R News: இந்திய செய்திகள்
Headlines News :
Powered by Blogger.

Latest Post

Showing posts with label இந்திய செய்திகள். Show all posts
Showing posts with label இந்திய செய்திகள். Show all posts

உத்தரப் பிரதேசத்தில் பத்திரிகையாளர் மீது மீண்டும் தாக்குதல் .

Written By Unknown on Tuesday, June 16, 2015 | 3:24 PM

உத்தரப் பிரதேசத்தில் பத்திரிகையாளர் மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிலிபிட் மாவட்டம் ஹைதர் கான் என்ற பத்திரிகையாளர் நான்கு பேர் கொண்ட கும்பல் கடுமையாக தாக்கியது. பின்னர் தங்களது காரின் பின்புறம் ஹைதர் கானை கயிறால் கட்டி, சுமார் நூறு மீட்டர் தூரம் வரை இழுத்துச் சென்றுள்ளனர்.
இதில் படுகாயமடைந்த பத்திரிகையாளர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பாக அவர் எழுதி வந்ததால், ஆத்திரமடைந்த கும்பல் இந்த தாக்குதலில் ஈடுபட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக, நான்கு பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜே.கே.ஷாகி தெரிவித்தார்.
கடந்த வாரம் பேஸ்புக்கில் அமைச்சரை விமர்சித்த பத்திரிகையாளர் ஜிதேந்தரா சிங் எரித்துக் கொல்லப்பட்ட நிலையில், மீண்டும் ஒரு தாக்குதல் சம்பவம் நடைபெற்றுள்ளது.

8 நிறுவனங்களின் நூடுல்ஸ்களில் அதிக இரசாயன கலப்பு

டெல்லியில் நடந்த ஆய்வில் 12 வகை நூடுல்சில் 8 நிறுவனங்களின் நூடுல்ஸ்களில் அதிக இரசாயன கலப்பு இருப்பதும் மற்றும் அவை தரமற்று இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து இந்த உணவுப் பொருட்களை தடை செய்வது பற்றி டெல்லி மாநில அரசு ஆலோசித்து வருகிறது.


இந்தியாவில் நெஸ்லே நிறுவனம் தயாரித்த மெகி நூடுல்ஸ் உணவுப் பொருளில் அதிக இரசாயன கலப்பு இருப்பதாக சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து மெகி நூடுல்ஸ் விற்பனைக்கு இந்தியா முழுவதும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே இந்தியாவில் பாக்கெட்டுக்களில் அடைத்து விற்பனை செய்யப்படும் அனைத்து வகை உணவுப் பொருட்களையும் பரிசோதிக்க மத்திய அரசு உத்தரவிட்டது. அதன் பேரில் நாடெங்கும் உணவுப் பொருட்கள் சேகரிக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டன.
நூடுல்ஸ் வகைகளில் 12 நிறுவனங்களின் நூடுல்ஸ் பாக்கெட்டுகள் சோதிக்கப்பட்டன. டாப்ராமன், சிங்ஸ், டாப்ஸ் ஆகிய நூடுல்ஸ்களும் சோதிக்கப்பட்டன.
இந்த நிலையில் பாக்கெட் உணவு வகைகளில் சிலவற்றை மத்திய அரசு தடை செய்துள்ளது. இதற்கான பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
நெஸ்லே நிறுவனம் தனது மேகி நூடுல்சை மீண்டும் சோதித்தது. இந்த சோதனையில் மெகி நூடுல்ஸ் தரமானதாக உள்ளதாக கூறியுள்ளது. ஆனால், இதை மத்திய அரசு ஏற்குமா என்று தெரியவில்லை.
இந்த நிலையில் நெஸ்லே நிறுவனம், தங்கள் நிறுவனத்தின் பெயரில் போலியாக மெகி நூடுல்ஸ் பாக்கெட்டுகள் தயாரிக்கப்பட்டிருப்பதாக புதிய குற்றச்சாட்டு ஒன்றை வெளியிட்டுள்ளது.
 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. R News - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger