உத்தரப் பிரதேசத்தில் பத்திரிகையாளர் மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிலிபிட் மாவட்டம் ஹைதர் கான் என்ற பத்திரிகையாளர் நான்கு பேர் கொண்ட கும்பல் கடுமையாக தாக்கியது. பின்னர் தங்களது காரின் பின்புறம் ஹைதர் கானை கயிறால் கட்டி, சுமார் நூறு மீட்டர் தூரம் வரை இழுத்துச் சென்றுள்ளனர்.
இதில் படுகாயமடைந்த பத்திரிகையாளர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பாக அவர் எழுதி வந்ததால், ஆத்திரமடைந்த கும்பல் இந்த தாக்குதலில் ஈடுபட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக, நான்கு பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜே.கே.ஷாகி தெரிவித்தார்.
கடந்த வாரம் பேஸ்புக்கில் அமைச்சரை விமர்சித்த பத்திரிகையாளர் ஜிதேந்தரா சிங் எரித்துக் கொல்லப்பட்ட நிலையில், மீண்டும் ஒரு தாக்குதல் சம்பவம் நடைபெற்றுள்ளது.