R News: தகாதசெயல்
Headlines News :
Powered by Blogger.

Latest Post

Showing posts with label தகாதசெயல். Show all posts
Showing posts with label தகாதசெயல். Show all posts

தாய் பாசத்தைவிட வலிமையானது கள்ளக்காதல்..வவுனியாவில் பெற்ற குழந்தையை கிடங்கு வெட்டிப் புதைத்த தாய்

Written By Unknown on Saturday, July 13, 2013 | 6:15 PM

வவுனியா கிடாச்சூரி அம்மிவைத்தானில் பிறந்து ஒரேநாளான பிள்ளையை கிடங்குவெட்டிப் புதைத்த தாய் தலைமறைவாகியுள்ளதாக வவுனியா மாவட்ட சிறுவர் உரிமை மேம்பாட்டு அதிகாரி ஜெ,ஜெயக்கெனடி தெரிவித்தார். இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்; அம்மிவைத்தானில் வசித்து வந்த பெண்ணொருவர் கணவன் வெளிநாட்டில்வாழ்ந்து வரும் நிலையில் வெள்ளிக்கிழமை குழந்தையொன்றைப் பிரசவித்து அதனை உடனேயே கிடங்கு வெட்டிப்புதைத்துள்ளார். இது குறித்து அயலவர்கள் பொலிஸாருக்கும் எனக்கும் அறிவித்ததன் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். இந்தத் தாய்க்கு 7வயது மகன்உள்ள நிலையில் தற்போது இத்தாய் தலை மறைவாகியுள்ளார். இந்நிலையில் பொலிஸார் குழந்தை புதைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் இடத்தில் குழந்தையின் சடலத்தை மீட்கும் பணியை மேற்கொண்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளையும் முன்னெடுள்ளனர் எனத் தெரிவித்தார்.

13 வயது மாணவி கர்ப்பம் காரணமான இளைஞன் கைது

Written By Unknown on Friday, July 5, 2013 | 1:58 PM

கொழும்பு மோதரை பகுதியைச் சேர்ந்த 13 வயது பாடசாலை மாணவியை ஏழு மாத கர்பிணியாக்கிய 19 வயதுடைய இளைஞன் ஒருவரை கடந்த 2 ஆம் திகதி மோதரை பொலிஸார் கைது செய்துள்ளதாக நிலையப் பெறுப்பதிகாரி பிரதான இன்ஸ்பெக்ரர் நிலுபுல் தெரிவித்தார்.
சந்தேக நபரும் இந்த மாணவியும் காதலர்கள் எனவும் மாணவி வீட்டில் தனிமையில் இருந்த வேளø சந்தேக நபர் மாணவியை வல்லுறவுக்குட்படுத்தி கர்ப்பமாக்கியதாக நிலையக் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி சம்பத் பத்மலாத் தெரிவித்தார்.
மாணவியான தன் மகள் கர்ப்பமடைந்ததை அறிந்த பெற்றோர் பிரதேச வாசிகள் இதனை அறிந்து விடுவார்கள் எனப் பயந்து வேறு பகுதியில் விடொன்றில் மகளை வைத்து பாதுகாத்ததாக இன்ஸ்பெக்ரர் பத்மயால் தெரிவித்தார்.
ஏழு மாதம் நிறைந்த கர்ப்பிணி மாணவியை அரச வைத்தியசாலைக்கு கூட்டிச் சென்றால் வைத்தியர்கள் கேள்வி கேட்பார்க்ள எனப்பயந்து தனியார் வைத்திய நிலையம் ஒன்றிற்குக் கூட்டிச் சென்றதாகவும் அந்த வைத்திய நிலைய வைத்தியர் பொலிஸ் சான்றிதழ் கொண்டுவருமாறு கூறியதைத் தொடர்ந்து பெற்றோர் பொலிஸாரிடம் முறையிட்டதை தொடர்ந்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பத்மலால் தெமரிவித்தார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தான் இந்த யுவதியை திருமணம் செய்வதாக ஒப்புக் கொண்டதாகவும் ஆனால் சந்தேக நபர் 13 வயது சிறுமியை வல்லுறவுக்குட்படுத்தி கர்ப்பமடைய செய்ததால் சந்தேக நபரை  நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தவுள்ளதாகவும் இன்ஸ்பெக்ரர் பத்மலால் தெரிவித்தார்.


மகனை துன்புறுத்திய தாயின் கள்ள கணவனுக்கு சிறை

Written By Unknown on Saturday, June 22, 2013 | 9:18 AM

10 வயதான பெறா மகனை தீயினால் சுட்டு துன்புறுத்திய தாயின் கள்ள கணவனுக்கு கேகாலை மேல் நீதிமன்றம்; கடுமையான வேலைகளுடன் கூடிய 10 வருட சிறைத்தண்டனை விதித்துள்ளது.

கேகாலை மேல் நீதிமன்ற நீதிபதி மேனகா விஜேசுந்தரவே அவருக்கு இவ்வாறு தண்டனை விதித்து நேற்று வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்துள்ளார்.

கடுமையான வேலைகளுடன் கூடிய 10 வருட சிறைத்தண்டனையுடன் 5000 ரூபா தண்டமும் விதிக்கப்பட்டுள்ளது. தண்டனையை செலுத்துவதற்கு தவறினால் மேலும் இரண்டுவருடங்கள் சிறைத்தண்டனையை அனுபவிக்கவேண்டிவரும் என்றும் நீதிபதி எச்சரித்துள்ளார்.

கித்துல்கல, இன்ஓயா தோட்டத்தைச்சேர்ந்த ரெங்கையா ஜெகனுக்கே இவ்வாறு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 

தன்னுடைய தந்தை இறந்ததன் பின்னர் தன்னுடைய வீட்டுக்கு வரும் சித்தப்பா ஒருநாள் தன்னுடைய உடலில் மிளகாய் தூளை பூசி சுத்தியலால் தாக்கியதாகவும் பின்னர் தீயினால் சுட்டதாகவும் பாதிக்கப்பட்ட சிறுவன் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
சிறுவனை நன்னடத்தை இல்லத்தில் ஒப்படைக்குமாறும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

15 வயதுச் சிறுமியை 2 மாத கர்ப்பிணியாக்கிய 19 வயது இளைஞன் கைது

Written By Unknown on Thursday, June 6, 2013 | 10:15 AM

புத்தளம் பகுதியில் பாட்டியின் துணையுடன் வசித்து வந்த 15 வயதான சிறுமி ஒருவரை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்திய 19 வயதான இளைஞன் ஒருவரை சிலாபம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கடந்த மார்ச் மாதம் 10ஆம் திகதி இந்த இளைஞன் சிறுமியை பாட்டிக்கு தெரியாது கடத்திச் சென்று வீடொன்றில் வைத்து பலமுறை சிறுமியை பலாத்காரத்திற்கு உட்படுத்தியுள்ள நிலையில் குறித்த சிறுமி இரண்டு மாதம் கர்ப்பிணியாக உள்ள நிலையில் இச்சம்பவம் குறித்து சிலாபம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் பாதிக்கப்பட்ட சிறுமி சிகிச்சைகளுக்காக சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சிலாபம் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

ராணுவ வீரரை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த பெண்கள்

Written By Unknown on Thursday, May 2, 2013 | 9:42 AM

ஜிம்பாப்வே நாட்டில் காரில் லிப்ட் கேட்ட ராணுவ வீரரை பெண்கள் சிலர் கடத்திச் சென்று நான்கு நாட்கள் பலாத்காரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாணிக்காலாந்து மாகாணத்தில் உள்ள முடாரே நகரில் கடந்த 19ம்தேதி நள்ளிரவு பஸ்சுக்காக ராணுவ வீரர் ஒருவர் பேருந்துக்காக காத்திருந்தார். அப்போது, அவ்வழியாக வந்த காரை நிறுத்தி 'லிப்ட்' கேட்டார். காரினுள் இருந்த ஒரு ஆணும், 2 பெண்களும் அவரை ஏற்றிக்கொண்டனர். சற்றுதூரம் சென்றதும் கார் வேறு வழியாக செல்லவே, சந்தேகம் அடைந்த ராணுவ வீரர், தன்னை இறக்கிவிடும் படி கூறினார். உடனே காரை ஓட்டிய நபர் கத்தியைக் காட்டி மிரட்டினார். பெண்களில் ஒருத்தி அவரது கண்ணை துணியால் கட்டினாள். அடையாளம் தெரியாத இடத்தில் தனிமையான ஒரு வீட்டிற்கு ராணுவ வீரரை அவர்கள் கடத்திச் சென்றனர். அங்கு அவரை நிர்வாணப்படுத்தி செல்போன், பணம் ஆகியவற்றை பறித்துக்கொண்ட 2 பெண்களும் பலவந்தமாக அவருடன் உறவில் ஈடுபட்டனர். 4 நாட்கள் மாறி, மாறி பலமுறை கட்டாய உடலுறவில் ஈடுபட்ட பின்னர், கடந்த 23ம் தேதி மீண்டும் கண்ணைக் கட்டி காரில் அழைத்து வந்து முடாரே நகர் அருகில் உள்ள டங்கமுவாரா மலைப் பகுதியில் இறக்கி விட்டனர். போனவர்கள் சும்மாவிட்டுவிட்டு போகாமல் மலையோரம் இருந்த பெரிய கல்லை எடுத்து அவரது இடது காலை காயப்படுத்தி விட்டு அவர்கள் காரில் தப்பிச் சென்றனர். ஒரு வழியாக ராணுவ வீரர் தட்டுத் தடுமாறி எழுந்து போய் முடாரே நகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் அந்த பெண்களையும், அவர்களுடன் இருந்த நபரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
-தட்ஸ் தமிழ்

இரவுப்பொழுதை கழிக்க ஆண் நண்பர் ஒருவரை அனுமதித்த வீட்டுப்பணிப்பெண் கைது

Written By Unknown on Monday, April 29, 2013 | 3:01 PM

இலங்கையை சேர்ந்த வீட்டுப்பணிப்பெண் ஒருவர் தான் வேலைச்செய்யும் வீட்டினுள் இரவுப்பொழுதை கழிக்கவென இலங்கையரான தனது ஆண் நண்பர் ஒருவரை அனுமதித்ததை அவதானித்த ஒரு அராபியர் பொலிஸுக்கு தகவல் கொடுத்துள்ளார்.

வீட்டுப்பணிப்பெண்ணின் அறையிலிருந்து வித்தியாசமான சத்தம் கேட்டதாகவும் கூறியுள்ள அவர் இதுபற்றி பொலிஸ் நடவடிக்கை அறைக்கு தகவல் கொடுத்ததையடுத்து பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் அந்த வீட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

இந்த வீட்டுப்பணிப்பெண்ணை அவரது காதலனும் சட்ட நடவடிக்கைக்காக உரிய பாதுகாப்பு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

கைத்தொலைபேசியில் ஆபாசப்படம் : இரவில் சுற்றிய இளைஞர் கைது

Written By Unknown on Sunday, April 28, 2013 | 11:57 AM


கைய­டக்கத் தொலை­பே­சியில் ஆபா­சப்­படம் வைத்­தி­ருந்த இளைஞர் ஒருவர் ரோந்து நட­வ­டிக்­கையில் ஈடு­பட்­டி­ருந்த சுன்­னாகம் பொலி­ஸாரால் கைது செய்­யப்­பட்­டுள்ளார். 

இரவு வேளையில் சுன்­னாகம் நகரப் பகுதியில் சைக்­கிளில் வந்த இருவர் ஒரு­வரை இறக்­கி­விட்டு அந்தப் பகு­தியில் பல தட­வைகள் சுற்­றி­யுள்ளார். 

இதனை அவ­தா­னித்த பொலிஸார் குறிப்பிட்ட நபரை மறித்து விசாரித்த போது தான் சாவ­கச்­சே­ரியைச் சேர்ந்­தவர் எனவும் சுன்­னா­கத்­தி­லுள்ள வீடொன்­றில் இடம்­பெறும் பிறந்­தநாள் கொண்­டாட்­டத்­துக்கு வந்­த­தாகவும் கூறி­யுள்ளார்.

சந்­தேகம் கொண்ட பொலிஸார் இவ­ரது கைய­டக்கத் தொலை­பே­சியை சோதித்த போது ஆபா­சப்­ப­டங்கள் இருப்­பதைக் கண்டு பிடித்­த­­துடன் சந்­தேக நபரை கைது செய்து மல்­லாகம் நீதி­மன்றில்  ஆஜர் செய்தனர். குற்­றத்தை  ஒப்புக் கொண்டதைத் தொடர்ந்து மூவாயிரம் ரூபா அப­ரா­த­ம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது

காதலி வெளிநாட்டுக் கணவனுடன் செல்வதை கண்ட காதலன் தற்கொலை


imageதன்னைக் காத­லித்த பல்­க­லைக்­க­ழக மாணவி வெளி­நாட்டு மாப்­பிள்­ளை­யுடன் காரில் ஊருக்கு வந்து இறங்­கி­ய­யதைத் தாங்க முடி­யாத யாழ்.பல்­க­லைக்­க­ழக மாணவன் தூக்கில் தொங்­கிய நிலையில் உயிரை மாய்த்துக் கொண்ட சம்­பவம் இரு­பாலை கிழக்கில்  இடம்­பெற்­றுள்­ளது.

இச்­சம்­பவம் தொடர்­பாக அம் மாண­வனின் நண்­பர்கள் தெரி­விக்­கையில்இ நீண்ட கால­மாக காத­லித்த தனது காதலி இந்­தி­யா­வுக்கு வழி­பாட்டு தலத்­திற்கு குடும்­பத்­துடன் சென்று வரு­வ­தாக கூறிச் சென்று அவர் திரும்பி வரும்­போது திரு­மணம் முடித்து புது­மாப்­பி­ளை­யுடன் காரில் செல்­வதைக் கண்­ட­தினால் இவர் தற்­கொலை செய்­துள்ளார் என கூறினர். யாழ் பல்­க­லைக்­க­ழ­கத்தில் வர்த்­தகப் பிரிவில் 3ஆம் வரு­டத்தில் கல்வி பயின்ற மாண­வனே இவ்­வாறு உயி­ரி­ழந்­துள்ளார்.

குறித்த மாண­வனின் சடலம் பிரதே பரி­சோ­த­னைக்­காக யாழ் போதனா வைத்­தி­ய­சா­லையில் ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்­ளது. இச் சம்பவம் தொடர்பாக மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்

பெற்ற பிள்ளையை சித்திரவதை செய்த தாய்

Written By Unknown on Sunday, April 7, 2013 | 9:51 AM

கணவன் கொடுமைப்படுத்தியமையால் பெற்ற பிள்ளையை சித்திரவதை செய்த தாய்மட்டக்களப்பு, வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புதுமண்டபத்தடிக் கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட இருட்டுச்சோலைமடுவில் கணவன் தன்னைக் கொடுமைப்படுத்தியதனால் தனது குழந்தையை சித்திரவதை செய்து வந்த பெண்ணை வவுணதீவுப் பிரதேச செயலக அதிகாரிகள் மீட்டதுடன் குறித்த தாயையும் குழந்தையையும் வவுணதீவுப் பொலிஸில் ஒப்படைத்துள்ளனர். 

குறித்த இளம் தாய் தனது ஒரு வயதும் இரண்டு மாதமும் உடைய குழந்தையை நீண்ட நாட்களாக கடித்தும் அடித்தும் நெருப்பினால் சுட்டும் சித்தரவதை செய்து வந்ததுடன் வியாழக்கிழமை இரவு மண்ணெண்ணை பருகக் கொடுத்தும் கொலை செய்ய முயற்சித்துள்ளார். 

வியாழக்கிழமை இரவு குழந்தைக்கு மண்ணெண்ணை பருக்கிய நிலையில் சிறுவர் பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்தவர்கள் புதுமண்டபத்தடி கிராமிய வைத்திய சாலையில் குழந்தையை பாட்டியுடன் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். 

இந்நிலையில் வெள்ளிக்கிழமை குழந்தையை வீட்டிற்குக் கொண்டு சென்றபோதும் குறித்த தாய் மீண்டும் குழந்தையை சித்திரவதை செய்ததுடன் தூக்கி வீசி கொலை செய்ய முயற்சித்துள்ளார். 

இந் நிலையில் அயலவர்கள் பிரதேச செயலக சிறுவர் நன்னடத்தைப் பிரிவிற்கு வழங்கிய தகவலை அடுத்து பிரதேச செயலாளர் வெ.தவராஜாவின் உத்தரவிற்கமைய கிராம சேவை அதிகாரி க.வரதராசா, சிறுவர் நன்னடத்தை அதிகாரி எம்.வரதராஜன், சிறுவர் மேம்பாட்டு உத்தியோகஸ்தர் பிரதிபன் மற்றும் சூரியா பெண்கள் அமைப்புப் பிரதிநிதிகள் சென்று குழந்தையை மீட்டதுடன் குழந்தையையும் தாயையையும் வவுணதீவுப் பொலிஸில் ஒப்படைத்துள்ளனர். 

கலேவெல பாடசாலை வளாகத்தினுள் 9 வயது சிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம்

Written By Unknown on Monday, March 11, 2013 | 12:06 PM


rapp19 வயது இளை ஞனொருவனால் பாலியல் துஷ் பிரயோ கத்திற்குள்ளான 9 வயது சிறு மியொருவர் கலேவெல மாவட்ட வைத் தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் அங்கிருந்து மாத்தளை நகர
வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக கலேவெல பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார். 

கலேவெல அல் புர்கான் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் 5 ஆம் தரத்தில் கல்வி கற்கும் 9 வயது சிறுமி நேற்று முன்தினம் சனிக்கிழமை பிற்பகல் இரண்டு மணியளவில் வித்தியாலய வளாகத்திலுள்ள கழிவறையொன்றுக்குள் இதே வித்தியாலயத்தின் பழைய மாணவனொருவரால் பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளாகியிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர். 

கலேவெல அல் புர்கான் முஸ்லிம் வித்தியாலய வளாகத்திலுள்ள பாதுகாப்பற்ற ஒரு வகுப்பறை மற்றும் கைவிடப்பட்டுள்ள ஆசிரியர் விடுதிகள் என்பவற்றில் சில குழுக்களால் நீண்ட காலமாக பல்வேறு சட்ட விரோத செயல்கள் இடம்பெற்று வருவதாகவும் வித்தியலாய அதிபர் இதே ஊரைச் சேர்ந்தவரென்பதால் இத்தகைய சட்ட விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுப்பதற்கு தயக்கம் காட்டி வந்த நிலையில் தற்போது பட்டப் பகலிலேயே

பாடசாலை வளவுக்குள் பாடசாலைச் சிறுமிகளை துஷ்பிரயோகம் செய்யுமளவிற்கு நிலைமை மோசமடைந்து விட்டதாகவும் பெற்றோரும் , பிரதேச வாசிகளும் கவலை தெரிவிக்கின்றனர்.

மணிக்கட்டை வெட்டிய படத்தை பேஸ்புக்கில் தரவேற்றிவிட்டு ஆற்றில் குதித்து இளைஞர் தற்கொலை

Written By Unknown on Sunday, March 3, 2013 | 5:09 PM

இந்தியாவின் கோவா மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் நடுவீதியில் வைத்து தனது மணிக்கட்டில் வெட்டி அதனை படம் பிடித்து பேஸ்புக் சமூகவலைத்தளத்தில் தரவேற்றம் செய்துவிட்டு ஆற்றில் குதித்துத் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளது.
image
கோவா மாநிலத்தின் பனாஜி என்ற இடத்தில் ஜுவாரி பாலம் அருகிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை மாலை மோட்டா சைக்கிளில் வந்த 26 வயது வாலிபர் ஒருவர் தான் வைத்திருந்த கத்தியால் கை மணிக்கட்டை வெட்டிக்கொண்டுள்ளார்.

தொடர்ந்த இரத்தம் வெளியேறுவதை அவரது கையடக்கத் தொலைபேசியில் படம் பிடித்து அதனை அவருடை பேஸ்புக் பக்கத்தில் தரவேற்றியுள்ளார். இச்சம்பவம் குறித்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பின்னர் மக்கள் பார்த்துக்கொண்டிருக்கையில், அந்த வாலிபர் ஆற்றில் குதித்துள்ளார். 

இதனையடுத்து பொதுமக்கள் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். பின்னர் மீட்புப்பணிகளை துரித கதியில் மேற்கொண்ட போதும் பொலிஸ் மற்றும் தீயணைப்பு படையினரின் முயற்சிகள் வீண்போயுள்ளது.

வெள்ளிக்கிழமை இரவு சடமாகவே அவ்விளைஞர் மீட்கப்பட்டுள்ளார். இது தொடர்பிலான ஆரம்விசாரணைகளின் போது இது காதல் விவகாரத்தினாலேயே குறித்த வாலிபர் இவ்வாறான வபரீத முடிவு எடுத்திருக்கிறார் எனத் சந்தேகிக்கப்படுகிறது.

குடிபோதையில் பெண்ணொருவருடன் உல்லாசமாக இருந்த பௌத்தபிக்கு கைது

Written By Unknown on Sunday, February 24, 2013 | 12:44 PM


புத்தளம், கருவலகஸ்வெள பகுதியில் பௌத்த பிக்கு ஒருவர் வீடொன்றில் பெண்ணொருவருடன் உல்லாசமாக இருந்த போது பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரதேச மக்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்து குறித்த பிக்கு கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்படும் போது குறித்த பௌத்த பிக்கு அதிக குடிபோதையில் இருந்தாக பொலிஸார் தெரிவித்தனர்.

நிர்வாண கோலத்தில் இருந்த இளம்ஜோடி கைது

Written By Unknown on Wednesday, January 23, 2013 | 3:59 PM

முச்சக்கரவண்டிக்குள் நிர்வாண கோலத்தில் இருந்த இளம் ஜோடியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அத்துடன், அந்த ஜோடிக்கு உதவியவரையும் மற்றும்  கையடக்க தொலைபேசியில் படம்பிடித்துக்கொண்டிருந்தவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவம் கல்பிட்டிய மாம்பூரி கடற்கரையில் இன்று இடம்பெற்றுள்ளது.

கைது செய்யப்பட்ட இருவரில் ஒருவர் குறித்த இளம் வயது ஜோடி நிர்வாண கோலத்தில் முச்சக்கர வண்டிக்குள் இருக்கையில் அந்த முச்சக்கரவண்டியின் சாரதி ஆசனத்திலிருந்து   கையடக்க தொலைபேசியில் படம்பிடித்து கொண்டிருந்துள்ளார்.

மற்றுமொருவர் முச்சக்கரவண்டிக்கு மிக தூரத்தில் இருந்து உளவு பாத்துக்கொண்டிருந்திருந்துள்ளார்.என்று தெரிவித்த பொலிஸார் கடற்கரைக்கு சென்றிருந்த பொதுமக்கள் வழங்கிய இரகசிய தகவல்களை அடுத்தே இந்த நான்குபேரும் கைது செய்யப்பட்டதாக  பொலிஸார் தெரிவித்தனர்.

கள்ளக்காதலனுக்கு ஊட்டி விட கறிச்சோறுடன் வந்த கள்ளக்காதலியை அடித்துத் துவைத்த மனைவி

Written By Unknown on Sunday, January 20, 2013 | 2:46 PM

கள்ளக்காதலனுக்குப் பிடிக்குமே என்று கறி எடுத்து சமைத்து கறியும், சோறுமாக காதலனின் வீடு தேடி வந்தார் அவரது கள்ளக்காதலி. இதனால் ஆத்திரமடைந்த மனைவி, அந்த கள்ளக்காதலியை அடித்துத் துவைத்து விட்டார். இதையடுத்து அவரது கணவர் தனது கள்ளக்காதலியுடன் சேர்நது மனைவியை அடித்தார். கும்பகோணம் அருகே உள்ள மாத்தி கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் ஒரு தையல்காரர். இவருக்கு 49 வயதாகிறது. இவரது மனைவி ஜெயந்தி. இவர்களுக்கு குழந்தைகள் இல்லை.

 ராஜேந்திரனின் அக்காள் மகள் ரேவதி. 29 வயதான இவருக்குத் திருமணமாகி விட்டது. ஆனால் கணவரைப் பிரிந்து வந்து விட்ட அவர் தனது தாயாருடன் தனியாக வசித்து வருகிறார். இவரது வீடு ராஜேந்திரன் வீடு அருகே உள்ளது. ராஜேந்திரனுக்கும், ரேவதிக்கும் இடையே நாளடைவில் காதல் மலர்ந்துள்ளது. இது ஜெயந்திக்குத் தெரிய வர அவர் இருவரையும் கண்டித்தார். ஆனாலும் அவர்கள் இருவரும் உறவைத் தொடர்ந்துள்ளனர். இதையடுத்து போலீஸுக்குப் போனார் ஜெயந்தி. போலீஸாரும் அழைத்து இருவரையும் எச்சரித்து அனுப்பினர். 

இந்த நிலையில், காணும் பொங்கல் அன்று தனது வீட்டில் கறிச்சோறு செய்தார் ரேவதி. பின்னர் அதை எடுத்துக் கொண்டு ராஜேந்திரன் வீட்டுக்கு வந்தார். தனது கையால் சாப்பாட்டை ராஜேந்திரனுக்கு ஊட்டி விட வந்தார் ரேவதி. அப்போது வீட்டில் ஜெயந்தி இருந்துள்ளார். ரேவதி கறியும், சோறுமாக தனது கணவரைப் பார்க்க வந்ததை அறிந்து அவர் கொதிப்படைந்தார். வீட்டில் கிடந்த விறகுக் கட்டையை எடுத்து ரேவதியை சரமாரியாகத் தாக்கினார். இதைப் பார்த்த ராஜேந்திரன் ஆத்திரமடைந்த இன்னொரு கட்டையை எடுத்து ஜெயந்தியைத் தாக்கியுள்ளார். அவருடன் ரேவதியும் சேர்ந்து ஜெயந்தியைத் தாக்கினார். இதில் ஜெயந்திக்குப் படுகாயம் ஏற்பட்டது. அவரது தலையிலிருந்து ரத்தம் கொட்டியது. உடனடியாக அவரை தஞ்சை பெரிய மருத்துவனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. போலீஸார் வழக்குப் பதிவு செய்து ராஜேந்திரன், ரேவதியைக் கைது செய்துள்ளனர்.

விபச்சாரபுரியாக மாறிவரும் கிளிநொச்சி- சாந்தபுரம்!

Written By Unknown on Friday, November 23, 2012 | 12:36 PM



தென்னிலங்கை வாசிகள் படையினரின் ஆதரவுடன் இங்குள்ள தமிழர்களது காணிகளையும் வீடுகளையும் வளைத்துப் போட்டு அதில் விடுதிகளை நடத்தி வருகின்றனர். 18வயது தொடக்கம் 38 வயது வரையான பெண்கள் இத்தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ் பெண்களென்றால் ரூபா 1000 தொடக்கம் 3000 வரையும் சிங்களப் பெண்களென்றால் 1500 தொடக்கம் 5000 வரைக்கும் சிலவேளை அதற்கும் அதிகமாக ரேட் பேசப் பட்டு வியாபாரம் நடைபெற்று வருகின்றது.
வயது கூடக்கூட ரேட் குறைக்கப்பட்டு வியாபாரம் நடக்கிறது. வெளியிலிருந்து பார்த்தால் எல்லாமே சாதாரண வீடுகள் போலத்தான் தெரியும். இப்பகுதியிலுள்ள ஆட்டோ ஓட்டுநர்கள் அல்லது பெட்டிக்கடை வெற்றிலைக்கடை வைத்திருப்பவர்களை அணுகினால் எந்த வீட்டில் என்னவிலைக்கு வியாபாரம் நடக்கின்றதொன்பதை துல்லியமாக அறிந்து கொள்ளலாம்.

வெளிப்புறமாக உடைந்தும், துப்பாக்கிச் சன்னக் கீறல்களுடன் காட்சி யளிக்கும் வீடுகளுக்குள்ளே சென்று பார்த்தால் அரண்மனைபோன்று அழகிய வேலைப்பாடுகளுடன் அலங்காரமிக்க மின்குமிழ்கள், மின் விசிறிகள், கட்டில்கள் காட்சியளிக்கின்றன. அறைகளெல்லாம் குளிரூட்டப் பட்ட அறைகளாக இருக்கின்றன..

படையினருடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருக்கும் இருவர் உட்பட பஸ் உரிமையாளர் ஒருவரும் இப்பகுதியில் விடுதி நடத்தி வருகின்றனர். ஓடர் செய்தால் விடுதிக்கே பெண்கள் அழைத்து வரப்படுவர் என தெரிவிக்கப்படுகின்றது. சில வீடுகளை படை அதிகாரிகள் சிலர் நிர்வகித்து வருவதாக இப்பகுதிவாசிகள் தெரிவிக்கின்றனர்.

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் நடந்த சம்பவம் இது, சாந்தபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் தாய் ஒருவர் படைச்சிப்பாய் ஒருவருடன் சென்றதால் அவரது பிள்ளைகள் பொலிஸ் நிலையத்திற்குச் சென்று முறைப்பாடு கொடுத்துள்ளனர்.

ஆனால் தனித்துவிடப்பட்ட அவரின் பிள்ளைகள் பொலிஸ் நிலையம் சென்று தமது கண்ணீர் கதையை கூறி தாயாரை மீட்டுத்தரக் கோரியும் முறைப்பாட்டை பொலிஸார் ஏற்கமறுத்துவிட்டதாகப் பாதிக்கப்பட்ட பிள்ளைகள் தெரிவித்தனர். 

28 வயதுடைய குறித்த பெண் இரணைமடுக்குளத்தில் நன்னீர் மீன்பிடி தொழிலின் போது அங்கு கூலி வேலை செய்துள்ளார். அப்போது இரணை மடுக் குளத்தின் பின்பகுதியில் கடமையிலிருந்த சிப்பாய்க்கும் இவருக்கும் காதல் மலர்ந்துள்ளது. குறிப்பிட்ட காலத்தின் பின்னர் அந்தப் பெண் வேலையை விட்டு நின்றுவிட்டார். ஆனால் காதலை நிறுத்தவில்லை.

சம்பவம் குறித்து இவருடைய பிள்ளைகளிடம் விசாரித்த போது  ‘அந்த ஆமிக்காரன் அடிக்கடி எங்கள் வீட்டுக்கு வந்து போவான். நாங்கள் சின்னப் பிள்ளைகள். எங்களுக்கு அப்பா இல்லை. அவர் வன்னி போரில் காணாமற் போய்விட்டார். எங்களுக்கு உதவிக்கு யாருமில்லை. அம்மா கூலிவேலை செய்துதான் எங்களை பார்க்கிறா. நாங்கள் ஐந்து பேர் கடைசி தம்பிக்கு ஒன்றரை வயது. அந்த ஆமிகாரன் தான் அம்மாவை திருமணம் முடிப்ப தாகக் கூறி வீட்டுக்கு வந்து போவான். அம்மா இதை எங்களிடம் சொல்லுவா. இப்படித்தான் கடந்த அன்று விடுமுறையில் எங்கள் வீட்டுக்கு வந்து தங்கி நின்றுவிட்டு மறுநாள் அவர் செல்லும்போது அம்மாவும் கூடச் சென்றுவிட்டா.” என்றாள் 12 வயதான அந்தச் சிறுமி.

இரண்டு நாட்களுக்குப்பின்னர் மதவாச்சியிலிருந்து தொலைபேசிமூலம் அழைப்பெடுத்த தாயார் தன்னை குறித்த படைச்சிப்பாயும் வேறு சிலரும் கடுமையாகத் தாக்கி தான் மருத்துவமனையில் இருப்பதாக கூறியுள்ளார். பின்னர் அந்த நம்பர் வேலை செய்யவில்லை. இவை குறித்து பொலிஸில் முறைப்பாடு செய்ய சென்றபோது அம்மா இருக்கும் இடம் எங்கே? இவரை கூட்டிவாருங்கள் முறைப்பாடு பதிவுசெய்கிறோம் எனத் திருப்பி அனுப்பிவிட்டதாக அவரின் பத்தே வயதான இரண்டாவது மகன் தெரிவிக்கிறார்.

இரு நாட்களுக்கு பின்னர் மாலை வீடுதிரும்பிய தாயார் தான் மைத்துனர் வீட்டுக்கு சென்று வந்ததாக அயலவர்களிடம் தெரிவித்துள்ளார்.

பிள்ளைகள் இவ்வாறு கூறுகின்றனர் என்று கேட்டபோது, தான் குறித்த சிப்பாயுடன் விரும்பியே சென்றதாகவும், அடையாள அட்டை கொண்டு செல்லாததால் ஓமந்தையில் இராணுவத்தினர் திருப்பி அனுப்பி விட்டதாகவும் தொடர்பற்ற விதத்தில் தெரிவித்திருக்கிறார்.

யுத்த்திற்கு பின்னரான இன்றைய காலப்பகுதியில் கிளிநொச்சி சாந்தபுரம் கிராமத்தில் இவ்வாறான சம்பவங்கள் அதிகளவில் நடந்து வருகின்றன. சாந்தபுரம் கிராமத்தில் சுமார் 400க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்குள்ள சனத்தொகையில் சுமார் 75 வீதமானவர்கள் கணவனின்றி தனித்து வாழ்பவர்களாகவும் கணவனால் கைவிடப் பட்டவர்களாகவும் இருக்கின்றனர்.

இதேவேளை அதிகமான பெண்களின் கணவர்கள் தடுப்பு முகாம்களிலும் சித்திரவதை முகாம்களிலும் தடுத்து வைக்கப்பட்டிருப்பதால் அவர்களைப் பார்ப்பதற்காக வாரமொருமுறை தடுப்பு முகாம்களுக்குச் செல்லும் தமக்கு படையினருடன் ஏற்படும் தொடர்பானது தவிர்க்க முடியாததென இரண்டு பிள்ளைகளின் தாயான சாந்தபுரம் வாசியொருவர் தெரிவிக்கின்றார். தாம் மறுத்தால் நாளை தனது கணவருக்கு ஏதேனும் நேர்ந்து விடுமோ என்ற அச்சத்தில் தாம் வேறு வழியின்றி தமது பிள்ளைகளை வாழ வைப்பதற்காக படையினருடன் சிநேகபூர்வமாக இருந்து வருவதாக அவர் தெரிவிக்கின்றார். 

இவற்றை விட இன்று சாந்தபுரம் காராமத்தில் ஆங்காங்கே விபச்சார நிலையங்களும் வீடுகளில் மிக இரகசியமான முறையில் இயங்கி வருகின்றன. அப்பிரதேசத்திலுள்ள ஆட்டோ ஓட்டுனர் சிலரும் இத் தொழிலுக்கு உடந்தையாக இருந்து வருகின்றனர். 

தென்பகுதியிலிருந்து வந்த சிங்கள இளைஞனொருவர் கிளிநொச்சி பஸ் நிலையத்தில் இறங்கி சாந்தபுரத்தில் விபச்சாரம் இரகசியமாக நடத்தப் படும் இடத்தின் பெயரைக் கூறி இங்கு கூட்டிச்சென்று விடுமாறு கூறியதாகவும். தங்களுக்கே தெரியாத எமது பெண்களின் முகவரிகள் எங்கோ இருக்கும் இவர்களுக்கு எப்படி தெரிகிறது என் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் அங்கலாய்க்கிறார். 

படைச்சிப்பாய்களை மகிழ்விக்கும் உல்லாசபுரியாக இருந்து வரும் அநுராதபுரத்திற்கு இரண்டாவதாக கிளிநொச்சி சாந்தபுரம் விளங்குவதாக சர்தபுரத்தில் வசிக்கும் இளைஞர்கள் தெரிவிக்கிறனர்.
கசிப்பு, போதைவஸ்து போன்ற தொழில்களும் இன்று கொடிகட்டிப் பறக்கின்றனவாம். தென்னிலங்கையிலிருந்து வரும் வியாபாரிகள் இங்கு அதிகமாக நடமாடுவதைக் காணக் கூடியதாகவுள்ளது. காவல்துறையினர் கூட இத்தகைய சமூக விரோத செயல்களை கண்டும் காணாமல் இருப்பது வேதனையான விடயமே. 

இப்பிரதேசத்திலுள்ள வீடொன்றில் படைச்சிப்பாயொருவர் வயதான தாயொருவர் உட்பட மூன்று பெண்களை வைத்து விபச்சாரம் செய்து வருவதாக இப்பகுதி மக்கள் சிலர் தெரிவிக்கின்றனர். தனது தாயுடனும் சகோதரிகள் மூவருடனும் தாம் வசித்த வருவதாக இவர் வெளியில் சொல்லி வருகிறாராம். இவர்களுடன் வசிக்கும் ஒரு பெண் இறுதி யுத் தத்தில் தனது உறவுகளைப் பறிகொடுத்த தமிழ் பெண் என்பதும் குறிப்பிடத்தக்கது. அத்துடன் இவ்வீட்டில் மாலை 6மணிக்குப் பின்னர் பின்வாசல் வழியாக கள்ளச்சாராய விற்பனையும் அமோகமாக நடந்து வருகின்றதாம். 

சாந்தபுரத்திலுள்ள அநேகமான குடும்பங்கள் இன்று பிரிந்து வாழுகின்றன. புனர்வாழ்வு முடிந்து விடுவிக்கப்படும் கணவன்மார்கள் அதிகமானோர் இன்று தமது குடும்பத்தை விட்டு பிரிந்தே வாழுகின்றனர். புனர்வாழ்வு முடிந்து தமது மனைவி பிள்ளைகளுடன் சந்தேசமாக மீதமிருக்கும் காலத்தையும் கழிக்கலாம் என்ற கனவில் வரும் இவர்கள் அடுத்த கணமே பிரிந்து வாழும் நிலைக்கு தள்ளப்பட்டு விடுகின்றனர். இரவுவேளைகளில் நட்புறவுடன் வீடுகளுக்கு வந்து உரிமையுடன் உணவு உண்டுவிட்டுச் செல்லும்  படை அதிகாரிகள் அவர்களை விழுந்து விழுந்து கவனிக்கும் தமது மனைவிமார்களின் உபசரிப்புக்கள், படையினரின் அன்னியோன்யம் என பல சம்பவங்களையும் நேரில்கண்டு வாழ்வின் மீதான நம்பிக்கை இழந்து எங்காவது பிரிந்து சென்று வாழலாம் என்ற நிலைக்குத் தாம் தள்ளப்படுவதாக புனர்வாழ்வு பெற்றுவந்த முன்னாள் போராளியொருவர் தெரிவிக்கின்றார்.  

சாந்தபுரத்தில் குடும்பத்தலைவன் உள்ள அதிகமான வீடுகளில் இரவுவேளைகளில் சண்டைகளும் சச்சரவுகளும் கூச்சல்களும் வெகு சாதாரணமாக நடப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது. இந்த நிலைக்கு முடிவு என்ன?

சிறுமியைச் சிதைத்த காமுகன்; பொதுமக்களால் நையப்புடைப்பு

Written By Unknown on Sunday, November 18, 2012 | 11:34 AM

16 வயதுச் சிறுமியை வன்புணர்வுக்குட்படுத்திய நபர் ஒருவர் பொது மக்களால் பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்டார். செய்த குற்றத்துக்காக அவரை மக்களே வீதி வழியாக இழுத்துச் சென்று சுன்னாகம் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

இந்தச் சம்பவம் நேற்று மாலை சுன்னாகம் பகுதியில் இடம்பெற்றது. இந்தப் பகுதியைச் சேர்ந்த 16 வயதுச் சிறுமி ஒருவரை குறித்த நபர் வன்புணர்வுக்கு உட்படுத்திய போது பொதுமக்களிடம் வசமாக மாட்டிக் கொண்டார். 

பின்னர் பாதிக்கப்பட்ட சிறுமியை மீட்ட பொது மக்கள் வைத்தியசாலையில் சேர்த்துள்ளனர். நையப்புடைக்கப்பட்ட நபர் அடிகாயங்களுடன் சுன்னாகம் பொலிஸாரால் யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். 

குறித்த நபர் குடும்பஸ்தர் என்றும் அவருக்கு ஏற்கனவே திருமணமாகி இரு பிள்ளைகள் உள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

மசாஜ் நிலையத்துக்குள் புகுந்து கற்பழிப்பு முயற்சி


நிட்டம்புவவில் அமையப் பெற்று உள்ள மசாஜ் நிலையம் ஒன்று இராணுவ சிப்பாய்கள் நால்வர் கடந்த நாட்களில் ஒன்றாக சென்று இருந்தனர்.
இவர்களுடைய தேவையோ பாலியல். பல இடங்களிலும் அலைந்து, திரிந்த பிற்பாடுதான் இந்த மசாஜ் நிலையத்துக்கு வந்து இருந்தனர்.
ஆனால் இது தரமான, சிறந்த மசாஜ் நிலையம். இங்கு கடமை ஆற்றுகின்ற பெண்கள் துறை சார்ந்த நிபுணர்களே அன்றி பாலியல் தொழிலாளர்கள் அல்லர்.
நால்வரும் மசாஜ் நிலையத்தின் வரவேற்புப் பகுதிக்கு வந்தனர். முகாமையாளர், வரவேற்பாளர் ஆகியோருடன் உரையாடினர்.
செக்ஸ் வைத்துக் கொள்கின்றமைக்கு ஓரிரு யுவதிகளை தந்து உதவ வேண்டுமென கேட்டு இருக்கின்றனர்.
இவர்களின் கோரிக்கை இரு ஊழியர்களையும் திக்குமுக்காட வைத்தமையுடன் அதிர்ச்சிக்கும் உட்படுத்தியது.
இங்கு விபச்சாரிகள் கிடையாது, இது பதிவு செய்யப்பட்ட ஆயுர்வேத மசாஜ் நிலையம், வேறு இடத்துக்கு செல்லுங்கள் என்று முகாமையாளர் நாகரிகமாக சொல்லி இருக்கின்றார்.
ஆனால் சிப்பாய்களோ பிடிவாதமாக நடந்து கொண்டனர். பொய் சொல்ல வேண்டாம், வேண்டிய அளவு பணம் தருகின்றோம், மசாஜ் கிளினிக் என்றால் அங்கு செக்ஸ் சேவைகளும் நிச்சயம் இருக்கும் என்று சிப்பாய்கள் சொன்னார்கள்.
வேறு இடத்துக்கு செல்லுங்கள் என்று முடிவாக சொல்லி விட்டார் முகாமையாளர்.
ஆசையும், மோகமும் சிப்பாய்களுக்கு ஏறி விட்டன. கோபம் பொத்திக் கொண்டு வந்து விட்டது. பலத்தைப் பிரயோகிக்க முயன்றனர். மசாஜ் நிலையத்தில் இருந்து அறைகளில் ஒன்றுக்குள் அத்து மீறி பிரவேசித்து விட்டனர். வாடிக்கையாளருக்கு அங்கு ஒரு யுவதி மசாஜ் செய்து கொண்டு இருந்தார். வாடிக்கையாளர் ரவல் மாத்திரம் அணிந்து இருந்தார். பின் பக்கத்தை காட்டிக் கொண்டு படுத்து இருந்தார்.
மற்றைய அறைகளுக்குள் புகுந்து நோட்டமிட்டனர் சிப்பாய்கள். வேறு பெண்களை காணவில்லை. எனவே முதல் பார்த்த அறைக்குள் மீண்டும் வந்தனர். மசாஜ் செய்து கொண்டிருந்த யுவதியுடன் பலாத்காரமாக செக்ஸ் வைக்கின்ற முயற்சியில் ஈடுபட்டனர். மசாஜ் பெற்றுக் கொண்டிருந்த நபரோ அரையில் தரித்து இருந்த ரவல் அவிழ்ந்து விழுந்ததையும் பொருட்படுத்தாமல் பிறந்த மேனியாக வெளியில் ஓடினார்.
முகாமையாளர் அவசர தொலைபேசித் தொடர்பு மூலம் பொலிஸாருக்கு முறைப்பாடு செய்து இருந்தார். பொலிஸார் விரைந்து வந்தமையால் நான்கு சிப்பாய்களையும் கையும் மெய்யுமாக பிடிக்க முடிந்தது.
நால்வருக்கும் எதிராக சட்ட நடவடிக்கை முடுக்கி விடப்பட்டு உள்ளது.
காலி, கடவத்தை, நகியதெனிய, ராகமை ஆகிய இடங்களைச் சேர்ந்தவர்கள் இந்நால்வரும்.

உடல் நலக் குறைபாடு கொண்ட வாலிபரிடம் செக்ஸ் அத்துமீறல்.. 2 பெண்கள் கைது


இங்கிலாந்தில் கற்றலில் குறைபாடு கொண்ட 22 வயது வாலிபரை தங்களது வீட்டுக்குக் கூட்டிச் சென்று, து்பபாக்கி முனையில் அவரிடம் கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் பல்வேறு செக்ஸ் சில்மிஷங்களில் ஈடுபட்டு, அதை வீடியோவில் எடுத்து தங்களது நண்பர்களிடமும் போட்டுக் காட்டிய காமவெறி பிடித்த இரண்டு இளம் பெண்களைப் போலீஸார் கைது செய்துள்ளனர். இருவரும் சகோதரிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்தப் பெண்களின் பெயர் யாஸ்மின் மற்றும் ஒயிட்னி நோட்டிஸ். யாஸ்மினுக்கு 19 வயதாகிறது. அவரது அக்காள் நோட்டிஸுக்கு 20வயதாகிறது. இருவரும் பிர்மிங்காமில் வசித்து வருகின்றனர்.
சம்பவ தினத்தன்று இருவரும் 22 வயதான வாலிபர் ஒருவரை தங்களது பிளாட்டுக்குக் கூட்டிச் சென்றனர். அந்த வாலிபர் கற்றலில் குறைபாடு கொண்டவர் ஆவார். பின்னர் பிளாட்டுக்குள் போனதும், போலி துப்பாக்கியைக் காட்டி அந்தவாலிபரிடம் செக்ஸ் சில்மிஷத்தில் இறங்கினர். கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் பல்வேறு வகையான செக்ஸ் வேலைகளை செய்யச் சொல்லி அந்த வாலிபரை சித்திரவதை செய்துள்ளனர்.
இந்த சேஷ்டைகளை தங்களது பிளாக்பெர்ரி போன் மூலம் வீடியோவிலும் பதிவு செய்து கொண்டனர். பின்னர் அதை தங்களது நண்பர்களுக்கு அனுப்பி சந்தோஷப்பட்டுள்ளனர்.
அந்த வாலிபர் கொடுத்த புகாரின் பேரில் இரு சகோதரிகளையும் போலீஸார் கைது செய்து கோர்ட்டில் நிறுத்தினர். இதில் யாஸ்மினுக்கு 7 வருடமும், நோட்டிஸுக்கு 5 வருடமும் சிறைத் தண்டனை விதித்து கோர்ட் உத்தரவிட்டது.
அந்த வாலிபரை இந்த இரு சகோதரிகளும் கைகளைக் காட்டி செக்ஸ் நடவடிக்கைளில் ஈடுபட்டு கஷ்டப்படுத்தியதாக கோர்ட்டில் அரசு வக்கீல் தெரிவித்தார்.
இந்த இரு சகோதரிகளும் மேலும் பல அப்பாவி ஆண்களை இப்படி சீரழித்திருக்கலாம் என்றும் போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

தாயின் கள்ளக்காதலால் அசிட் வீச்சுக்குள்ளான மகள்!

Written By Unknown on Sunday, November 11, 2012 | 10:27 AM


தாயின் கள்ளக் காதலனால் அசிட் வீச்சுக்குள்ளாகி 19 வயது யுவதி மற்றும் அசிட் வீசியவவரும் கடும் காயங்களுக்குள்ளான நிலையில் கண்டி போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கட்டுகஸ்தோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அலதெனிய
பிரதேசத்தில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கணவனை இழந்த குறித்த பெண் அப் பிரதேசத்தை சேர்ந்த ஒருவருடன் தொடர்பு வைத்திருந்துள்ளார்.
இப் பெண்ணின் மகளான 19 வயதுடைய யுவதி ஆடை
தொழிற்சாலை ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார்.
பின்னர் தாயின் கள்ளக் காதலன் ஆரம்பித்து நடத்தும் வர்த்தக நியைம் ஒன்றில் வேலைக்கு தாயும் மகளும் அழைக்கப்பட்டுள்ளனர்.
அங்கு இவரும் தங்கி இருக்கும் போது தாயின் கள்ளக் காதலன் மற்றுமொரு திருமணம் செய்து கொண்டுள்ளது தெரிய வந்துள்ளது.
அன்று முதல் தாயும் மகளும் அவருடன் வாக்குவாதங்களில்
ஈடுபட்டுள்ளனர். இதன் விளைவாக தாயின் கணவர் 19 வயதுடைய யுவதிக்கு அசிட் வீசியுள்ளதுடன் கடும் காயம் ஏற்பட்டுள்ளது.
அதே நேரம் அசிட் வீசப்பட்டதாக கூறப்படும் தாயின் கள்ளக் காதலனும் காயங்களுக்கு உள்ளாகியுள்ளதுடன் இருவரும் கண்டி போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மணமகள் காதலுடனுடன் ஓட்டம்!: யாழ் செல்வச்சந்நிதியில் சம்பவம்

Written By Unknown on Sunday, October 28, 2012 | 9:02 AM


திருமணத்திற்காக வருகை தந்த மணமகள் காதலுடனுடன் ஓடி  சம்பவம் ஒன்று செல்வச்சந்நிதி ஆலயத்தில் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலையத்திற் நேற்று மட்டும் சுமார் 36 திருமண சடங்கு இடம்பெற்றுள்ளது.
இதில் 20 ஆவது திருமணத்திற்கு என குறித்த மணமகனும், மணமகளும் வந்துள்ளனர்.
திருமணம் நடைபெறவிருந்த ஒரு சில நிமிடங்களுக்கு முன்னர் குறித்த மணமகள் தனது நீண்ட நாள் காதலனை அழைத்து அவருடன் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றுள்ளனர்.
குறித்த இச் சம்பவம் தமிழ் சினிமாவில் வருவது போன்று மோட்டார் சைக்கிளில் வந்த குழுவினலால் இந்த இடத்தை ஒரு கலக்கு கலக்கி மணமகளை கூட்டிச் சென்றுள்ளனர்.
அவர்களை, அங்கிருந்த சிலர் பின்தொடர்ந்தும் போதும் அவர்கள் அங்கிருந்து ஓடி மறைந்து விட்னர் என்று சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
மணமகள் வருவாள் என்ற நம்பிக்கையில் சில மணிநேரம் காத்திருந்த மணமகன் தனது மச்சாளை மணம் முடித்துக் கொண்டு வீடு திரும்பியுள்ளார்
 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. R News - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger