கோச்சடையான்' படத்தை வெளியிட 6.84 கோடி ரூபாய் கடன் கொடுத்த நிறுவனம் பணம் திரும்ப கிடைக்காததால் நடிகர் ரஜினி மனைவி லதா மீது பெங்களூர் போலீசில் புகார் அளித்துள்ளது. அதன்படி மோசடி ஏமாற்றுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.ரஜினி நடித்த 'கோச்சடையான்' படத்தை தயாரித்த 'மீடியா ஒன் குளோபல் என்டர்டெய்ன்மென்ட்' நிறுவனம் முதலில் படத்தை வெளியிட முடியாமல் நிதி நெருக்கடியில் சிக்கியது.இதனால் படத்தை முடித்து திரையிட 'ஆட் பியூரோ' நிறுவனத்திடம் 6.84 கோடி ரூபாய் கடன் கேட்டது. இதற்கு ரஜினி காந்தின் மனைவி லதா பெங்களூரில் உள்ள தன்னுடைய சில சொத்துகளை உத்தரவாதமாக காண்பித்து பணம் பெற்றதாக கூறப்படுகிறது.இதற்கான ஒப்பந்தத்தின் போது 'ஆட் பியூரோ' நிறுவனத்துக்கு 'கோச்சடையான்' திரைப்பட உரிமையை வழங்குவதாக மீடியா ஒன் குளோபல் நிறுவன இயக்குனர் மனோகர் ஒப்புக் கொண்டுள்ளார்.
மனுவை விசாரித்த நீதிமன்றம் லதா மீது எப்.ஐ.ஆர்.இபதிவு செய்யுமாறு பெங்களூரு போலீசாருக்கு உத்தரவிட்டது. இதையடுத்து போலீசார் லதா ரஜினி மீது மோசடி ஏமாற்றுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
பட உரிமை வழங்கவில்லைஆனால் 'தங்களிடம் வாங்கிய பணத்தை லதா கொடுக்கவில்லை. ஒப்பந்தப்படி திரைப்பட உரிமையை கொடுக்காமல் 'ஈராஸ் சர்வதேசம்' நிறுவனத்துக்கு தமிழகம் முழுவதும் வெளியிடும் உரிமையை அளித்தனர். லதா உத்தரவாதம் அளித்திருந்த சொத்துகள் பற்றி விசாரித்த போதும் சரியான தகவல்கள் கிடைக்கவில்லை' என ஆட் பியூரோ நிறுவனம் தெரிவித்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த ஆட் பியூரோ நிறுவனம் பணத்தை திருப்பி தருமாறு லதாவிடம் கேட்டது.
இதனால் அதிர்ச்சியடைந்த ஆட் பியூரோ நிறுவனம் பணத்தை திருப்பி தருமாறு லதாவிடம் கேட்டது.
பணத்தை குறிப்பிட்ட தேதிக்குள் கொடுப்பதாக அந்நிறுவனத்துக்கு லதாவும் உறுதியளித்தார்.நீதிமன்றத்தில் வழக்கானதனால் அவர் கூறியபடி பணம் கொடுக்காததால் ஆட் பியூரோ நிறுவனம் கடந்த 6ம் திகதி பெங்களூர் மேலதிக மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
மனுவை விசாரித்த நீதிமன்றம் லதா மீது எப்.ஐ.ஆர்.இபதிவு செய்யுமாறு பெங்களூரு போலீசாருக்கு உத்தரவிட்டது. இதையடுத்து போலீசார் லதா ரஜினி மீது மோசடி ஏமாற்றுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.