அமெரிக்காவுடன் இணைந்து போர் ஒத்திகையில் ஈடுபடுவதைக் கைவிட்டால் தென் கொரியாவுடன் அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்குத் தயாராக இருப்பதாக வட கொரியா திங்கட்கிழமை தெரிவித்துள்ளது.
வட கொரிய – தென் கொரியத் தலைவர்கள் சந்தித்து இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை அதிகரிக்கும் வகையிலான கூட்டுத் தீர்மானம் இயற்றப்பட்டதன் 15-ஆவது ஆண்டு நிறைவையொட்டி வட கொரியா இவ்வாறு தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இது குறித்து வட கொரிய அரசுக்குச் சொந்தமான செய்தி நிறுவனம் கூறியதாவது.பரஸ்பர நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையிலும் நல்லிணக்கத்தை மேம்படுத்தும் வகையிலும் சூழல் அமைவது அவசியம். அத்தகைய சூழல் அமைந்தால் அமைதிப் பேச்சுவார்த்தையைத் தவிர்ப்பதில் எந்த அர்த்தமுமில்லை என வடகொரியாஅரசின் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
வட கொரிய – தென் கொரியத் தலைவர்கள் சந்தித்து இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை அதிகரிக்கும் வகையிலான கூட்டுத் தீர்மானம் இயற்றப்பட்டதன் 15-ஆவது ஆண்டு நிறைவையொட்டி வட கொரியா இவ்வாறு தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இது குறித்து வட கொரிய அரசுக்குச் சொந்தமான செய்தி நிறுவனம் கூறியதாவது.பரஸ்பர நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையிலும் நல்லிணக்கத்தை மேம்படுத்தும் வகையிலும் சூழல் அமைவது அவசியம். அத்தகைய சூழல் அமைந்தால் அமைதிப் பேச்சுவார்த்தையைத் தவிர்ப்பதில் எந்த அர்த்தமுமில்லை என வடகொரியாஅரசின் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.