மகனின் நண்பனான 26 வயது இளைஞனுடன் தகாத உறவு வைத்திருத்த பெண்ணும், இளைஞனும் தற்கொலை. - R News
Headlines News :
Home » » மகனின் நண்பனான 26 வயது இளைஞனுடன் தகாத உறவு வைத்திருத்த பெண்ணும், இளைஞனும் தற்கொலை.

மகனின் நண்பனான 26 வயது இளைஞனுடன் தகாத உறவு வைத்திருத்த பெண்ணும், இளைஞனும் தற்கொலை.

Written By Unknown on Thursday, March 8, 2012 | 10:41 AM

நண்பரின் 43 வயது தாயாருடன் தகாத உறவு வைத்திருந்த 26 வயது இளைஞர், தனது உறவுக்கு திருமணம் மூ்லம் தடை வந்ததால் அந்தப் பெண்மணியுடன் சேர்ந்து தற்கொலை செய்துகொண்டார்.

சமூகம் எந்த அளவுக்கு சீர்கெட்டுக் கொண்டிருக்கிறது என்பதற்கு இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சி உதாரணமாக அமைந்துள்ளது. தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டி பட்டியில்தான் இந்த கொடுமையான சம்பவம் நடந்துள்ளது.

அந்த ஊரைச் சேர்ந்தவர் மாது என்கிற பாரத். 26 வயதாகி விட்ட இவர் இப்போதுதான் கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.ஏ. படித்து வந்தார்.

இவருக்கும் ஒரு பெண்ணுக்கும் திருமணம் நிச்சயமானது. மார்ச் 4ம் தேதி திருமணம் நடப்பதாக இருந்தது. ஆனால் அதற்கு முன்பே மாது வீட்டை விட்டு ஓடி விட்டார். இதனால் திருமணம் நின்று போனது.

இந்த நிலையில் மாதுவுடன் பிளஸ்டூவில் ஒன்றாகப் படித்த நவீன்குமார், தனது தந்தை செல்வராஜுடன் கோவையில் தங்கி வேலை பார்த்து வந்தார். நவீன்குமாரின் தாயார் ஜோதி பாப்பிரெட்டிபட்டியில் தனியாக தங்கியிருந்தார்.

நேற்று அதிகாலையில் நவீன்குமாரும், செல்வராஜும் ஊருக்கு வந்தனர். வீட்டுக் கதவைத் தட்டியபோது அது திறக்கவில்லை. நீண்ட நேரம் கதவைத் தட்டியும் திறக்காததால் சந்தேகமடைந்த அவர்கள் கதவை உடைத்து உள்ளே போய் பார்த்தனர். அப்போது ஜோதியும், அவருக்கு அருகே மாதுவும் சேலையில் தூக்குப் போட்டு பிணமாக தொங்கியதைப் பார்த்து பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.

தகவல் அறிந்து போலீஸார் விரைந்து வந்தனர். பிணங்களைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர். விசாரணையில் அதிர்ச்சிகரமான தகவல்கள் கிடைத்தன.

தனது வீட்டில் தனியாக வசித்து வந்த ஜோதியை, அவ்வப்போது வந்து பார்த்துள்ளார் மாது. நண்பரின் தாயார் என்ற வகையில் ஆரம்பத்தில் இவர்களது சந்திப்புகள் இருந்துள்ளன. பின்னர் இது தவறான பாதைக்குத் திரும்பி விட்டது. இருவரும் அடிக்கடி கள்ள நோக்கத்துடன் சந்திக்க ஆரம்பித்துள்ளனர்.

இந்த தகாத உறவு குறித்து மாதுவின் வீட்டுக்குத் தெரிய வந்து அதிர்ந்து போயினர். இதனால்தான் அவருக்கு வேகம் வேகமாக பெண் பார்த்து திருமணத்தை நிச்சயித்தனர். ஆனால் ஜோதியை விட்டுப் பிரிய மனமில்லாத மாது, வீட்டை விட்டு வெளியேறி ஜோதி வீட்டுக்கு வந்துள்ளார். அங்கு இருவரும் தங்களது முடிவை நாடி விட்டனர்.

பொருந்தாத உறவும், தகாத உறவும் கடைசியில் இப்படித்தான் ஆகும் என்பதற்கு மாது, ஜோதி இன்னும் ஒரு உதாரணமாகியுள்ளனர்.
Share this article :

0 comments:

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. R News - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger