R News: சினிமா
Headlines News :
Powered by Blogger.

Latest Post

Showing posts with label சினிமா. Show all posts
Showing posts with label சினிமா. Show all posts

'துடைச்சுப் போடும்' பேப்பர்தான் ஆண்கள்... சோனாவுக்கு எதிராக ஆண்கள் கொந்தளிப்பு!

Written By Unknown on Monday, November 12, 2012 | 11:31 AM


துடைத்துப் போடும் டிஷ்யூ பேப்பர் மாதிரிதான் ஆண்கள்.அவர்களைக் கல்யாணம் செய்து கொண்டு குடும்பம் நடத்துவதெல்லாம் வீணானது என்று பேசியுள்ள நடிகை சோனா வீட்டு முன்பு போராட்டம் நடத்தப் போவதாக தமிழக ஆண்கள் பாதுகாப்பு சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நவம்பர் 19ம் தேதி இந்தப் போராட்டம் நடத்தப்படவுள்ளதாம். சோனா சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில், ஆண்கள், டிஷ்யூ பேப்பர் போன்றவர்கள். திருமணம் என்பது முட்டாள்தனமானது; ஆண்களோடு சேர்ந்து வாழ்வது என்பது அதை விட முட்டாள்தனமானது என்று கூறியிருந்தார். இதற்கு ஆண்கள் பாதுகாப்பு சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
வாரப் பத்திரிகை ஒன்றிற்கு கவர்ச்சி நடிகை சோனா அளித்த பேட்டியில், ஆண்களை மிகவும் கேவலப்படுத்தும் விதமாக, கருத்து தெரிவித்துள்ளார். தமிழ் மக்கள் ஆண்டாண்டு காலமாக, கடைபிடிக்கும் திருமண முறையையும், இந்திய கலாச்சாரத்தையும் இழிவுப்படுத்தும் வகையில், அவரது கருத்து அமைந்துள்ளது.
அவர், தெரிவித்த கருத்துக்களை திரும்பப் பெற்று, உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிட்டால், உலக ஆண்கள் தினமான, இம்மாதம், 19ம் தேதி, தமிழ் மக்களை ஒன்று திரட்டி, சோனாவின் வீடு முற்றுகையிடுவோம். நடிகர் சங்க அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து சோனாவை நீக்கவும், ‌கோரிக்கை விடுப்போம் என்று எச்சரித்துள்ளனர்.

தாயின் மடியே சொர்க்கம்:கலக்கும் விஜய் - ஷோபா விளம்பரம்!

Written By Unknown on Thursday, October 25, 2012 | 2:37 PM

அம்மா சென்டிமென்ட் என்றால் சினிமாவில் ஒர்க் அவுட் ஆகும் என்பார்கள். அதை இப்போது விளம்பரங்களிலும் கொண்டு வந்து விட்டார்கள். நடிகர் விஜய் தன்னுடைய அம்மா ஷோபாவுடன் சேர்ந்து நகைக்கடை விளம்பரத்தில் நடித்திருப்பது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

அனைவருக்குமே அம்மாவின் மடியில் படுத்துக்கொள்வது என்பது பிடித்தமான விசயம். ஆண் குழந்தைகள் பெரும்பாலும் அம்மா செல்லமாகத்தான் இருப்பார்கள். இதைக் கருத்தில் கொண்டு புதிதாக நகை விளம்பரம் ஒன்று வந்துள்ளது. தாய் - மகன் சென்டிமென்ட் கலந்த இந்த விளம்பரம் சூப்பர் ஹிட். அந்த வகையில் தனது தாயார் ஷோபாவுடன் இணைந்து விளம்பரப் படம் ஒன்றில் கலக்கியிருக்கிறார் விஜய். அம்மாவின் மடியில் படுத்துக்கொண்டு விஜய் பேசுவது போல அந்த விளம்பரம் அமைந்திருக்கிறது.

சூப்பர் ஹிட்

தனது தாயாருடன் இணைந்து விஜய் நடித்துள்ள இந்த விளம்பரப் படம் சூப்பர் ஹிட் ஆகியுள்ளது டிவிகளில். விளம்பரம் பார்க்க பிடிக்காதவர்கள் கூட ஒரு நிமிடம் ரிமோட்டை மாற்றாமல் அதனை பார்க்கின்றனராம்.

தங்கமான நேரம்

அம்மாவின் மடியில் படுத்துக்கொண்டு தனக்கு நேர்ந்த ஒரு அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறார் விஜய். அம்மாவின் காதில் ஆடும் ஜிமிக்கி. அதை தொட்டுக்கொண்டு பேசும் விஜய் என கவிதையாய் காட்சி அமைந்துள்ளது.


குழந்தைக்கு அம்மாவின் பெயர்

ஷூட்டிங் முடிந்து வரும்போது ஒரு குழந்தையின் சிரிப்பில் கவரப்படும் விஜய் அக்குழந்தையிடம் செல்கிறார். அப்போது குழந்தையின் தாயார், என் பொண்ணுக்கு பேரு வைங்கண்ணா என்று விஜய்யைக் கேட்க, நெகிழ்ந்து போகும் விஜய், ஷோபா, என்னோட அம்மாவின் பெயர் என்று கூறி பெயர் வைக்கிறார். இதை தனது மடியில் படுத்தபடி சொல்லும் விஜய்யைப் பார்த்து பூரித்துப் போகும் தாயார் ஷோபா, மகன் நெற்றியில் பாசத்தோடு முத்தம் வைக்கிறார்.
தாயும், மகனுமாக ஒரு விளம்பரத்தில் நடிப்பது என்பது இதுவே முதல் முறை என்பதால், விஜய்,ஷோபா விளம்பரத்திற்கு செம வரவேற்பாம்.


இம்சை அரசனின் இரண்டாம் பாகம்.. விரைவில் ஷூட்டிங்!

Written By Unknown on Monday, October 22, 2012 | 9:49 PM

தனது அஞ்ஞாதவாசத்திலிருந்து வெளியில் வருகிறார் வடிவேலு. இனி வடிவேலு நடிக்கவே மாட்டார் என்று வந்த செய்திகளைப் பொய்யாக்கும் விதத்தில், அடுத்த படத்தில் ஹீரோவாக நடிக்கிறார்.
Vadivelu Play Hero Imsai Arasan 23am Pulikesi Sequel அந்தப் படம் இம்சை அரசன் 23-ம் புலிகேசி-2. இதற்கான ஆரம்பகட்ட வேலைகளை சத்தமில்லாமல் முடித்துவிட்டார் இயக்குநர் சிம்புதேவன்.
ஏற்கெனவே இம்சை அரசனின் இரண்டாம் பாகத்தை எடுக்க சிம்புதேவன் வடிவேலுவுடன் பேசி வந்தார். அரசியல் காரணங்களால் ஒதுக்கப்பட்டு அல்லது ஒதுங்கியிருந்தாலும், இந்தப் படத்துக்கான வேலைகள் மட்டும் தொடர்ந்து நடந்து வந்தனவாம்.
விரைவில் இந்தப் படத்துக்கான ஷூட்டிங் தொடங்கவிருக்கிறது. இதுகுறித்து சிம்புதேவன் கூறுகையில், "ஆமாம்.. வடிவேலுவின் மறுபிரவேசம் இம்சை அரசனின் இரண்டாம் பாகம் மூலம் நடக்கவிருக்கிறது. படத்துக்கான திரைக்கதை வேலைகள் முடிந்துவிட்டன. விரைவில் படப்பிடிப்பு ஆரம்பமாகவிருக்கிறது. ரசித்து ரசித்து சிரிக்கும் ஒரு நல்ல படமாக இம்சை அரசன் 2-ம் பாகம் அமையும்," என்றார்.

நாயகனுக்கு 25 வயது.. நாயகர்களுக்கு கமல் நன்றி!


Nayakan Turns 25 வேலு நாயக்கருக்கு 25 வயதாகி விட்டது... கமல்ஹாசனுக்கு தேசிய விருது பெற்றுக் கொடுத்த நாயகன் படத்தின் நாயகன்தான் இந்த வேலு நாயக்கர். நாயகன் படம் வெளியாகி 25 வருடங்களை எட்டியுள்ளதைத் தொடர்ந்து, அப்படத்தின் வெற்றிக்குக் காரணமான அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார் நடிகர் கமல்ஹாசன்.
இது குறித்து அவர் எழுதியுள்ள கடிதம்:
நல்ல சினிமாவிற்கு தடைகள் நிறையவும் ஆதரவு கொஞ்சமும் இருக்கத்தான் செய்கிறது. எங்களின் கூட்டு முயற்சியின் வெற்றிக்கு வயது இருபத்தி ஐந்து என்று கூறியுள்ள கமல் சகாக்கள் மணிரத்னம், இளையராஜா, பி.சி.ஸ்ரீராம், தோட்டாதரணி, பாலகுமாரன், புதுமைப்பித்தன், சரிகா ஆகியோரை நினைவு கூர்ந்துள்ளார்.
இதேபோல் முக்தா சீனிவாசன், திரு. ராமசாமி ஆகியோரையும் இந்த நேரத்தில் நினைக்காமல் இருக்கமுடியவில்லை என்று தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் கமல்.
நாயகன் படத்தை உலகறியச் செய்தவர்கள் ரசிகர்களே அவர்களுக்கு என்றென்றும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறியுள்ள கமல், மணிரத்னதும் தானும் ரசிகர்களுக்காகவே தொடர்ந்து நல்ல சினிமா கொடுக்க முயற்சி செய்வதாக கூறியுள்ளார்.
கடல், விஸ்வரூபம் திரைப்படங்கள் வெற்றிபெற வாழ்த்துக்களையும் கூறியுள்ளார் கமல்.

திரைப்படத் துறையில் அந்நிய முதலீடு வேண்டும்-கமல்

Written By Unknown on Saturday, October 20, 2012 | 2:41 PM

குளிர்பானங்களின் விலையைவிட டிக்கெட் விலை அதிகமாக இருக்க வேண்டும். திரைப்படத் துறையில் அந்நிய முதலீடு வேண்டும் என்று நடிகர் கமல்ஹாஸன் கூறினார்.
இந்திய தொழில் வர்த்தக கூட்டமைப்பு சார்பில் (பிக்கி) இன்று சென்னை பார்க் ஷெரட்டன் ஓட்டலில் ஊடகம் மற்றும் கேளிக்கை வர்த்தக கூட்டுக்குழு கூட்டம் நடைபெற்றது.
Kamal Urges Ticket Price Hike Theaters இந்திய சினிமாத் துறையின் 100 ஆண்டு நிறைவை கொண்டாடும் வகையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை பிக்கி டைரக்டர் ஜெனரல் டாக்டர் அரபிந்த் பிரசாத் துவக்கி வைத்தார்.
ஊடகங்கள் மற்றும் கேளிக்கை வர்த்தக கூட்டுக் குழுவின் தலைவர் கமல்ஹாசன் வரவேற்றுப் பேசினார். தொலைக்காட்சிகளின் தரவரிசை பற்றிய ஆய்வறிக்கையையும் அவர் வெளியிட்டார்.
கமல் பேசுகையில், "ஊடகம் மற்றும் கேளிக்கை துறையின் வளர்ச்சிக்கு பிக்கியின் பொழுதுபோக்கு பிரிவு, பல்வேறு கொள்கை மாற்றங்களை கொண்டு வந்து சிறப்பாக பணியாற்றியிருக்கிறது.
இந்திய சினிமாவின் தரம் உயர்ந்து வருகிறது. குறிப்பாக தென்னிந்திய சினிமாத் துறை தேசிய சினிமாவின் மையமாக திகழ்கிறது. இது பெரிய பெருமை," என்றார்.
பின்னர் நிருபர்களிடம் பேசுகையில், "திரைப்படத்துறையில் அன்னிய முதலீடு வந்தால் அது வரவேற்கக் கூடியதுதான்.
ஆனால் அதற்கு முன்னதாக சில்லரை வணிகத்தில் அதனை நடைமுறைப்படுத்தக் கூடாது. பொதுமக்கள் தியேட்டர்களுக்கு சென்று எளிதாக படம் பார்க்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். குறைந்தபட்சம் தியேட்டர்களில் விற்கும் குளிர்பானங்களின் விலையைவிட டிக்கெட் விலை அதிகமாக இருக்க வேண்டும்.
இதனால் திருட்டு வி.சி.டி.க்களை தடுக்க முடியும். திரைப்பட தயாரிப்புக்கு ஆகும் செலவுக்கு ஏற்ப, தியேட்டர்களில் கட்டண உயர்வும் தேவை," என்றார்.
கூட்டத்தில் பிக்கி தலைவரின் ஆலோசகர் முராரி, இயக்குனர்கள் பி.சசிக்குமார், லிங்குசாமி, அமீர், ஆஸ்கார் விருது பெற்ற ஹாலிவுட் இயக்குனர் பேரி ஆஸ்போர்ன் மற்றும் திரைப்படத்துறை மற்றும் ஊடகத் துறையைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

எல்லோருக்கும் என் மீது பொறாமைங்க.. பொங்குகிறார் சீனி!


எல்லோருக்கும் என் மீது பொறாமை. இதனால்தான் வழக்கில் சிக்க வைத்து விட்டனர் என்று உண்மையான கோபத்துடன் கூறியுள்ளார் பவர் ஸ்டார் என்று அவராலேயே அன்புடன் அழைக்கப்படும் டாக்டர் கே.எஸ். சீனிவாசன்.
லத்திகா என்ற படத்தில் தனது பெருத்த உடலை சற்றும் பொருட்படுத்தாமல் நாயகனாக நடித்து அதகளம் செய்தவர்தான் சீனிவாசன். நிறையப் படங்களில் நடித்து வருவதாக அவரே கூறி வருகிறார்.
அடிப்படையில் சீனி ஒரு டாக்டர் ஆவார். ஆனாலும் சினிமா மீது ஏகப்பட்ட ஆசை வந்ததால் நடிகராகி விட்டார். தற்போது அவர் லேட்டஸ்டாக நடித்து வருவது ஆனந்தத் தொல்லை... இவர் மற்றவர்களுக்குக் கொடுப்பதும் இதேதான்...!

சமீபத்தில் அவரை பண மோசடி வழக்கில் தூக்கி உள்ளே போட்டு விட்டனர். சில வார சிறைவாசத்திற்குப் பின்னர் தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளார் சீனிவாசன். வந்த வேகத்தில் குமுறலையும் கொட்டியுள்ளார்.

சினிமாவில் நான் வளர்ந்து கொண்டு இருக்கிறேன். நான் பிரபலமாவது சிலருக்கு பிடிக்கவில்லை. என் மேல் பொறாமைப்பட்டு வழக்கில் சிக்க வைத்து விட்டனர். என் மீதான புகாரை சட்டப்படி சந்திப்பேன். கைதானதும் விடுதலையாகி விடுவேன் என்று நம்பினேன். ஆனால் சில நாட்கள் ஜெயிலில் இருக்க நேர்ந்தது.

சிறையில் கைதிகளை போலீசார் அக்கறையோடு கவனித்தனர். ஆனாலும் அங்கிருந்த நாட்கள் எனக்கு கஷ்டமாகவே இருந்தது.

கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் நடித்து முடித்துவிட்டேன். என்னால் அந்த படப்பிடிப்பு தாமதம் ஆகவில்லை. எனக்காக படக்குழுவினர் காத்திருக்கவும் இல்லை. சந்தானம் தற்போது பிசியாக இருக்கிறார். வேறு படங்களை நடித்து விட்டு அவர் திரும்பி வந்ததும் மீண்டும் சேர்ந்து நடிப்போம் என்றார் சீனிவாசன்.
நம்பிக்கைதானே வாழ்க்கை பாஸ்...!

மாற்றான் படத்துக்கு எதிர்ப்பு

Written By Unknown on Monday, October 15, 2012 | 9:49 PM

மாற்றான் படத்துக்கு எதிர்ப்பு விவேகானந்தரை அவமதிக்கும் வகையில் காட்சி அமைந்துள்ளதாக கூறி சூர்யா நடிப்பில் வெளியாகியுள்ள மாற்றான் படத்துக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. திருச்சியில் இந்திய இளைஞர் இயக்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

சூர்யா ஒட்டிப் பிறந்த இரட்டையர் வேடத்தில் நடித்துள்ள படம் மாற்றான். இப்படம் தமிழகம் முழுவதும் திரையிடப்பட்டு ஓடிக் கொண்டிருக்கிறது. 

படம் திரையிடப்பட்ட நாளிலேயே சேலத்தில் தியேட்டர் மேற்கூரை இடிந்து விழுந்து பலர் காயமடைந்தனர். இந்த நிலையில், திருச்சியில் மாற்றான் படத்துக்கு எதிராக போராட்டம் வெடித்துள்ளது. 

மாற்றான் படத்தில் சுவாமி விவேகானந்தரை அவமதிக்கும் வகையில் காட்சி அமைந்துள்ளதாக கூறி இந்திய இளைஞர் இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாற்றான் படம் திரையிடப்பட்ட தியேட்டர் முன்பு இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களைப் பொலிஸார் கைது செய்து அப்புறப்படுத்தி பின்னர் விடுவித்தனர்.

கோடம்பாக்கத்தில் வைரமுத்து வீடு முற்றுகை: கிறிஸ்தவ உரிமை கழக தலைவர் கைது

Written By Unknown on Saturday, October 13, 2012 | 5:43 PM

கோடம்பாக்கத்தில் வைரமுத்து வீடு முற்றுகை: கிறிஸ்தவ உரிமை கழக தலைவர் கைதுநீர்பறவை படத்தில் பைபிள் வார்த்தைகளை காதல் பாடலுக்கு பயன்படுத்தியதாக கவிஞர் வைரமுத்துவை கண்டித்து அகில இந்திய கிறிஸ்தவ கழக தலைவர் தலைமையில் 15 பேர் இன்று திடீரென கோடம்பாக்கத்தில் உள்ள வைரமுத்து வீட்டை முற்றுகையிட்டனர். அங்கு சிறிது நேரம் கோஷமிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

தகவலறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று ஆர்ப்பாட்டம் நடத்திய 15 பேரை கைது செய்து அப்புறப்படுத்தினர்.

மாற்றான் ... சூர்யாவின் கடும் உழைப்புக்கு பலன்!

Written By Unknown on Friday, October 12, 2012 | 3:08 PM


மாற்றான் படம் இன்று உலகமெங்கும் பெரும் ஆரவாரத்துடன் வெளியாகியுள்ளது.
Maattrraan First Report 'படம் எப்படி இருக்கிறது?' சினிமா ரசிகர்கள் இருவர் சந்தித்துக் கொண்டால் கேட்கும் முதல் கேள்வி இதுதான்.
படத்தின் முதல் காட்சி முடிந்துள்ள நிலையில் படம் குறித்த ஃபீட்பேக் கிடைக்க ஆரம்பித்துள்ளது.
பார்த்த ரசிகர்கள் பலருக்கும் படத்தின் கதை, எடுக்கப்பட்ட விதம், படத்தின் வேகம் போன்றவற்றில் பல்வேறு கருத்துகள் இருந்தாலும், அனைவரின் ஒருமித்த கருத்து: 'சூர்யா பிரமாதப்படுத்திட்டார்!'
படத்தின் முதல் பாதி முழுக்க ஒட்டிப் பிறந்த இரட்டையராக நடித்துள்ள சூர்யா, இடைவேளைக்குப் பிறகுதான் தனித்தனி சூர்யாவாக வருகிறார்.
இரண்டு சூர்யாக்கள், அதுவும் ஒருவரோடு ஒருவர் ஒட்டிக் கொண்டே சண்டை போடுவதும், காதல் வயப்படுவதும் என தமிழ் சினிமாவில் இதுவரை பார்க்காத பரிமாணத்தை சூர்யா வெளிப்படுத்தியுள்ளதாக ரசிகர்கள் பாராட்ட ஆரம்பித்துள்ளனர்.
இடைவேளையே 1.15 மணிநேரம் என்பதால் கொஞ்சம் நீளத்தைக் குறைத்திருக்கலாம் என்பது இன்னும் சிலரின் கருத்து.
இன்று திரையிடப்பட்ட அனைத்து இடங்களிலும் ஹவுஸ்புல் போர்டுடன் ஆரம்பமாகியுள்ளதுமாற்றான்.
படம் சராசரிக்கு சற்று மேல் என்று கருத்து சொல்பவர்கள் கூட, சூர்யாவுக்கு 100-க்கு 100 மார்க் போட்டிருப்பது, இந்தப் படம் சூர்யாவுக்காக பாக்ஸ் ஆபீஸில் நின்றுவிடும் என்பதை உணர்த்துவதாக கோலிவுட் நம்புகிறது.

கமலின் ‘விஸ்வரூபம்’ படம் தணிக்கை செய்யப்பட்டது: சர்ச்சை காட்சிகள் நீக்கம்

Written By Unknown on Thursday, October 11, 2012 | 9:00 AM

கமலின் ‘விஸ்வரூபம்’ படம் தணிக்கை செய்யப்பட்டது: சர்ச்சை காட்சிகள் நீக்கம்கமல் இயக்கி, நடிக்கும் படம் 'விஸ்வரூபம்'. இப்படத்தின் நாயகிகளாக பூஜாகுமார், ஆண்ட்ரியா நடிக்கின்றனர். வெளிநாடுகளில் படப்பிடிப்பு நடந்தது. நவீன சவுண்ட் தொழில்நுட்பத்தில் இப்படத்தை கமல் உருவாக்கி உள்ளார். ஹாலிவுட் நிபுணர்கள் இப்படத்தை பாராட்டி உள்ளனர். தமிழ், இந்தி மொழிகளில் இப்படம் ரிலீசாக உள்ளது. 

இந்நிலையில் இப்படத்தை தணிக்கை குழுவிற்கு அனுப்பியுள்ளனர். தமிழ் பதிப்பை பார்த்த தணிக்கை குழுவினர் சில காட்சிகளுக்கு ஆட்சேபம் தெரிவித்தனர். இதையடுத்து சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டன. பின்னர் படத்துக்கு ‘யு.ஏ.’ சான்றிதழ் வழங்கப்பட்டது. 

இந்தி ‘விஸ்வரூபம்’ படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் காட்சிகள் எதையும் நீக்காமல் ‘ஏ’ சான்றிதழ் அளித்தனர். படத்தின் பாடல் வெளியீட்டு விழா அடுத்த மாதம் நடக்கிறது. டிசம்பர் மாதத்தில் படத்தை ரிலீஸ் செய்ய ஏற்பாடுகள் நடக்கிறது.

துப்பாக்கி - பாடல்கள் வெளியீடு

Written By Unknown on Wednesday, October 10, 2012 | 5:45 PM




அட... போஸ்டரும் காப்பிதான்!

Written By Unknown on Tuesday, October 9, 2012 | 11:21 AM

எந்த ஒரு விஷயத்துக்கும், அதற்கு முந்தைய நிகழ்வு அல்லது படைப்புதான் இன்ஸ்பிரேஷன் என்பது மறுக்க முடியாத உண்மைதான்.
tuppaakki poster copied from hollywood movie
ஆனால், அதை அப்படியே காப்பியடிப்பது ஏற்க முடியாதது. தமிழ் சினிமாக்காரர்கள் பெரும்பாலும் இந்த இரண்டாம் ரகத்தினராகத்தான் இருக்கிறார்கள்.
ஏதாவது ஒரு ஆங்கிலப் படத்தைப் பார்க்க வேண்டியது.. அதை அப்படியே சீன் பை சீன் உருவி தமிழ்ப் படமாக்குவதுதான் இவர்களின் பாணி. முன்னணி இயக்குநர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் கூட இதற்கு விலக்கில்லை.
தெய்வத் திருமகள் படத்தைப் பார்த்துவிட்டு சராசரி ரசிகன் பாராட்ட, சினிமா தெரிந்தவர்களோ தெய்வத் திருட்டு மகள் என்று திட்டிக் கொண்டுதான் இருந்தார்கள். காரணம் ஐயாம் சாம் படத்தின் அப்பட்டமான காப்பியாக அமைந்தது அந்தப் படம்.
கஜினி படம் பெரும் வெற்றிப் பெற்றாலும், அது ஏற்கெனவே வந்த மொமன்டோவிலிருந்து உருவப்பட்டது என்பது வெட்ட வெளிச்சமாகியது.
இப்படி ஏகப்பட்ட படங்களை பட்டியல் போடலாம்.
சொந்த சரக்கு இருந்தாலும், ஒரு படத்தில் ஏதாவது நல்ல சீன் இருந்தால் அதை அப்படியே எடுத்தாள்வது நம்மவர்களின் வழக்கமாகிவிட்டது.
இதில் லேட்டஸ்டாக சேர்ந்திருப்பது, கஜினி புகழ் முருகதாஸ் இயக்க, விஜய் நடிக்கும் துப்பாக்கி.
இந்தப் படத்தின் தலைப்பு, தலைப்பின் டிசைன் எல்லாம் எங்களைப் பார்த்து காப்பியடித்து வைக்கப்பட்டது என ஒருவர் கேஸ் போட்டு, அதிலிருந்து இப்போதுதான் மீண்டு வந்திருக்கிறார்கள்.
இந்த நிலையில் படத்தின் முதல் அதிகாரப்பூர்வ விளம்பர டிசைன் இன்று வெளியானது. அதில் விஜய் ராணுவ உடையில், காஜல் அகர்வாலைத் தூக்கிக் கொண்டு நிற்கிறார். காஜல் அகர்வால் தலையில் விஜய்யின் மிலிட்டரி தொப்பி.
அப்படி கட் பண்ணுங்க... An Officer and a Gentleman என்று ஒரு படம். 1982-ல் வெளிவந்து பெரும் வெற்றி பெற்ற ஹாலிவுட் படம்.
அதில் ஹீரோ கடற்படை வீரன். தன் காதலியை தூக்கிக் கொண்டு நிற்பார். காதலி தலையில் அவனது கடற்படை தொப்பி!!

50 ஆண்டு சினிமா வாழ்க்கையில் முதல் முறையாக விளம்பரங்களில் நடிக்கும் கமல்!

Written By Unknown on Friday, September 21, 2012 | 9:20 PM

தனது 50 ஆண்டு சினிமா வாழ்க்கையில் முதல் முறையாக விளம்பரங்களில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார் கமல்ஹாஸன்.
50 ஆண்டு சினிமா வாழ்க்கையில் முதல் முறையாக விளம்பரங்களில் நடிக்கும் கமல்! 

நடிகர், நடிகைகள் பலர் நடிக்க வந்த ஒரு சில ஆண்டுகளில் விளம்பர படங்களில் நடித்து பெரும் வருவாய் பார்த்து வருகின்றனர். ஆனால் தமிழ் நடிகர்களில் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் மற்றும் கமலஹாசன் மட்டும் எந்த விளம்பர படங்களையும் ஒப்புக் கொள்ளாமல் இருந்தனர்.

தாங்கள் இத்தகைய விளம்பரங்களில் நடிப்பதால், ரசிகர்களை தவறாக திசை திருப்பவது போலாகிவிடும் என்ற காரணத்தால் இத்தகைய முடிவை மேற்கொண்டிருந்தனர்.

கமல் தற்போது தனது முடிவை மாற்றிக் கொண்டு விளம்பர படங்களில் நடிக்க முடிவு செய்துள்ளார். 50 ஆண்டுகளாக கமல் சினிமாவில் இருக்கிறார். இதுவரை அவர் விளம்பரங்களில் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது முதல் தடவையாக விளம்பர படங்களில் நடிக்க மும்பை நிறுவனம் ஒன்றுடன் ஒப்பந்தம் செய்துள்ளார். இந்த நிறுவனம் மூலம் எற்கனவே இந்தி நடிகர்கள் அமிதாப்பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யாராய், ஷாருக்கான, கரீனாகபூர், பிரியங்கா சோப்ரா போன்றோர் விளம்பர படங்களில் நடித்துள்ளனர்.

சினிமா வாழ்க்கையில் முதல் தடவையாக இந்த முயற்சியில் இறங்குவதாக கமல் தெரிவித்துள்ளார். சமூக சேவையில் அக்கறையுள்ள விளம்பர படங்களுக்கு முன்னுரிமை கொடுத்து நடிக்கப் போவதாக அவர் அறிவித்துள்ளார்.

அல்லயன்ஸ் மீடியா என்ற நிறுவனம்தான் கமலை வைத்து விளம்பரங்களை எடுக்கப் போகிறது. இந்த நிறுவனம்தான் அமிதாப், ஷாரூக், சாயிப் அலிகான், கரீனா என பல பிரபலங்களையும் ஒப்பந்தம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பெரிய படங்களால் நஷ்டம்... காமெடி படங்கள் வசூலுக்கு கியாரண்டி! - சொல்கிறார் கருணாஸ்


காமெடி படங்கள் எப்போதும் நல்ல வசூலைத் தருகின்றன. ஆனால் பெரிய படங்களால் ஏகப்பட்ட நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்கிறார் காமெடியன் கருணாஸ்.
'திண்டுக்கல் சாரதி', 'அம்பாசத்திரம் அம்பானி' படங்களில் நாயகனாக நடித்து வெற்றி பெற்ற கருணாஸ், அடுத்து 'ரகளபுரம்', 'மச்சான்', 'சந்தமாமா' ஆகிய காமெடி படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.
அதே நேரம் மற்ற நடிகர்களுடன் காமெடியனாகவும் நடிக்க தயங்குவதில்லை.
தனது இந்த நிலை குறித்து கருணாஸ் கூறுகையில், "காமெடிப் படங்கள் எப்போதுமே பாதுகாப்பானவை. இந்த ஆண்டு நன்றாக ஓடிய பெரும்பாலான படங்கள் நகைச்சுவையாக அமைந்தவைதான்.
மெகா பட்ஜெட்டில் எடுத்த சீரியஸ் கதையம்சம் உள்ள படங்கள் பல தோல்வி அடைந்துள்ளன. இதனால் ரூ 400 கோடி வரை நஷ்டமானதாகக் கூறுகிறார்கள்.
விலைவாசி உயர்வு, போக்குவரத்து நெரிசல், அலுவலகத்தில் நெருக்கடி போன்ற பல காரணங்களால் டென்ஷனில் உள்ள மக்களை சிரிக்க வைப்பதுதான் என்னைப் போன்றவர்களின் வேலை என நினைக்கிறேன். எனவேதான் நான் காமெடி படங்களில் நடித்து வருகிறேன்.
'ரகளபுரம்' இதுவரை வந்த காமெடி படங்களில் சிறப்பானதாக இருக்கும்," என்றார்.

இறுக்கியணைக்கப் பார்த்த இயக்குநர்... எச்சரிக்கையுடன் தள்ளி நின்ற நமீதா!


டிவி சீரியல்கள் எடுத்து வெற்றி கண்ட கையோடு சினிமா எடுக்க வந்த இயக்குநர் அவர். ஓரிரு படங்கள் எடுத்தார். ஒன்றும் வெற்றியடையவில்லை.
ஆனாலும் வெற்று ஜம்பத்துக்கும் நடிகைகளை உண்டு இல்லை என பாடாய் படுத்துவதிலும் அவர் பலே ஆசாமி.
Namithaa S Technique Avoid Director எந்த நடிகையாக இருந்தாலும் எடுத்த எடுப்பில் இறுக்கி அணைச்சு ஒரு உம்ம தர வேண்டுமாம். எதுக்கு அது என்றால்.. நான் காலை வணக்கம் சொல்லும் முறையே இதுதான் என்பாராம். படப்பிடிப்பு முடியும்போதும் இப்படி இறுக்கி அணைக்கும் படலம் உண்டாம்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன் இவர் ஒரு படத்தை ஆரம்பித்தார். வாய்ப்பு உள்ள, வாய்தா போன நடிகைகள் 9 பேரை கதாநாயகி என அறிவித்துவிட்டார்.
அவர்களில் ஒருவர் நமீதா. உப்புமா கம்பெனி என்றாலும், அவசரத்துக்கு உப்புமாவும் பரவாயில்லை என்று நடிக்க ஒப்புக் கொண்டார்.
படப்பிடிப்புக்கு செல்லும் போதுதான், அவர் காதில் இயக்குநரின் 'இறுக்கியணைச்சு உம்ம தரு' மேட்டரை சொன்னார்களாம்.
அப்படியா சங்கதி என்று கேட்டுக் கொண்ட ஆறடி உயர அம்மணி, செட்டுக்குள் நுழைந்திருக்கிறார். ஹலோ நமீதா டியர் என்று உரக்கச் சொன்னபடி அனைவர் முன்னிலையிலும் கட்டிப்பிடிக்க இயக்குநர் ஓடி வர, நமீதா சட்டென்று இரண்டடி பின் வாங்கி 'வணக்கம் பிரதர்' என்று போட்டாராம் ஒரு போடு!
செம ஷாக்காகிப் போன டைரடக்கர், 'யாரோ செம்மையா போட்டுக் கொடுத்திருக்காங்கப்பா... கட்டிப்புடிக்கலன்னாலும் பரவால்ல.. வாய்க்கு வாய் மச்சான்ஸ் மச்சான்ஸ்னு கூப்புடற அந்தப் பொண்ணு புதுசா பிரதர்னு சொல்லிடுச்சே...!" என்று இரவு முழுக்க புலம்பிக் கொண்டிருந்தாராம்!

பவர் ஸ்டார் சீனிவாசன் கைது... புழல் சிறையில் அடைப்பு!

Written By Unknown on Sunday, September 16, 2012 | 8:02 AM


பவர் ஸ்டார் எனும் நடிகர் சீனிவாசன், ரூ 65 லட்சம் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டார். 15 நாள் நீதிமன்றக் காவலில் புழலில் அடைக்கப்பட்டார்.
Power Star Dr Srinivasan Arrested Cheating Case
பவர் ஸ்டார் சீனிவாசன், லத்திகா பிலிம்ஸ் (பி) லிட் என்ற தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் லத்திகா என்ற படத்தை தயாரித்தார். இந்த படத்தில் அவரே நடிக்கவும் செய்து நடிகராகவும், தயாரிப்பாளராகவும் அறிமுகமானார். மேலும் இந்த படத்தின் மூலம் அவர் பவர் ஸ்டார் என்ற பட்டத்தையும் பெற்றார்.
பவர் ஸ்டார் சீனிவாசன், கடந்த 6 மாதத்திற்கு முன் குரோம்பேட்டை கணபதிபுரம், கிருஷ்ணசாமி தெருவை சேர்ந்த பாலசுப்பிரமணியனை தொடர்பு கொண்டார். இவர் வேலூர் மாவட்டம், ராணிப்பேட்டையில் தோல் தொழிற்சாலை நடத்தி வருகிறார்.
ரூ.65 லட்சம் கமிஷன்
பாலசுப்பிரமணியத்திற்கு வியாபாரத்தில் முதலீடு செய்வதற்காக பிரபல அரசு வங்கி ஒன்றில் 10 கோடி ரூபாய் கடன் பெற்றுத் தருவதாக நடிகர் சீனிவாசன் கூறினார். அதற்காக அவரிடம் இருந்து ரூ.65 லட்சம் கமிஷனாக பெற்றார்.
அதன் பிறகு 2 மாதமாகியும் கடனும் வாங்கி கொடுக்க வில்லை, கமிஷன் தொகையும் திருப்பி கொடுக்க வில்லை. பின்னர் 2 தடவையாக ரூ.15 லட்சம் மட்டும் திருப்பி கொடுத்தார். மீதமுள்ள 50 லட்சம் ரூபாயை திருப்பி கொடுக்க வில்லை.
இது தொடர்பாக பாலசுப்பிரமணியன் கடந்த ஜுலை மாதம் 11-ந் தேதி சென்னை நகர போலீஸ் கமிஷனரிடம் புகார் தெரிவித்தார். இந்த புகார் பற்றி விசாரிக்குமாறு கீழ்ப்பாக்கம் போலீசாருக்கு ஆணையிடப்பட்டது.
மேலும் 2 புகார்கள்
அந்த புகாரின் பேரில் கீழ்ப்பாக்கம் குற்றப்பிரிவு போலீசார் நடிகர் சீனிவாசன் மீது வழக்கு பதிவு செய்து அவரை தேடி வந்தனர்.
இந்த நிலையில் கோவாவை சேர்ந்த வில்சனிடம் ரூ.3 கோடி கடன் பெற்று தருவதாக கூறி ரூ.15 லட்சம் ரூபாய் பணம் மோசடி செய்ததாகவும், மராட்டிய மாநிலத்தை சேர்ந்த தீபக் என்பவரிடம் ரூ.5 கோடி கடன் வாங்கி தருவதாக கூறி ரூ.20 லட்சம் பண மோசடி செய்ததாகவும் மேலும் 2 புகார்கள் நடிகர் சீனிவாசன் மீது தெரிவிக்கப்பட்டன.
நடிகர் சீனிவாசன் கைது
இதனை தொடர்ந்து கீழ்ப்பாக்கம் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கோ.சுப்பிரமணியம் தலைமையில் போலீசார் நடிகர் சீனிவாசனை தீவிரமாக தேடி வந்தனர். நேற்று அவர் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக காரில் சென்று கொண்டிருந்தார்.
அவரது காரை போலீசார் அமைந்தகரை பகுதியில் மடக்கி பிடித்து நடிகர் சீனிவாசனை கைது செய்தனர். பின்னர் கீழ்ப்பாக்கம் போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினர்.
15 நாள் நீதிமன்ற காவல்
விசாரணையின் போது மோசடி செய்த பணத்தை திருப்பி கொடுத்து விடுவதாகவும், 3 மாத கால அவகாசம் வேண்டும் என்றும் நடிகர் சீனிவாசன் கூறினார். ஆனால் புகார் கொடுத்தவர்கள் அதனை ஏற்க மறுத்து விட்டனர்.
பின்னர் கீழ்ப்பாக்கம் போலீசார், அவரை எழும்பூரில் உள்ள 13-வது பெருநகர நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். நீதிபதி நடிகர் சீனிவாசனை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்குமாறு உத்தரவிட்டார். உடனடியாக அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
துப்பாக்கியை காட்டி மிரட்டியதாகவும் வழக்கு
ரூ.85 லட்சம் மோசடி வழக்கில் கைதாகி ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள நடிகர் சீனிவாசன் மீது, 4 சட்டப்பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர், கொலை மிரட்டல், நம்பிக்கைமோசடி போன்ற சட்டப்பிரிவுகளில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அவர் துப்பாக்கியை காட்டி மிரட்டியதாகவும் வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஆனால் போலீஸ் விசாரணையில் தன்னிடம் துப்பாக்கி எதுவும் இல்லை என்று நடிகர் சீனிவாசன் மறுத்தார்.

'ரஜினி-கமலுடன் மீண்டும் நடிப்பேன்' - ஸ்ரீதேவி

Written By Unknown on Sunday, September 2, 2012 | 12:47 PM


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோருடன் மீண்டும் நடிப்பேன், என்று நடிகை .தேவி கூறினார்.
Sridevi Proud Rajini Kamal S Co Sta 14 ஆண்டுகளுக்கு முன் இந்திப் படத் தயாரிப்பாளர் போனிகபூரை காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகளை நாயகியாக்கும் முயற்சியிலும் உள்ளார் ஸ்ரீதேவி.
இந்த நிலையில் 14 வருடங்களுக்குப்பின் அவர், மீண்டும் நடிக்க வந்திருக்கிறார். தமிழ்-இந்தி ஆகிய 2 மொழிகளில் உருவாகும் 'இங்கிலீஷ்-விங்கிலீஷ்' என்ற படத்தின் மூலம் அவர் மறுபிரவேசம் செய்து இருக்கிறார்.
இந்த படத்தின் `டிரைலர்' வெளியீட்டு விழா, சென்னை பி.வி.ஆர். தியேட்டரில் நேற்று மாலை நடந்தது. அதில் கலந்துகொண்ட ஸ்ரீதேவி, நிருபர்களிடம் கூறுகையில், "இத்தனை காலம் நடிக்காமல் இருந்ததற்குக் காரணம், என் மகள்கள் இருவரும் சின்ன குழந்தைகளாக இருந்தார்கள். அவர்களை வளர்க்கும் பொறுப்பு எனக்கு இருந்தது. இப்போது அவர்கள் பெரியவர்கள் ஆகிவிட்டார்கள். அதனால் மீண்டும் நடிக்க ஆரம்பித்து இருக்கிறேன்," என்றார்.
உங்களுக்கு ஜோடியாக நடித்த ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகிய இருவரும் இன்னமும் முதல் நிலை கதாநாயகர்களாக நடித்துக் கொண்டிருப்பது பற்றி என்ன நினைக்கிறீர்கள்? என்று கேட்டபோது, "பெருமையாக உணர்கிறேன்.. அவர்களின் இணையற்ற உழைப்பின் பலன் அது. அவர்களுடன் பல ஆண்டுகள் பணியாற்றியது மகிழ்ச்சியாக உள்ளது," என்றார்.
ரஜினிகாந்த்-கமல்ஹாசன் ஆகிய இருவருடனும் மீண்டும் ஜோடி சேர்ந்து நடிப்பீர்களா?, என்று கேட்டபோது,
"நிச்சயமாக நடிப்பேன். இரண்டு பேரையும் சமீபத்தில் கூட சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தேன். ஆனால் நியாயமாக இதை அவர்களிடம்தான் கேட்க வேண்டும். பொருத்தமான சூழல் அமைய வேண்டும்," என்றார்.

விஜயுடன் டூயட் பாருவாரா ஸ்ருதி?

Written By Unknown on Saturday, July 7, 2012 | 11:54 AM


கௌதம் மேனன் விஜயை வைத்து எடுக்கும் யோஹான்: அத்தியாயம் ஒன்று படத்தில் ஸ்ருதி ஹாசனை நாயகியாக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
கௌதம் மேனன் விஜய் இணையும் படம் யோஹான்: அத்தியாயம் ஒன்று. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக கமல் மகள் ஸ்ருதி ஹாசனை நடிக்க வைக்க அவருடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பார் என்று எதி்ர்பார்க்கப்படுகிறது.
இந்தி படங்களில் கவனம் செலுத்த மும்பையில் குடியேறியுள்ள ஸ்ருதியை கௌதம் மேனன் தமிழகத்திற்கு அழைத்து வர முயற்சி செய்து வருகிறார். விஜய் ஏ.ஆர். முருகதாஸின் துப்பாக்கி படத்தில் பிசியாக இருக்கிறார். அந்த படம் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதே போன்று கௌதம் மேனன் ஜீவா, சமந்தாவை வைத்து நீ தானே என் பொன் வசந்தம் படத்தை எடுத்து வருகிறார். இந்த இரண்டு படங்களும் முடிந்த பிறகு ஆகஸ்ட் மாதத்தில் யோஹான் படப்பிடிப்பு துவங்கும் என்று கூறப்படுகிறது.

SIIMA Awards :2011ன் சிறந்த நடிகர், சிறந்த பின்னணி பாடகர் விருதுகளை அள்ளிச்சென்ற தனுஷ் !

Written By Unknown on Sunday, June 24, 2012 | 7:00 PM

SIIMA AWARDS: 2011 WINNERS
சிறந்த ஒளிப்பதிவாளர்-R.Velraj / Aadukalam

ஒரு துணை பாத்திரம்-சரத் குமார் / காஞ்சனா சிறந்த நடிகர்

ஒரு எதிர்மறை பாத்திரம்-அஜ்மல் / கோ சிறந்த நடிகர்

சிறந்த பாடலாசிரியருக்கான-நா முத்து குமார் / பாடல் - Un pera Theriyathe, திரைப்படம் - Engeyum Eppothum

சிறந்த இசையமைப்பாளர்-G.V.Prakash / Aadukalam

சிறந்த பின்னணி பாடகர் (பெண்) Chinmayi / பாடல் - சாரா சாரா, திரைப்படம் - Vaagaisoodva

சிறந்த பின்னணி பாடகர் (ஆண்) தனுஷ் / பாடல் - என்பது voda என்பது voda, திரைப்படம் - Mayakkam Enna

சிறந்த நகைச்சுவை நடிகர்-சந்தானம் / Vaanam

சிறந்த அரங்கேற்றாளர் பெண்-ஹன்சிகா மோட்வானி / மாப்பிள்ளை

சிறந்த அரங்கேற்றாளர் ஆண்-Sharvanand / Engeyum Eppothum

சிறந்த அரங்கேற்றாளர் இயக்குனர் எம். சரவணன்-Engeyum Eppodhum

வாழ்க்கை நேரம் சாதனையாளர் விருது-Ambreesh

Specoal பாராட்டு-பேபி AneySIIMA ஸ்ரீ-முரளி மோகன்

சிறந்த நடிகைக்கான-அசின் / தலைவன்

சிறப்பு சாதனையாளர்-ரிச்சா கோபாத்யா / Mayakkam Enna

சிறந்த நடிகருக்கான-தனுஷ் / AadukalamActor -

சிறப்பு சாதனையாளர்-விக்ரம் / Deiva Thirumagal

சிறந்த இயக்குனர் வெற்றிமாறன் / Aadukalam

சிறந்த திரைப்படம் கோ - Elred குமார், ஜெயராமன் / ஆர்எஸ் இன்போடெயின்மென்ட்

கருணாநிதியுடன் ரஜினி திடீர் சந்திப்பு

Written By Unknown on Saturday, June 16, 2012 | 3:47 PM


திமுக தலைவர் கருணாநிதியை நடிகர் ரஜினிகாந்த் இன்று திடீரென சந்தித்து பேசினார். திமுக தலைவர் கருணாநிதிக்கு கடந்த 3-ம் தேதி 89-வது பிறந்தநாள். அப்போது அவருக்கு நடிகர் ரஜினிகாந்த் தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தார். இந்நிலையில், இன்று காலை 10.45 மணிக்கு சென்னை கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதி வீட்டுக்கு நடிகர் ரஜினிகாந்த் திடீரென வந்தார். அங்கு கருணாநிதியை சந்தித்து பேசினார். அப்போது கருணாநிதிக்கு ரஜினி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். இருவரும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தனர். பின்னர் வெளியே வந்த ரஜினியிடம், சந்திப்பு குறித்து நிருபர்கள் கேட்டனர். அதற்கு பதிலளித்த அவர், ‘மரியாதை நிமித்தமாக கருணாநிதியை சந்தித்தேன். நாங்கள் வேறு எதுவும் பேசவில்லை’ என்றார்.
 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. R News - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger