சன் ஹீரோவாய் விஜய்யின் கேரியரில் மிக முக்கியமான படமாய் இந்த துப்பாக்கி அமையும். அந்த அளவுக்கு உழைப்பு திரைக்கதையிலும், மேக்கிங்கிலும்.
தன் அணியினரின் தங்கைகளை கடத்தியிருக்கும் கும்பலை விஜய் கண்டுபிடிக்கும் எபிசோட் ஆக்சன் சீக்வென்ஸை எப்படி எடுக்கவேண்டும் என்பதற்கு ஒரு பாடமாய் இருக்கும். அந்த அளவுக்கு மெருகூட்டப்பட்டு எடுக்கப்பட்டிருக்கிறது. அந்தக் காட்சியிலும் கைதட்டல் அடங்க வெகுநேரமாகியது. 
போக்கிரியில் விஜய்க்கு போலிஸ் ட்ரெஸ் கொஞ்சம் கூட பொருந்தாததால் இப்போது அவர் ராணுவ வீரர் என்ற போது திக்கென்றுதான் இருந்தது. படத்தில் அவ்வளவாய் யூனிபாஃர்ம் காட்சிகள் இல்லை என்பது நிம்மதி. ஆனால் விஜய் மிக இயல்பாய் பொருந்தியிருக்கிறார் இந்த ரோலில். ஆக்சனுக்கான உடல் வாகும், மிடுக்கும் என ஆச்சர்யப்படுத்துகிறார். 
இந்தப் படம் ஒரு முழுக்க முழுக்க சீரியஸ் ஆக்சனுக்கான கதை, களம் கொண்டது. ஆனால் அதற்குள் இயல்பாய் ஒரு கலகலப்பான காதல் கதையை முருகதாஸால் மட்டும்தான் இவ்வளவு சிறப்பாய் கலக்க முடியும். விஜய்கே உரித்தான டைமிங் காமெடிகளும் படம் முழுவதும் தெளிக்கப்பட்டிருப்பது எல்லாவித ஆடியன்ஸையும் உள்ளே இழுப்பதை உறுதிசெய்கிறது. 
ஒரு காட்சியில் விஜய்யின் பெட்ரூமில் ஒரு கஃபோர்டில் தீவிரவாதி கட்டப்பட்டிருக்க, இன்னொரு கஃபோர்டில் காதலி ரொமான்டிக் மூடில் ஒளிந்திருப்பார். இதுவே படத்தின் ஜானர் மிக்ஸிங்கு சிறந்த உதாரணம். 
பொதுவாய் விஜய் படத்தில் விஜயை கலாய்க்க மாட்டார்கள் அல்லது அனுமதி கிடைக்காது. ஆனால் இதில் ஒரு காட்சியில் சத்யன் காஜலிடம் கேட்பார், விஜயைக் காட்டி, ‘இவனத்தான் நீ கட்டிக்கப்போறியா? பெட்ரோமாக்ஸ் லைட்டேதான் வேணுமா என?’
இன்னொரு காட்சியில் விஜய்யும் காஜலும், இன்டெர்நெட்டில் விபச்சாரம் செய்யும் ஒரு பெண்ணை விஜய்க்கு கல்யாணம் செய்ய முயன்றது தடைபட்டதை நினைத்து விழுந்து விழுந்து சிரித்துக்கொண்டிருப்பார்கள். காஜல் விஜய்யிடம் நீ ஏன் சிரிச்சே எனக் கேட்க.. ‘அந்த மாட்டர்-டேந்து நான் எஸ்கேப் ஆயிட்டேன்ல அத நினைச்சு சந்தோத்துல சிரிச்சேன். நீ ஏன் சிரிச்சே என கேட்ட, காஜல் ‘அந்த மாட்டரே உன்ன வேண்டாம்னு சொல்லிருச்சே அத நினைச்சு சிரிச்சேன்’ என்பார். ஆச்சர்யமாய் ரசிக்க முடிகிறது. 
ஸ்லீப்பர் செல்களை ஏதோ ஒரே ஒரு தலைவனை மட்டுமே நம்பி இருப்பதாய் காட்டியிருப்பது குறை. ஆனால் பெரிதாய் உறுத்தவில்லை.
கூகுல் பாடலில் காஜல் அகர்வாலின் அழகுக்கு நட்சத்திர நடிகர்களும் ரசிகர்களாகிவிடுவார்கள். 
பட முடிவில் வரும் ராணுவ வீரர்களின் வாழ்க்கையைப் பற்றிய பாடல் முருகதாஸ் மிலிட்டரி ஆட்களிக்கு வைக்கும் சல்யூட்.
இந்தியில் கஜினி வெற்றிக்குப் பின் ஏன் இவர் இன்னும் இந்திப்படம் பண்ணவில்லை என்ற கேள்விக்கு பதில் இந்தப் படம் தான். ஆம் அடுத்து இந்தப் துப்பாக்கி இந்திக்குப் போகும் போது அது இந்திக் கஜினியின் ரெகார்ட்களையும் உடைக்கும். 
துப்பாக்கி – விஜய் ரசிகர்களுக்கு மட்டுமில்லை. எல்லா ஆக்சன் பட ரசிகர்களுக்கும் தான்.

தேமுதிக எம்.எல்.ஏ படத்தில் வடிவேலு!..வாய்ப்பை தட்டிப் பறித்த சந்தானம்?


விஜயகாந்த்துடன் மோதலில் ஈடுபட்டு அதிமுகவுக்கு ஆதரவாக மாறியுள்ள தேமுதிக எம்.எல்.ஏ. மைக்கேல் ராயப்பன் தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்கக் கிடைத்த வாய்ப்பை வடிவேலுவிடமிருந்து தட்டிப் பறித்து விட்டாராம் சந்தானம். இதுதான் தமிழ்த் திரையுலகில் இப்போது பரபரப்பான செய்தியாக மாறியுள்ளது.
தமிழ்த் திரையுலகில் கவுண்டமணிக்குப் பிறகு தனக்கென தனி பாணி காமெடியில் கலக்கி வருபவர் வடிவேலு மட்டுமே. இவரும் விவேக்கும் இணைந்தும், தனித்தும் காமெடியில் பின்னிப் பெடலெடுத்தனர். இருவருக்கும் இணையான ஒரு காமெடியன் இதுவரை வரவில்லை.
இடையில் வந்த சந்தானம் கூட கவுண்டமணியை அப்படியே பச்சையாக காப்பியடித்துதான் நடித்துக் கொண்டிருக்கிறார். அவரது ஸ்டைல் என்று எதையுமே சொல்ல முடியவில்லை என்பதே திரையுலகினரின் கருத்தும் கூட.
வடிவேலுவுக்கு அரசியல் ரூபத்தில் ஏழரை நாட்டுச் சனி பிடித்து அவர் ஓரம் கட்டப்படவே அவருக்கு வர வேண்டிய வாய்ப்புகள் எல்லாம் சந்தானத்தைத் தேடி போக ஆரம்பித்தன. இளம் ஹீரோக்களையும் அவர் நைஸ் பண்ணி வைத்திருப்பதால் அவர்களும் வேறு வழியில்லாமல் சந்தானத்தை நாட வேண்டிய நிலை.
இந்த நிலையில் தற்போது மீண்டும் வடிவேலு முழு வீச்சில் நடிக்கப் போகிறார். சில படங்களை அவர் பேசிக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில்தான் வடிவேலு படத்தை சந்தானம் தட்டிப் பறித்து விட்டதாக செய்தி வெளியாகியுள்ளது.
தேமுதிக எம்.எல்.ஏவான மைக்கேல் ராயப்பன் தயாரிக்க, பூபதி பாண்டியன் இயக்கும் படம் பட்டத்து யானை. இந்தப் படத்தில் விஷால் ஹீரோவாக நடிக்கிறார். அர்ஜூன் மகள் ஐஸ்வர்யா ஹீரோயினாக நடித்து அறிமுகமாகிறார். இதில் வடிவேலுவை காமெடிக்குப் போட முடிவானது. வடிவேலுவும் படத்தை ஏற்றுக் கொண்டார்.
இந்த நிலையில்தான் விஷால் மூலமாக காமெடி பார்ட்டை கைப்பற்றி விட்டாராம் சந்தானம்.
வடிவேலுவும் விஷாலும் இணைந்து திமிரு படத்தில் நடித்துள்ளனர். அதேபோல விஷாலும், சந்தானமும் இணைந்து சில படங்களில் நடித்துள்ளனர். ஏன் தில்லாலங்கடி படத்தில் வடிவேலுவுடன், சந்தானமும் இணைந்து நடித்திருந்தார். இந்த நிலையில் விஷால் படத்தில் வடிவேலு நடிக்க கிடைத்த வாய்ப்பை, சந்தானம் தட்டிப் பறித்திருப்பது திரையுலகில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளதாம்.

'துப்பாக்கி' மூலம் மறுபடியும் 'பன்ச்' பாதையில் விஜய்!

Written By Unknown on Monday, November 12, 2012 | 11:48 AM

கொஞ்ச படங்களுக்கு முன்பு வரை அடுத்தடுத்து பன்ச் வசனங்கள், பட்டையைக் கிளப்பும் சண்டைகள், லாஜிக்கே இல்லாத காட்சிகள் என விஜய் படங்கள் சரமாரியாக வெளியாகின. ஆனால் தொடர் தோல்விகளால் இதற்கு முற்றுப்புள்ளி வைத்தார் விஜய். ஆனால் தற்போது துப்பாக்கி மூலம் மீண்டும் 'பன்ச்' டயலாக்குகளை கையில் எடுத்துள்ளாராம் விஜய். டிரெய்லரில் இடம் பெற்ற அவர் பேசியுள்ள ஐ அம் வெயிட்டிங் என்ற வசனம் ஏற்கனவே ஹிட் ஆகி விட்டது.வசனங்களும் ஹிட் ஆனதால் அன்று முதல் பன்ச் டயலாக்குகளை படு பத்திரமாக பாலோ பண்ண ஆரம்பித்தார் விஜய்.

மாஸ் ஹீரோவாக மாற்றிய பகவதி

ஆரம்பத்தில் சொதப்பலாக நடித்து வந்த விஜய், பின்னர் தொடர்ந்து ஹிட்களைக் கொடுக்க ஆரம்பித்தார். 2000மாவது ஆண்டில் பலமான மாஸ் ஹீரோவாக மாறத் தொடங்கினார். அதற்குப் பிள்ளையார் சுழி போட்ட படம் பகவதி.



முதல் 'குத்து' திருமலையில்

பகவதி அவருக்கு மிகப் பெரிய ஹிட் படமாக இருந்தாலும் முதல் முறையாக விஜய்யிடம் பன்ச் டயலாக்குகளை எழுதி கையில் நீட்டி வாய் மூலம் பேச வைத்த படம் திருமலைதான். எக்குத்தப்பாக இந்தப் படமும், அந்தப் படத்தில் அவர் பேசிய வசனங்களும் ஹிட் ஆனதால அன்று முதல் பன்ச் டயலாக்குகளை படு பத்திரமாக பாலோ பண்ண ஆரம்பித்தார் விஜய
 

வாழ்க்கை ஒரு வட்டம்டா...

வாழ்க்கை ஒரு வட்டம்டா. அதுல ஜெயிக்கிறவன் தோப்பான், தோக்கிறவன் ஜெயிப்பான்... திருமலையில் இடம் பெற்ற இந்த வசனம் விஜய் ரசிகர்களிடையே பெரும் ஹிட் ஆனது. மற்றவர்களிடமும் கூட இந்த வசனம் வேகமாக ரீச் ஆனது.

ஆல் ஏரியாவிலேயே ஐயா கில்லி

அதேபோல கில்லி படத்தில் வந்த வசனங்களும் ஹிட் ஆகின. அந்த ஏரியா, இந்த ஏரியா இல்லை, ஆல் ஏரியாவிலேயும் ஐயா கில்லி.. கில்லிடா என்று அவர் பேசியபோது தியேட்டரில் ரசிகர்களின் கூக்குரல் வானத்தைப் பிளந்தது.

ஒரு வாட்டி முடிவு பண்ணிட்டேன்னா...

இதேபோல மெகா ஹிட் அடைந்த இன்னொரு பன்ச் வசனம் போக்கிரியில் இடம் பெற்றது. ஒருவாட்டி முடிவு பண்ணிட்டேன்னா, என் பேச்சை நானே கேட்க மாட்டேன்... போக்கிரி படத்தை மிகப் பெரிய ஹிட்டாக்க உதவியது இந்த வசனம்.

'கன்'னும் எனக்குத்தான், பொண்ணும் எனக்குத்தான்

போக்கிரியில் நிறைய பன்ச் இடம் பெற்றது. அதில், இன்னொரு ஹிட் வசனம்.. கன்னும் எனக்குத்தான், பொண்ணும் எனக்குத்தான்.

பக்கத்து வீட்டுப் பையன்.. எதுத்த வீட்டு மாமா

அதே போக்கிரியில் இடம் பெற்ற இன்னொரு ஹாஸ்யமான வசனம் இது. பிரகாஷ் ராஜ், விஜய்யைப் பார்த்து, ஒன்னப் பார்த்தா பக்கத்து வீட்டுப் பையன் மாதிரி இருக்கு என்பார். அதற்கு முகத்தில் சலனமே இல்லாமல், உன்னைப் பார்த்தா கூடத்தான் எதுத்த வீட்டு மாமா மாதிரி இருக்கு என்பார்.

நம்ம பேச்சு மட்டும்தான் சைலன்ட்டா இருக்கும்...














குருவி படத்தில் வந்த பன்ச் வசனங்களும் அவரது ரசிகர்களால் வெகுவாக வரவேற்கப்பட்டது, படம் போண்டியானாலும் கூட. நம்ம பேச்சு மட்டும்தான் சைலன்ட்டா இருக்கும். ஆனா அடி சரவெடி என்று அவர் வசனம் பேசியபோது தியேட்டரில் ரசிகர்கள் டவுசர் கிழிந்து போகும் அளவுக்குத் துள்ளிக குதித்துக் குதூகலித்தனர்.

கடல்னா சுறா.. காத்துன்னா சூறாவளி..

குருவியில் இடம் பெற்ற இன்னொரு ஹிட் வசனம்... காடுன்னா நான் சிங்கம், கடல்னா சுறா.. காத்துன்னா சூறாவளி.

சாமி முன்னாடி மட்டும்தான் சாந்தமா பேசுவேன்...

இதேபோல இன்னொரு படமான வேட்டைக்காரன் விஜய்க்கு வெற்றிப்படமாக அமையாவிட்டாலும் கூட அதில் இடம் பெற்ற பன்ச் வசனங்களை கண்டிப்பாக ஹிட் வரிசையில் சேர்த்தே ஆக வேண்டும். சாமி முன்னாடி மட்டும்தான் சாந்தமா பேசுவேன். சாக்கடை முன்னாடி இல்லை... என்ற வசனம் ஹிட் ஆனது.

மாமன் மச்சான் கிட்ட விளையாடு

வில்லு படத்தில் வந்த மாமன் மச்சான் கிட்ட விளையாடு, மாப்பிள்ளை கிட்ட விளையாடாத என்ற வசனமும் ஹிட் ஆனது.

மன்னர்னு பார்க்க மாட்டேன்.. மண்ணாங்கட்டின்னு பார்க்க மாட்டேன்

சுறா படத்திலும் ஏகப்பட்ட பன்ச்கள்.. காதுகள் பஞ்சர் ஆகும் அளவுக்கு. அதில், அவர் பேசிய மோதுறதுன்னா மன்னர்னு பார்க்க மாட்டேன், மண்ணாங்கட்டின்னு பார்க்க மாட்டேன் என்ற வசனம் ஹிட் ஆனது.
 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. R News - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger