R News: சுவாரசியம்
Headlines News :
Powered by Blogger.

Latest Post

Showing posts with label சுவாரசியம். Show all posts
Showing posts with label சுவாரசியம். Show all posts

யாழ் நெடுந்தீவில் 40 அடி உயர மனிதனின் பாதச்சுவடு

Written By Unknown on Sunday, June 23, 2013 | 10:18 AM

யாழ்ப்பாணம் நெடுந்தீவு பிரதேசத்தில் மனித பாத சுவட்டினை ஒத்தமாதிரியான கற்பாறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
சுமார் 40 அடி மனிதனின் பாதச் சுவட்டினை ஒத்த பாதச்சுவட்டைப் பார்ப்பதற்காக சுற்றுலாப் பயணிகள் உட்பட பெருமளவானோர் அப்பகுதிக்கு படையெடுத்து வருகின்றனர்.
இந்த பாதச்சுவடு உருவாக்கியமைக்கு விஞ்ஞான ரீதியிலும் வரலாற்று ரீதியிலும் பல்வேறு காரணங்கள் தெரிவிக்கப்படுவதாக நெடுந்தீவு பிரதேச செயலாளர் ஆழ்வார்பிள்ளை சிறி தெரிவித்துள்ளார்.
பாறைகள் சிதைவடைந்து இந்த சுவடு உருவானதாக தெரிவிக்கப்படுகின்றது.
40 அடி மனிதன் ஒருவன் காலை வைத்ததால் உருவானதாகவும் இராமாயணப் போர் நடைபெற்றபோது அனுமான் மலையைத் தூக்கிக்கொண்டு வரும் போது அவர் வைத்த பாதச்சுவடு என்றும் பல்வேறு கதைகள் இது தொடர்பாக தெரிவிக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

Oppan Gangnam Style : இணைய வரலாற்றில் புதியதோர் சாதனை

Written By Unknown on Sunday, March 24, 2013 | 8:13 AM


உலக அழிவு அச்சத்தில் உலகமே அதிர்ச்சியில் உறைந்தாலும் யூடியூப்பில் 1 பில்லியன் தடவைக்கு அதிகமாக அதிர்ந்தே தீருவேன் என கங்கணம் கட்டி சாதனைமிகு மைல்கல்லை எட்டிப்பிடித்துள்ளது Oppan Gangnam Styleபாடல்.

பப்பா பப்பா
பப்பா பப்பா
பாப்பாப பா பபப... என கொலைவெறியாக்கிக் கொண்டிருந்த Y this Kolawery பாடலை எம்மவர்களிடம் மறையச்செய்ததோடு உலக நாடுகளில் ஒவ்வொரு பிரதேசத்திலும் பிரபல்யமாக இருந்த பாடல்களை பின் தள்ளிய இந்த கங்ணம் பாடல் மாயன் நாட்காட்டி முடிவுக்கு வந்த நாளான்று யூடியூப் வரலாற்றில் மட்டுமன்றி இணைய வரலாற்றிலேயே புதியதோர் சாதனையை ஆரம்பித்தது இந்த கங்ணம் பாடல்.

அதாவது கடந்த 21.12.2012 அன்று இலங்கை நேரப்படி இரவு 9.20 மணியளவில் உலகமே உலக அழிவைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்க யூடியூப்பில் பாடல் 1 பில்லியனாவது தடவை பார்க்கப்பட்ட முதலாவது வீடியோவாக பாதிவாகி புதியதோர் சாதனைபடைத்தது. மேலும் யூடியூப்பில் அதிக 'டுமைநள' பெற்ற வீடியோவாகவும் கிண்ணஸ் உலக சாதனை படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தற்போது எங்கும் எதிலும் கங்ணம் என்றாகிவிட்ட சமாதானத்திற்குரிய பாடலான Oppan Gangnam Style பாடல் PSY 6 என்ற தொகுப்பில் இடம்பெற்ற ஒரு பாடலே. இப்பாடலை (பார்க் ஜெய்-சேங்) Park Jai-Sang, (யூ கன்-ஹையுங்) Yoo Gun-Hyung எனும் இருவரே எழுதி தயாரித்தனர். இதில் பார்க் ஜெய்-சேங் என்பரே வீடியோவில் தோன்றி நடனமாடியுள்ளார்.

கங்ணம் என்பது கொரியாவிலுள்ள Seoul எனும் பிரதேசத்திலுள்ள ஒரு இடத்தின் பெயர். Oppan Gangnam Style என்பதனை ஆங்கிலத்தில் 'Big Brother is Gangnam Style' எனவும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இதில் வரும் Opppa என்ற சொல் கொரிய நாட்டில் பெண்களால் வயதான சகோதரன் அல்லது வயதான ஆண் தோழர்களை அழைக்கும் வார்த்தை.

மேலும் இப்பாடலானது கங்ணம் பிரதேசத்திலுள்ள மக்களின் வாழ்க்கையை விளக்கும் வகையில் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கங்ணம் பிரதேசத்திலுள்ள மக்கள் தங்களால் நிச்சயமாக முடியாது என்று தெரிந்த வேலைகளைக் கூட வீம்புக்காக செய்துகாட்ட கங்கணம் கட்டிக்கொண்டு அலைவார்களாம். அவ்வாறான கொள்கையுடன் இருக்கும் அந்த பிரதேசத்து மக்களை கிண்டல் செய்ய நகைச்சுவையாக எடுக்கப்பட்டதே இந்த கங்ணம் பாடல். (அதான் நம்ம ஏரியாவிலும் இந்த பாட்டு ரொம்ப பேமஸோ...)

கடந்த ஜுலை மாதம் 15ஆம் திகதி வெளியான இப்பாடல் ஆரம்பத்தில் கொரியாவிலும் மேலும் ஒரு சில நாடுகளிலே பிரபல்யமாகி இருந்தது. இருப்பினும் சில வாரங்கள் கழித்தே உலக நாடுகளில் உச்சக்கட்ட வரவேற்பினை பெறத் தொடங்கியது. குறிப்பாக 09.15.2012 பின்னரே ஏனெனில் அதுவரையில் சுமார் 250 மில்லியன் தடவைகள் மட்டுமே யூடியூப்பில் பார்வையிடப்பட்டிருந்த கங்ணம் அடுத்த 3 மாதங்களில் மட்டும் 750 மில்லினுக்கும் அதிக தடவைகள் பார்வையிடப்பட்டுள்ளது.

இவ்வாறு திடீரென இந்த பாடல் உலக நாடுகளில் பிரபல்யமாவதற்கு இப்பாடலிலுள்ள ஈர்ப்பு ஒரு காரணம் என்பது மறுப்பதற்கில்லை. என்றாலும் குறிப்பாக இந்தியா, இலங்கை, பங்களதேஷ் மற்றும் இன்னும் சில ஆசிய நாடுகளிலுள்ளவர்களை முணுமுணுக்கச் செய்த பெருமை நடந்து முடிந்த ரீ20 உலக்கிண்ண போட்டிகளும் கிறிஸ் கைலும் என்பது உறுதி.

கிறிஸ் கைலின் கங்ணம் நடனத் தொடர்ந்து கங்ணம் என்ற வார்த்தை பயன்படுத்ததா ஊடகங்களே இல்லை எனலாம். அந்தளவிற்கு கைலையும் கங்ணத்தையும் இணைத்து செய்திகள் அப்போது வெளியானதை நீங்களும் பார்த்திருப்பீர்கள்.

இதனைத் தொடர்ந்து ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பாங்கி மூன் இப்படலை உலக சமாதானத்திற்காக பாடலாக இனம் கண்டு உத்தியோகபூர்வ அறிவித்து அந்ந நிகழ்வில் கங்ணம் நடத்தையும் ஆடினார். இவர் தவிர அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, பிரித்தானி பிரதமர் டேவிட் கெமரூன் உள்ளிட்ட பல அரசியல் பிரமுகர்களும் கிரிக்கெட், உதைபாந்தாட்ட வீரர்களும் சில முக்கிய நிகழ்வுகளில் கங்ணம் நடத்தை ஆட கங்ணம் அனைவரது மனதிலும் ஆளப்பதிய காரணமாயிற்று. இதனால் உலகின் பல பாகங்களிலும் கங்ணம் பாடல் கவனத்திற்குரிதாக மாறியது.

இப்பாடலின் வெற்றியினைத் தொடர்ந்து மோர்பிங் மூலம் ஏராளமான பதிப்புக்கள் வெளியானது. இதில் உலக அரசியல், சினிமா, விளையாட்டு, அறிவியல் என அனைத்து துறையிலும் மக்களை ஆட்கொண்டவர்களை பயன்படுத்தியதில் இந்த கங்ணம் மக்களை இலகுவாக ஆட்கொள்ளும் வாய்ப்பு அதிகரித்தது.

மேலும் கங்ணம் பாடலை வைத்து அரசியல் குறும்படம், உலக அழிவை விளக்கும் படம் என பல்வேறு இடங்களில் தாக்கம் செலுத்தி வெற்றி கொடி நட்டு உலகறிந்த நபராக மாறியுள்ள PSY என்றழைக்கப்படும் பார்க் ஜெய்-சேங் இது தொடர்பில் கூறுகையில்,

கங்ணம் பிரதேசத்திலுள்ள மக்கள் தங்களால் நிச்சயமாக முடியாது என்று தெரிந்த வேலைகளைக் கூட வீம்புக்காக செய்துகாட்ட கங்கணம் கட்டிக்கொண்டு அலைவார்களாம். அவ்வாறான கொள்கையுடன் இருக்கும் அந்த பிரதேசத்து மக்களை கிண்டல் செய்ய நகைச்சுவையாக எடுக்கப்பட்டதே இந்த கங்ணம் பாடல்.

ஆரம்பத்தில் இதற்காக பல்வேறு மிருகங்களின் அசைவுகளை நடமாக்க முயற்சித்து இறுதியில் குதிரையின் அசைவுகளை நடனமாக்கினோம். அந்த குதிரை மிகப் பெரும் வெற்றியீட்டிக்கிறது என்றார்.

இந்த வெற்றியை அவுஸ்திரேலியா, கனடா, பிரான்ஸ், ஜேர்மன், சீனா, ஜப்பான், இத்தாலி, ரஷ்யா, இங்கிலாந்து போன்ற நாடுகள் உட்பட 30 மேற்பட்ட நாடுகளின் பாடல் தரவரிசைப்படுத்தலில் தொடர்ச்சியாக பல வாரங்கள் நீடித்து அத்தாட்சிப்படுத்தியது கங்ணம்.

உண்மையில் இப்பாடலை பார்த்த, கேட்ட அனைவரினதும் ஏகோபித்த முடிவு இந்த பாட்டுல ஏதோ இருக்கத்தான் செய்யுது நீங்களே கொஞ்சம் கேட்டுப்பாருங்க... என்பதுதான்.

இவ்வாறு குதிரையில் உலகைச் சுற்றி வெற்றி கண்டிருக்கும் கங்ணம் நடனத்தை புது வருடப்பிறப்பன்று ஜேர்மன் நாட்டு தலைநகரான பேர்லினிலுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க பிரண்டர்பேர்க் வாசலில் 1 மில்லின் பேர் ஒன்றாக கங்ணம் நடனமாடி புதுவருடத்தினை வரவேற்றுள்ளனர். அவர்களுடன் சேர்ந்து நாமும் வருடப்பிறப்பை ஆரம்பிப்போம் Oppan Gangnam Style...

-அமானுல்லா எம். றிஷாத்

இக்கட்டுரையானது 25.01.2013 திகதியன்று மெட்ரோ நியூஸ் பத்திரிகையில் பிரசுரமாகியுள்ளது.


மார்பகங்களிடையே காதலனை அழுத்தி கொலை முயற்சி

Written By Unknown on Sunday, March 3, 2013 | 6:10 PM


ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த பெண்ணொருவர் தனது காதலனை உடலுறவின் போது மார்பகங்களிடையே அழுத்தி, மூச்சுத் திணறக்  கொலை செய்ய முயற்சித்ததாக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஜேர்மனியின் உன்னா நகரைச் சேர்ந்த கெரின் என்ற பெண் அவரது காதலரான அன்ட்ரியல் கொல்லர் (33) என்பவரை உடலுறவின்போது கொலை செய்ய முயற்சித்துள்ளார். இதன்போது குறித்த பெண் தனது மார்பங்களால் மூச்சுத் திணற காதலனை அழுத்தியுள்ளார். இதிலிருந்து கொல்லர் தப்பியுள்ளார். தொடர்ந்து அவரின் கழுத்தை நெரித்து கெரின் கொல்ல முயற்சித்தாக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஆனால் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட இவ்வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ஏனெனில் குறித்த பெண்ணிற்கு மனநலப் பிரச்சினை இருப்பதாக நீதிமன்றில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கொல்லர் கூறுகையில், நான் கெரினை இன்னும் முழு மனதோடு காதலிக்கிறேன். அவருக்கு தண்டனை வழங்க வேண்டுமென நான் கேட்கவில்லை. கெரினுக்கு மனநல பரிசோதனைகளும் அதற்கான சிகிச்சைகளுமே அளிக்கப்பட வேண்டும் என தான் விரும்புகிறேன் எனக் கூறியுள்ளார். 

சில மாதங்களுக்கு முன்னர் அமெரிக்காவிலும் இது போல ஒரு சம்பவம் நிகழ்ந்தது. ஆனால் அது திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டதுடன் அதில் ஆண் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

நீங்கள் காணும் கனவுகளின் பலன்களை தெரிஞ்சுக்கனுமா?

Written By Unknown on Saturday, March 2, 2013 | 1:24 PM


நாம் காணும் ஒவ்வொரு கனவுகளுக்கும் பலன் உண்டு என்று என் பாட்டி சொல்ல கேட்டிருக்கிறேன். ஆனால் எதை கனவில் கண்டால் என்ன பலன் என்று தெரியவில்லை. சமீபத்தில் நான் படித்த ஒரு புத்தகத்தில் கனவுகளும், அதன் பயன்களையும் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதில் நான் படித்ததை உங்களுடன் பகிர்கிறேன்.
அதிலும் நாம் கண்ட கனவின் நேரத்தை பொருத்து அதன் பயன்கள் அமையுமாம்.
இரவில் மாலை 6 – 8.24 மணிக்குள் கண்ட கனவு 1 வருடத்திலும், இரவு 8.24 – 10.48 மணிக்குள் கண்ட கனவு 3ம் மாதத்திலும், இரவு 10.48 – 1.12 மணிக்குள் கண்ட கனவு 1 மாதத்திலும், இரவு 1.12 – 3.36 மணிக்குள் கண்ட கனவு 10 தினங்களிலும், விடியக்காலை 3.36 -6.00 மணிக்குள் கண்ட கனவு உடனேயும் பலிதாகும் என்று ‘பஞ்சாங்க சாஸ்திரம்’ சொல்கிறதாம். பகலில் காணும் கனவுக்கு பயனில்லையாம்.

நற்பலன் தரும் கனவுகள்

  • v  ஒன்றுக்கு மேற்பட்ட நட்சத்திரங்களை கனவில் கண்டால் பதவி உயர்வு நிச்சயம் உண்டு.
  • v  வானவில்லை கனவில் கண்டால் பணம், செல்வாக்கு அதிகரிக்கும். பதவி உயர்வு கிடைக்கும்.
  • v  கனவில் நிலவை கண்டால் தம்பதிகளிடையே அன்பு பெருகும்.
  • v  விவசாயிகள் உழுவதைப்போல் கனவு கண்டால், சேமிப்பு மேலும் பெருகும்.
  • v  திருமணமாகாதோர் பாம்பு கடித்து ரத்தம் வருவது போல் கனவு கண்டால், சீக்கிரம் திருமணம் நிகழும். திருமணமானோருக்கு செல்வம் வந்து சேரும்.
  • v  ஆசிரியர் பாடம் நடத்துவதைப் போல் கனவு கண்டால் நாம் நினைத்தது எல்லாம் நிறைவேறும்.
  • v  இறந்தவர்களின் சடலத்தைக் கனவில் கண்டால் சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும்.
  • v  சிறு குழந்தைகளை கனவில் கண்டால் நோயிலிருந்து விடுதலை கிடைக்கும்.
  • v  நண்பன் இறந்ததாக கனவு கண்டால் நண்பனின் ஆயுள் கூடும்.
  • v  தெய்வங்களை கனவில் கண்டால் புதையல் கிடைக்கும்.
  • v  இறந்தவருடன் பேசுவதைப் போன்று கனவு கண்டால் அதிகாரம் ,பதவி, லாபம் நிச்சயம் கூடி வரும்.
  • v  திருமண கோலத்தை கனவில் கண்டால், சமூகத்தில் நன்மதிப்பு உயரும்.
  • v  தற்கொலை செய்து கொள்வதை போல் கனவு கண்டால் நொருங்கி வந்த ஆபத்துகள் நீங்கி, நன்மை பிறக்கும்.
  • v  உயரத்தில் இருந்து விழுவது போல் கனவு கண்டால் பணம், பாராட்டு குவியும்.
  • v  கர்ப்பிணியை கனவில் கண்டால் பொருள் வந்து சேரும், நலம் அதிகரிக்கும்.
  • v  ஆமை, மீன், தவளை போன்ற நீர்வாழ் உயிரினங்களை கனவில் கண்டால் கவலைகள் பறந்து போகும், நெஞ்சிலே நிம்மதி பிறக்கும்.
  • v  மயில், வானம் பாடியை கனவில் கண்டால் தம்பதிகளிடையே நெருக்கம் அதிகரிக்கும்.
  • v  கழுதை, குதிரையை கனவில் கண்டால் வழக்குகள் சாதகமாக முடியும்.
  • v  மாமிசம் உண்பது போல் கனவு கண்டால் பெரிய அதிர்ஷ்டம் அடிக்கும்.
  • v  வாத்து, குயிலை கனவில் கண்டால் நம் முயற்சிகள் எளிதில் வெற்றி  பெரும்.
  • v  மலத்தை மிதிப்பதை போல் கனவில் கண்டால் சுபச்செலவுகள் ஏற்படும்.

தீய பலன் தரும் கனவுகள்

  • v  பூனையை கனவில் கண்டால் வியாபாரத்தில் திடீர் என நஷ்டம் ஏற்படும்.
  • v  தேனீக்கள் கொட்டுவதை போல் கனவில் கண்டால் வீண் செலவுகள் ஏற்படும், குடும்பம் பிரியும்.
  • v  எறும்புகளை கனவில் கண்டால் மன கஷ்டம் பொருள் நட்டம் உண்டாகும்.
  • v  எலிகளை கனவில் கண்டால் எதிரிகள் பலம் பெருகும்.
  • v  இடியுடன் மழை பெய்வதைப் போல் கனவில் கண்டால், உறவினர்கள் விரோதியாவார்கள்.
  • v  பசு நம்மை விரட்டுவதை போல் கனவில் கண்டால் உடல் நலம் கெட்டு வியாதி சூழும்.
  • v  புயல் காற்று, சூறாவளி ஆகியவற்றை கனவில் கண்டால் நோய் உண்டாகும்.
  • v  குதிரையில் இருந்து விழுவதை போல் கனவு கண்டால் கொடிய வறுமை வரும், செல்வாக்கு சரியும்.
  • v  நோய் பீடித்ததாக கனவு கண்டால், நண்பர் ஏமாற்றுவார்.
  • v  ஊனமாவதை போன்று கனவு கண்டால் சோகமான செய்தி வந்து சேரும்.
  • v  நிர்வாண கோலத்தை கனவில் கண்டால், அவமானம் தேடி வரும்.
  • v  முட்டை சாப்பிடுவது கனவு கண்டால் வறுமை பிடிக்கும்.
  • v  முத்தமிடுவது போல் கனவு கண்டால் செல்வாக்கு சரியும்.
  • v  சமையல் செய்வது போல் கனவு கண்டால் அவமானம் வந்து சேரும்.
  • v  பழம் சாப்பிடுவது போல் கனவு கண்டால் நண்பர்களால் ஏமாற்றப்படுவீர்கள்.
  • v  காக்கை கத்துவது போல் கனவு கண்டால் திருட்டு நடக்க வாய்ப்புள்ளது.

நன்றி,
ராஜன்
இனிய நல்வாழ்க்கை வழிகாட்டி)

முருங்கைக் காயைக் கொண்டு காமத்தை அதிகரிப்பது எப்படி?

Written By Unknown on Saturday, February 23, 2013 | 10:58 AM

வயகரா!!! இந்த வார்த்தை இந்தியா மட்டுமின்றி உலக நாடுகள் அனைத்திலும், உலக மக்கள் அனைவருக்கும் தெரிந்த பிரபலாமான வார்த்தை. திடீரென்று உடனடி நடவடிக்கையாக உணர்ச்சி நரம்புகளைத் தூண்டி, காமத்தை அனுபவிக்க உதவும் ஒரு மருந்தின் பெயர் தான் வயாகரா. இவ்வயகரா மாத்திரைக்கு எவ்வளவு அதிக வேகமும், அதிக சக்தியும் உள்ளதோ அவ்வளவு வேகமாக மனிதனின் ஆரோக்கி யத்தை அழிக்கும் சக்தியும் உண்டு என்பதும் உண்மை.வருங்காலத்தில் மருத்துவ உலகம் ஆராய்ந்து, அனுபவித்த பின் வயகராவிற்குத் தடை விதிக்காமல் இருக்க முடியாது என்பதும் உண்மை.

முருங்கையும், மூலிகையும் வயகராவை விட இரண்டு மடங்கோ 100 மடங்கோ, இல்லை ஆயிரம் மடங்கு சிறந்தவை ஆகும்.முருங்கையின் அனைத்து உறுப்புகள் மற்ற மருந்துப் பொருளோடு சேர்ந்தால் வயகராவை விட பன்மடங்கு பயனளிக்கிறது. உறவில் முருங்கையின் பங்களிப்பு மகத்தானது. 

ஆண்மை அதிகரிக்க : 

முருங்கைக் கீரை, முருங்கைப்பூ, இவ்விரண்டையும் சம அளவில் சேர்த்து, சிறு துண்டுகளாக வெட்டி, வதக்கி, பொரித்து, அதில் வேர்க்கடலையை வறுத்துப் பொடி செய்து, தூவி உணவுடன் சேர்த்துண்ண ஆண்தன்மை அதிகரிக்கும்.. விறைப்பு நீடிக்கும், வேகமும் பெருகும், வானளவு இன்பத்தைப் பெண்ணுக்கு வாரி வழங்கிட ஆண்தன்மை வந்து துள்ளும், கீரையும், பூவும் சம அளவில் சேர்த்து, வேகவைத்து கடைந்து குழம்பாகவும் உபயோகிக்கலாம்.

விந்து விருத்தியாக : 

முருங்கைப் பூ 10, சுத்தமான பசும்பாலில் சேர்த்து, காய்ச்சி இரவு படுக்கும்போது குடிக்க, விந்து விருத்தியாகும், தேகம் பலம் பெறும், அத்துடன் பேரீச்சம்பழம் சேர்த்துச் சாப்பிட, விந்து விருத்தியாவது மட்டுமின்றி விந்து கெட்டியாகும். விந்து சீக்கிரம் முந்தாமலும் இருக்கும். தெவிட்டாத தேன் உண்டது போல், தீராத தாகம் தீர்ந்தது போல், ஆனந்தக் கடலில் ஆண், பெண் மூழ்கலாம்.

காமம் பெருக :

முருங்கைப் பூவை உணவாகவோ, மருந்துகளில் சேர்த்தோ, பச்சையாகவோ எந்த விதத்தில், எந்த மாதிரி உபயோகப்படுத்தினாலும், உண்டபின் உடலில் காமத்தைப் பெருக்கும். இச்சையைத் தூண்டும். பச்சையாக நான்கு பூவை தினம் இருவேளை மென்று திண்ணலாம். அரைக்கீரையுடன் அரை பங்கு முருங்கை பூ சேர்த்துக்கடைந்து, சோற்றுடன் சாப்பிடலாம். காமம் பெருகும், வயகரா உண்டால், காமஉணர்ச்சி வந்து, உடன் போய்விடும். ஆனால் இந்த இயற்கை வயகரா உண்டால், அணையில் நீர்த்தேக்கம் போல் காம உணர்ச்சி அப்படியே அலைமோதி நிற்கும். வயகரா உண்டவருக்கு ஒருவித மின்சாரம் தாக்கியது போன்ற காம வலிப்பு வந்து போய்விடும். ஆனால் இந்த முருங்கை வயகரா உண்டால் உடலிலுள்ள 72,000 நரம்புகளிலும் இன்பக் களிப்பு ஏகாந்த நடனமிடும்.


உடலுறவில் மகிழ்ச்சி நீடிக்க : 

முருங்கையின் இளம் பிஞ்சுக் காயைக் கொண்டு வந்து அனலில் காட்டி, சாறு பிழிந்து குடிக்க, காம உணர்வு பெருகும், மனையாளுக்கு பெருமகிழ்ச்சி அளிக்குமளவு உடலுறவில் இன்புறல் நீடிக்கும். சிலருக்கு மனைவியோடு எவ்வளவு நேரம் பேசிக் கொண்டு, விளையாடிக் கொண்டிருந்தாலும் உடலுறவில் ஈடுபட்டால் ஒரு நிமிடத்தில் விந்து வெளியாகி விடும். இதனால் அவர்கள் மிகுந்த வேதனைப்படுவர். இப்படிப்பட்டவர்களுக்கு இம்முறை சிறந்த பலனளிக்கும்.

உறவில் பரவசம் பெருக: 

முருங்கைக் கீரையைப் பொடியாக அரிந்து, அதில் கேரட் திருவி போட்டு, பசு நெய் விட்டு, பொரித்து, இறுதியில் முட்டையை அதில் ஊற்றி கிளறி, பொரித்துண்ண ஆண்கள் பாலுறவில் பரவசமடைவர். ஆண்மை அதிகரித்து ஆனந்தம் அடைவர். இல்லாள் கணவன்மீது ஈடில்லா பாசமும், மதிப்பும் கொள்வாள். இல்லற சுகத்தில் இருவரும் ஒரு நிலையில் உல்லாசம் காண்பர்.

பாலியல் உறவு வைக்க ஆர்வமுள்ள நண்பர்களை இணைக்கும் பேஸ்புக்கின் புதிய அப்ளிக்கேஷன்

Written By Unknown on Tuesday, January 29, 2013 | 3:07 PM

மில்லியனைத் தாண்டி பில்லியன் கணக்கான பாவனையாளர்களைக் கொண்டுள்ள சமூகவலையமைப்பு பேஸ்புக். பேஸ்புக்கில் இலட்சக்கணக்கான அப்ளிகேசன்கள் உள்ளன. இவற்றில் பயன் மிக்க, பொழுதுபோக்குவன என பல ரகங்கள் உண்டு. அதேபோல சில அப்ளிகேசன்கள் சர்ச்சையையும் ஏற்படுத்தி விடுவன. அவ்வகையில் சர்ச்சையை ஏற்படுத்தும் புதிய அப்ளிகேசன் தொடர்பான செய்தியே இது.ஆம், பேஸ்புக் நண்பர்களிடையே பாலியல் உறவு வைத்துக்கொள்ள ஆர்வமுள்ளோரை இணைக்கும் புதிய அப்ளிகேசன் ஒன்று சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இவ் அப்ளிகேசனின் பெயர் Bang with Friends . இதனூடாக உறவு வைத்துக்கொள்ள ஆர்வமாக உள்ள எதிர்பால் நண்பர்களை அடையாளங் கண்டுகொள்ளமுடியும் என இதன் உருவாக்குனர்கள் தெரிவித்துள்ளனர்.

இவ் அப்ளிகேசன் செயற்படும் விதம் சற்று சுவாரஸ்யமானது அதாவது இதனூடாக பாவனையாளர்கள் தங்களது பேஸ்புக் நண்பன் அல்லது நண்பிக்கு உறவுக்கு தான் விருப்பமாக இருப்பதாக கோரிக்கையொன்றை விடுக்க முடியும்

ஆனால் அக்கோரிக்கை உடனே அவர்களுக்கு தெரியப்படுத்தப்படமாட்டாது மாறாக அதேநபரும் உங்களுக்கு கோரிக்கை விடுப்பாராயின் இருவருக்கும் இவ்விடயம் தொடர்பில் அறிவுறுத்தல் விடுக்கப்படும்.

இதுவரை சுமார் 2500 இற்கும் அதிகமானோர் இவ் அப்ளிகேசனை உபயோகப்படுத்த ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் இவ் அப்ளிகேசனில் பல குறைபாடுகள் இருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும் இதற்கு சமூக ஆர்வலர்களின் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.

செயற்கை இரத்தம் உருவாக்கி இந்திய விஞ்ஞானிகள் சாதனை

Written By Unknown on Sunday, January 13, 2013 | 3:12 PM

உயிர்களை காக்க உதவும் இரத்தத்தினை செயற்கையாக உருவாக்கி சாதனை படைத்துள்ளனர் சென்னை ஐ.ஐ.டி விஞ்ஞானிகள். இந்த இரத்தம் நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 

விபத்துக்களில் சிக்குபவர்களுக்கு அறுவை சிகிச்சையின் போது ரத்தம் தேவைப்படுகிறது. இதற்காக இரத்த தானம் செய்பவர்களையோ, ரத்த வங்கிகளையோ நாடவேண்டியுள்ளது. ஒரு சிலருக்கு குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்டவகை இரத்தம் கிடைப்பதில்லை. இதனைக் கருதியே இந்த செயற்கை இரத்தம் உருவாக்கப்பட்டுள்ளது. 

இந்த முயற்சியில் சென்னை ஐ.ஐ.டி விஞ்ஞானிகள் ஈடுபட்டனர். ஆய்வில் வெற்றி டாக்டர் சோமா குகதகுர்தா தலைமையிலான குழுவினரின் ஆராய்ச்சிக்கு மத்திய அமைச்சகத்தின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை நிதி ஒதுக்கியது. தொடர்ந்து மூன்றாண்டுகளாக அவர்கள் செய்த ஆராய்ச்சியின் பலனாக செயற்கை இரத்தத்தினை விஞ்ஞானிகள் குழு கண்டறிந்துள்ளனர். 

இந்த செயற்கை இரத்தம் தயாரிப்பு சோதனை குறித்து விளக்கமளித்த டாக்டர் சோமா கூறுகையில், 'இரத்தம் தேவைப்படுபவரின் ஸ்டெம் செல்களில் இருந்து பாதிக்கப்பட்டவருக்கு தேவையான இரத்த செல்கள் தயாரிக்கப்படும். இந்த செயற்கை இரத்தம், இரத்த வங்கிகளில் இருந்து வாங்கும் இரத்தத்திற்கு ஆகும் செலவில் பாதி மட்டுமே செலவாகும். அடுத்த ஐந்தாண்டுகளில் இந்தியாவின் அனைத்து இரத்த வங்கிகளிலும் செயற்கை இரத்தம் எளிமையாக கிடைக்கும் எனவும் டாக்டர் சோமா தெரிவித்துள்ளார். 

'நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது இதுவரை இரத்த வெள்ளை அணுக்களை 40 சதவீதம் உற்பத்தி செய்யும் சோதனைகளே நடைமுறையில் இருந்து வந்தது. இந்த செயற்கை இரத்தம் நோய் எதிர்ப்பு சக்தி கொண்டதாகவும், பாதுகாப்பான அதேசமயம் நோய்த்தொற்று இல்லாததாகவும் இருக்கும். அறுவை சிகிச்சைகளின் போதும் இவற்றை பயன்படுத்த முடியும்' என்றும் டாக்டர் சோமா நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

செயற்கை இரத்தம் விலங்குகளில் பரிசோதனை செய்யப்பட்ட பிறகு மனிதர்களில் சோதனைக்கு உட்படுத்தப்படும். இதன் மூலம் விபத்துக்களின் போது போதிய இரத்தம் இல்லாததால் ஏற்படும் உயிரிழப்புக்கள் பெருமளவில் குறைய வாய்ப்பு உள்ளது. இறுதி கட்ட சோதனைகள் வெற்றி பெற்ற பிறகு செயற்கை இரத்தத்தை பெருமளவில் தயாரிக்க ஐ.ஐ.டி.யின் பயோ டெக்னாலஜி துறை தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

சீனாவில் 220 அடுக்கு மாடிகளுடன் உலகிலேயே மிக உயரமான கட்டிடம்

Written By Unknown on Sunday, November 25, 2012 | 11:39 AM


சீனாவில் 220 அடுக்கு மாடிகளுடன் உலகிலேயே மிக உயரமான கட்டிடம் கட்டப்படுகிறது. தற்போது உலகிலேயே மிக உயரமான புர்ஜ் கலீபா என்ற கட்டிடம் துபாயில் உள்ளது. இதன் உயரம் 828 மீட்டர் ஆகும். இந்த சாதனையை முறியடிக்கும் வகையில் சீனா சாங்ஷா நகரில் இதை விட மிக உயரமான கட்டிடத்தை கட்டுகிறது. இது 838 மீட்டர் உயரம் அதாவது 2,749 அடி உயரம் கொண்டதாக இருக்கும். 

220 அடுக்கு மாடிகளை கொண்ட இக்கட்டிடம் முழுவதும் ஏர்கண்டிசன் (குளு குளு வசதி) செய்யப்பட உள்ளது. துபாயில் உள்ள புர்ஜ் கலீபா கட்டிடத்தை கட்ட 5 ஆண்டுகள் ஆனது. ஆனால் இக்கட்டிடம் 90 நாட்களில் கட்டி முடிக்கப்பட உள்ளது. 

அடுத்த ஆண்டு ஜனவரி தொடக்கத்தில் கட்ட தொடங்கி மார்ச் மாதம் இறுதியில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. நாள் ஒன்றுக்கு 5 அடுக்கு மாடிகள் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. புர்ஜ் கலீபா கட்டிடத்தை கட்டிய கட்டுமான நிறுவனமே இதை கட்டி தனது சாதனையை முறியடிக்கிறது. 

இதில், அதே கட்டுமான கலைஞர்களும், என்ஜினீயர்களும் ஈடுபட உள்ளனர். ஏற்கனவே உலகில் உள்ள மிக உயரமான 20கட்டிடங்களில் 9 கட்டிடங்கள் சீனாவில் உள்ளன.

பதப்படுத்திய கருமுட்டையில் 12 ஆண்டுகளின் பின் இரட்டைக் குழந்தை பிரசவித்து சாதனை

Written By Unknown on Friday, November 23, 2012 | 2:45 PM

12 ஆண்டுகளுக்கு முன்பு பதப்படுத்தப்பட்ட கருமுட்டை மூலம் கருத்தரித்த ஆர்ஜென்டினா பெண்ணொருவர் இரட்டைக் குழந்தைகளை பிரசவித்து சாதனை படைத்துள்ளார். 

ஆர்ஜென்டினாவின் தலைநகரான பியூனஸ் எயார்ஸைச் சேர்ந்தவர் மோனிகா ஜபோடாக்ஸ்னி (வயது 45). அவரது கணவர் கில்லர்மோ ஹூசக். 

இயற்கையாக கருத்தரிக்க முடியாத மோனிகா செயற்கை முறை மூலம் கருத்தரிக்க முயன்று பல தடவை தோல்வியடைந்துள்ளார். 

இனி தன்னால் கருத்தரிக்கவே முடியாது என்ற நிலைக்கு வந்துவிட்ட அவர், இறுதியாக ஒருமுறை முயற்சித்துப் பார்ப்போம் என்று, தனக்கு 33 வயதாக இருந்தபோது ஆய்வகத்தில் பதப்படுத்தி வைத்திருந்த கருமுட்டை கடந்த ஆண்டு பயன்படுத்தியுள்ளார். 

அவரது இறுதி முயற்சி இரட்டைப் பலனைக் கொடுத்துள்ளது. அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் மெர்சிடீஸ், குவாடலூப் என்னும் பார்ப்பதற்கு ஒரே மாதிரியாக இருக்கும் இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளன. 

இதற்கு முன்பு அதிகபட்சமாக 7 ஆண்டுகள் பதப்படுத்தப்பட்ட கருமுட்டையில் இருந்து தான் குழந்தை பிறந்துள்ளது என்பது வரலாறு. 

ஆண்டுகள் கடந்ததும் கருமுட்டை சேதமடையலாம் என்னும் நிலைமையில் மோனிகா 12 ஆண்டுகள் பதப்படுத்தப்பட்ட கருமுட்டையில் இருந்து இரட்டைக் குழந்தைகளை பெற்றெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

டீ கடைக்குள் ஒளிந்த நபரை தும்பிக்கையால் தேடிய காட்டு யானை

Written By Unknown on Sunday, November 18, 2012 | 7:50 AM

தன்னை பார்த்து மிரண்டு ஓடி டீ கடைக்குள் ஒளிந்த நபரை காட்டு யானை தும்பிக்கையால் தேடியதால் டீக்கடையில் இருந்தவர்கள் அலறினார்கள். பின்னர் பொதுமக்கள் சத்தம் போட்டு அந்த யானையை வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர். நீலகிரி மாவட்டம் பந்தலூரில் இருந்து சேரம்பாடிக்கு செல்லும் சாலையில் மேங்கோரேஞ்ச் என்ற இடத்தில் தனியார் தேயிலை தொழிற்சாலை உள்ளது. இங்கு சாலையோரம் ஒரு டீக்கடையும், குடியிருப்புகளும் உள்ளன.

இதன் அருகே சம்பவத்தன்று இரவு ஒற்றை காட்டு யானை நின்று கொண்டு இருந்தது. பின்னர் காலை 6 1/4 மணிக்கு ஒற்றை யானை சாலையை கடக்க முயன்றது. விடிந்த நேரத்தில் யானையின் செயல்பாடுகளை அந்த பகுதி மக்கள் பீதியுடன் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தனர்.

அப்போது சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தவர் மீது யானையின் பார்வை திரும்பியது. அவரது அசைவை நோட்டமிட்ட யானை திடீரென்று அவரை துரத்தியது. யானை ஓடி வருவதை பார்த்த அந்த நபர் அதிர்ச்சி அடைந்தார். அலறி அடித்துக்கொண்டு ஓடி ரோட்டின் அருகே உள்ள டீ கடைக்குள் ஒளிந்து கொண்டார்.

அவரை விரட்டி வந்த ஒற்றை யானை டீ கடை முன்பு நின்று கொண்டு பிளிறியது. யானை சத்தத்தை கேட்டு டீ கடைக்குள் டீ குடித்துக்கொண்டு இருந்தவர்களும் பயத்தில் நடுநடுங்கி கொண்டு இருந்தனர். இந்த நிலையில் ஒற்றை யானை தனது தும்பிக்கையை டீ கடைக்குள் நுழைத்து தப்பிய நபர் இருக்கிறாரா? என்று தேடியது. இதனால் அந்த நபர் வெலவெலத்து போனார். யானையின் தேடுதலில் அவர் சிக்கவில்லை. 

இதற்கிடையே அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஓடி வந்து கூச்சல் போட்டனர். இவர்களின் சத்தத்தை கேட்ட ஒற்றை யானை அங்கிருந்து புறப்பட்டு அருகே உள்ள தேயிலை தோட்டத்தை நோக்கி வேகமாக சென்றது. அதன் பிறகே கடையில் இருந்த சிலரும், தப்பிய நபரும், அப்பகுதி மக்களும் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

திடீரென்று ஊருக்குள் புகுந்த ஒற்றை யானையின் திடீர் அட்டகாசத்தால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். இதுகுறித்து வனத்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஐ லவ் யூ. எனக்குள் முழுமையாக நிறைந்திருப்பது நீ... நீ...நீ மட்டுமே.

Written By Unknown on Tuesday, November 13, 2012 | 9:45 AM


காதலிப்பவர்களுக்கு என்னவெல்லாம் தோன்றும் என்று முன்பு பார்த்தோம். கவிதை எழுதுவார்கள்... கதை சொல்வார்கள்... புரியாத மொழி பல பேசுவார்கள்.. புளகாங்கிதமடைவார்கள்... புலம்புவார்கள்.. மொத்தத்தில் எதையாவது பேசிக் கொண்டே இருப்பார்கள்.
உலக அளவில் காதலர்கள் பேசும் முக்கிய வார்த்தைகளைக் கோர்த்து ஒரு வரிசைப்படுத்தியுள்ளனராம். உலகின் எந்த மூலைக்குப் போனாலும் இப்படித்தான் அல்லது இதே ரீதியில்தான் காதலர்கள் பேசிக் கொள்கிறார்களாம்.. அது என்ன என்று பார்ப்போமா...
- ஐ லவ் யூ. உன்னை என் இதயத்தின் ஆழத்திலிருந்து காதலிக்கிறேன். நீ பிரிந்து போகும்போது நான் சோகமடைகிறேன்.. உன்னை நினைத்து கனவு காண்கிறேன்.. நீ என்னுடனேயே தங்கும் வரை காத்திருக்கப் பொறுமை இல்லை.. தேவதையே, சீக்கிரமே வந்து விடு.
- என்னிடம் HRT என்ற மூன்று எழுத்துக்கள் மட்டுமே உள்ளன. ஆனால் அது எனக்குப் போதுமானதாக இல்லை. அத்துடன் EA என்ற வார்த்தைகளையும் சேர்த்து HEART என்ற உன் இதயத்தைப் பெற விரும்புகிறேன். ஒருவேளை அது எனக்குக் கிடைக்காவிட்டால் EA என்ற எழுத்துக்களை நீக்கி விட்டு U என்ற எழுத்தை மட்டும் சேர்த்து HURT என்ற பாதிப்பை சந்தித்து விடுவேன். ஆனால் எனக்கு HURT வேண்டாம். உன்னுடைய HEART மட்டுமே வேண்டும்... தருவாயா...
- நீ விட்ட காதல் அம்பு என் இதயத்தை தாக்கியபோது நான் குழைந்தேன், துடித்தேன், வென்றேன், அழகு பெற்றேன், வாகை சூடினேன்...
- நீ என்னுடனேயே இருந்தாலும் சரி அல்லது என்னை விட்டுப் பிரிந்தாலும் சரி, எப்போதும் என் மனதிலேயே தங்கியிருக்கிறாய் என் தேவதையே.. என் இதயத்தோடு ஒன்றியிருக்கிறாய்.
- சிலருக்கு நட்சத்திரம் ஒரு தீப்பந்தமா என்று சந்தேகம் வரலாம். சிலருக்கு வானம் நீல நிறமா என்று சந்தேகம் வரலாம். சிலருக்கு நாம் பொய்யரா என்று சந்தேகம் வரலாம்.. ஆனால் ஐ லவ் யூ என்று உன்னைப் பார்த்து நான் சொல்லும்போது எனக்கு எந்த சந்தேகமும் இல்லை.
- உன்னை நினைப்பது ரொம்பவும் எளிது. அதைத்தான் தினமும் செய்து கொண்டிருக்கிறேன். ஆனால் உன்னை இழப்பது இதயத்தை உடைப்பது போல. அதை மட்டும் என்னால் எளிதில் நினைக்க முடியவில்லை.
- வாழ்க்கை என்பது வாழ்வதற்காக, உனக்காக நான் வாழ்கிறேன். வாழ்க்கை என்பது கொடுப்பதற்காக, நான் என்னையே உனக்குக் கொடுக்கிறேன். இதயம் என்பது துடிப்பதற்காக, நான் உனக்காக துடிக்கிறேன். அர்த்தங்கள் நிறைந்தது கனவு, ஆனால் எனக்குள் முழுமையாக நிறைந்திருப்பது நீ... நீ...நீ மட்டுமே.
- என்னுடைய இதயத்தில் உன்னுடைய கண்களின் பிளாஷை நான் சேமித்து வைத்திருக்கிறேன். உன்னுடைய புன்னகையின் வெப்பத்தை சேர்த்து வைத்திருக்கிறேன்.. உன்னுடன் மிகவும் நெருக்கத்தில் நெருங்கியிருக்கிறேன், உன்னை அரவணைத்து நிற்கிறேன், உன்னைக் காத்து நிற்கிறேன்... என்றென்றும்...
இதே பாணியில்தான் உலகம் முழுவதும் உள்ள காதலர்கள் பேசிக் கொள்கிறார்களாம்.. இந்த லிஸ்ட்டில் நீங்க இருக்கீங்களா...

ஒருவாட்டி பாத்ரூம் போனா 6 மணி நேரம் மின்சாரம்.. நைஜீரிய மாணவிகள் சாதனை!


சிறுநீரிலிருந்து மின்சாரம் தயாரித்து நைஜீரிய மாணவிகள் நான்கு பேர் சாதனை படைத்துள்ளனர். இவர்களின் இந்த வித்தியாசமான கண்டுபிடிப்பு நைஜீரியாவில் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளதாம்.
தமிழ்நாட்டில் மட்டுமல்ல, உலகம் பூராவும் மின்தடை பிரச்சினைதான். அந்த மின்தடைக்கு ஆறுதல் தேடித் தரும் வகையில் நைஜீரிய மாணவிகள் நால்வரின் கண்டுபிடிப்பு வந்து சேர்ந்துள்ளது.

என் மகள்களை 'டேட்டிங்' கூப்பிட பசங்களுக்கு 'தில்' வேண்டும்: ஒபாமா

Written By Unknown on Sunday, November 11, 2012 | 10:40 AM


என் மகள்களுடன் டேட்டிங் போக விரும்பும் இளைஞர்கள், பாதுகாவலைத் தாண்டி உள்ளே வந்து பார்க்கட்டும். பலத்த பாதுகாவலையும் தாண்டி யாரேனும் வந்தால் அவர்கள் கூறுவதை நிச்சயம் நான் பொறுமையுடன் காது கொடுத்துக் கேட்பேன் என்று கூறியுள்ளார் அமெரிக்க அதிபராக மீண்டும் வெற்றி பெற்றுள்ள பாரக் ஒபாமா.
 Obama On Sasha Malia Dating Guys Will Need Guts மகள்கள் மீது எப்போதும் ஒரு கண் வைத்தபடி இருக்கும் பாசக்கார மற்றும் கண்டிப்பான தந்தை ஒபாமா. அதேசமயம், மகள்களை ஓவராக கட்டுப்படுத்தவும் மாட்டார். ஆனால், மகள்களுக்கு எது தேவையோ அது மட்டுமே கிடைக்கும்படி செய்வதிலும் கவனமாக இருப்பார். தேவையில்லாத கவனச் சிதறல்கள் தனது பிள்ளைகளுக்கு ஏற்படாத வகையில் ஒபாமாவும் சரி, அம்மா மிஷலும் சரி படு கவனமாக இருப்பார்கள்.
இந்த நிலையில், 2வது முறையாக அதிபராகியுள்ள ஒபாமா டேட்டிங் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். குறிப்பாக தனது மகள்கள் டேட்டிங் போவார்களா என்பது குறித்தும் அவர் பேசியுள்ளார்.
இதுகுறித்து ரேடியோ ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறுகையில்,எனது மகள்கள் குறித்து நான் பெருமைப்படுகிறேன். மலியா (14), சாஷா (11) இருவருமே வேகமாக வளர்ந்து விட்டனர். நம்பிக்கை அதிகம் கொண்ட பெண்களாக இவர்கள் உருமாறி வருகிறார்கள். டீன் ஏஜ் வயதைத் தொட்டுள்ள இவர்களைக் கவனிப்பதிலும் நான் கவனம் வைத்தாக வேண்டும். அந்தக் கவலை வேறு எனக்கு.
நிச்சயம் இளைஞர்கள் எனது மகள்களுடன் டேட்டிங் போக விரும்புவார்கள். ஆனால் வெள்ளை மாளிகையின் பலத்த பாதுகாவல் அனைவருக்கும் தெரிந்ததுதான். எனது மகள்களுடன் டேட்டிங் போக யாரேனும் விரும்பினால் இந்த காவலைத் தாண்டித்தான் வர வேண்டும். அது சாத்தியமா என்று தெரியவில்லை. ஒரு வேளை யாரேனும் இதையும் தாண்டி தைரியமாக வந்து விட்டால் நிச்சயம் அவர்கள் சொல்வதை காது கொடுத்து பொறுமையாக கேட்பேன்.
எனது மகள்கள் அருமையான இளம் பெண்களாக மாறி வருகின்றனர். அனைவரிடத்திலும் மரியாதையாக பழகுகின்றனர். தங்களையும் மற்றவர்கள் மரியாதையுடன் நடத்த வேண்டும் என்று கருதுகின்றனர்.
எப்போதுமே நான் அவர்களுடன் இருக்க முடியவில்லை. எனது வேலை அப்படி. ஆனால் மிஷல் அப்படி இல்லை, அவர்களுக்காக நேரம் ஒதுக்குகிறார். கடைகளுக்குப் போகிறார்கள், படம் பார்க்கிறார்கள். பள்ளிக்கும் போகிறார்கள்.
2வது முறையாக அதிபராகப் பதவியேற்ற பின்னர் நடைபெறும் நடன நிகழ்ச்சியில் எந்தப் பாடலுக்கு நடனமாடுவது என்பதை நான் இன்னும் தீர்மானிக்கவில்லை. எனது மனைவியுடன் பேசிய பிறகுதான் அதை முடிவு செய்வேன். மனைவியைக் கேட்காமல் எதையும் செய்ய முடியாது. ஆனால் எதுவாக இருந்தாலும், நான் டான்ஸ் ஆடுவதற்கு வசதியான பாட்டைத்தான் தேர்வு செய்வேன். அதேசமயம் கொஞ்சம் ரொமான்ஸும் இருப்பது போல பார்த்துக் கொள்ள வேண்டியதுதான் என்றார் சிரித்தபடி.

ராமர் மோசமானவர், அதை விட மோசமானவர் லட்சுமணன்.. 'ராம்' ஜேத்மலானி தாக்கு!

Written By Unknown on Friday, November 9, 2012 | 9:22 AM


பாஜகவுக்குள் இருந்து கொண்டே பாஜக தலைமைக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ள ராம்ஜேத்மலானி அடுத்து ராமரைப் போட்டுத் தாக்கியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ராமாயணத்தின் நாயகனான ராமர் ஒரு மோசமான கணவராக இருந்தார். எனக்கு அவரை சுத்தமாக பிடிக்காது. ஏதோ சில மீனவர்கள் எதையோ சொன்னார்கள் என்பதற்காக தாலி கட்டிய மனைவியை வனவாசம் அனுப்பிய கணவர் ராமர். சீதை பரிதாபத்துக்குரிய பெண்.
ராமர் இப்படி என்றால், அவரது தம்பி லட்சுமணன் இன்னும் மோசம். சீதா கடத்தப்பட்டபோது, லட்சுமணனைப் போய் தேடிப் பார் என்று கூறி அனுப்பினார் ராமர். ஆனால் தேடப் போவதற்குப் பதில், சீதைப் பிராட்டி எனது அண்ணியார். அவரது முகத்தைக் கூட நான் பார்த்ததில்லை. எனவே என்னால் அவரை அடையாளம் காண முடியாதே என்றார் லட்சுமணன். எவ்வளவு காமெடி பாருங்கள் என்றார் ஜேத்மலானி.
ராமர்தான் பாஜகவுக்கு முதன்மைக் கடவுள். இந்தநிலையில் ராமரையும், லட்சுமணனையும் ஜேத்மலானி கடுமையாக விமர்சித்திருப்பது பாஜகவுக்கு மேலும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே கத்காரிக்கு எதிராக கடுமையாக குரல் கொடுத்து வருகிறார் ஜேத்மலானி. தாவூத் இப்ராகிமையும், விவேகானந்தரையும் கத்காரி ஒப்பிட்டுப் பேசி சமீபத்தில்தான் பெரும் சிக்கலை ஏற்படுத்தினார் கத்காரி. இந்த நிலையில் அதே பாணியில் ராமரைப் போட்டுத் தாக்கிப் பேசியுள்ளார் ஜேத்மலானி.

எளிமையான புடவைகளை உடுத்துங்கள் சோனியாவின் அட்வைஸ்!


இன்றைய இளம் பெண்கள் எளிமையான புடவைகளை உடுத்துங்கள் என்று காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியா காந்தி கூறியுள்ளார். இந்திரா காந்தியைப் போல எளிமையாக இருப்பதே அழகானது என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
 sonia gandhi fashion tips keep it simple உத்தரபிரதேச மாநிலம் ரே பரேலியில் உள்ள தேசிய ஆடை வடிவமைப்பு கல்வி நிறுவனத்தில் ( நிப்ட்) நடைபெற்ற விழாவில் பங்கேற்ற சோனியா காந்தி மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்களை வழங்கிப் பேசினார்.
அப்போது அவர், கூறியதாவது:
இந்தியப் பெண்களின் நாகரீகமும் ஆடை உடுத்தும் விதமும் மாறுபட்டு வருகிறது. காட்டன் உடைகளில் கூட வித விதமான அலங்காரங்கள், சரிகைகள், மணிகள் கோர்த்து, வேலைப்பாடுகளுடன் கூடிய ஆடைகளை அணிகின்றனர்.
இத்தனை அலங்காரம் செய்து ஒரு ஆடையை அணிவது அவர்களுக்கு சிரமம்தான். நாகரீகம் என்பது உடைகளை அதிகமாக அலங்காரம் செய்வதில் இல்லை. எளிமையில்தான் இருக்கிறது என்றார்.
இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனித்தனியாக ஒரு பாரம்பரிய ஆடைகள் உள்ளன. அவை, அவர்களின் வாழ்விடங்களுக்கு ஏற்றதாக இருக்கும். அதனை எப்போதும் நாம் மறக்கக் கூடாது என்று சோனியா காந்தி குறிப்பிட்டார்.
இந்திரா காந்தியின் எளிமை
இந்தியாவின் பிரதமராகவும், ரே பரேலி தொகுதி எம்.பியாகவும் இருந்த இந்திரா காந்தியின் தோற்றத்தில் எளிமையும், பேஷன் என்பதன் மீதான பார்வையும் அவரை உலக அளவில் புகழ்பெற வைத்தது.
அவர் தனது எளிமையான தோற்றத்தின் மூலமே நாகரீகமாகத் தோன்றினார். ஆடைகளில் அலங்காரத்தை அதிகரிக்கலாம். ஆனால், அது நாகரீகத்தை பிரதிபலிக்காது என்றும் மாணவ, மாணவிகளுக்கு அறிவுரை வழங்கினார் சோனியா காந்தி.

இளவரசி டயானா பயன்படுத்திய கார் விற்பனைக்கு வருகிறது

Written By Unknown on Saturday, November 3, 2012 | 12:31 PM

பிரிட்டனின் மறைந்த இளவரசி டயானா பயன்படுத்திய ரோல்ஸ் ராய்ஸ் கார் ஏலம் விடப்படவுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கார் 2 லட்சம் அமெரிக்க டொலர் வரை ஏலம் போகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.மறைந்த இளவரசி டயானாவும், பிரிட்டன் இளவரசர் சார்லஸசும் 1985ஆம் ஆண்டு அமெரிக்கா சென்றிருந்த போது, அப்போதைய ஜனாதிபதி ரொனால்டு ரீகன் அவரது மனைவி நான்சி ஆகியோரைச் சந்தித்தனர்.

அப்போது இந்தக் காரைப் பயன்படுத்தினர். அமெரிக்காவில் உள்ள பிரிட்டன் தூதரகத்தால் 1979ஆம் ஆண்டு இந்தக் கார் வாங்கப்பட்டது.

பின்னர், நிபுணர்கள் 3 ஆண்டுகள் உழைத்து இந்தக் காரை குண்டு துளைக்காத, ஆயுதங்கள் பொருத்தப்பட்ட காராக மாற்றினர். இதற்காக சுமார் ரூ.1.07 கோடி செலவிடப்பட்டுள்ளது.

விஷவாயு மற்றும் வெடிகுண்டுகளால் சேதம் ஏற்படாத வகையில் அதிகபட்ச பாதுகாப்புடன் இந்தக் கார் வடிவமைக்கப்பட்டுள்ளது.

வெள்ளியின் நிறம் கொண்ட இக் காரின் ஆரம்ப ஏல விலை 10 கோடி ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த கார் விற்பனையின் மூலம் கிடைக்கும் தொகை, டயானா ஆரம்பித்த புற்றுநோயால் பாதித்த குழந்தைகளுக்கான அறக்கட்டளைக்கு அளிக்கப்பட உள்ளது. சிகாகோவில் உள்ள வோலோ ஆட்டோ மியூசியம் இந்த ஏலத்தை எதிர்வரும் 9ஆம் திகதி நடத்தவுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

60 வயது மாடல் பாட்டியின் அட்டகாச அழகு... மதுவை விட்டதால் கிளாமர் கூடியதாம்!


இங்கிலாந்தைச் சேர்ந்த 60 வயதான மாடல் அழகி, கட்டழகு இளம் பெண்களுடன் இணைந்து கேட்வாக் போட்டு அனைவரையும் அசத்தினார். இளம் மாடல்களுக்கு இணையான அழகுடன் அவர் நடை போட்டு வந்தது அனைவரையும் கவர்ந்தது.
 Marie Helvin Reveals Giving Up Booz இந்த வயதிலும் தான் இத்தனை கட்டழகுடன் இருப்பதற்கு மதுப் பழக்கத்தை விட்டதே காரணம் என்று அவர் பெருமை பொங்கக் கூறியுள்ளார்.
அந்தப் பாட்டியின் பெயர் மேரி ஹெல்வின். 60 வயதான இவர் முன்னாள் மாடல் அழகி. பேஷன் போட்டோகிராபர் டேவிட் பெய்லியின் முன்னாள் மனைவி. இவர் லண்டன் லிஞ்சரி பேஷன் ஷோவில் 23 வயது பீச்சஸ் ஜெல்டாப், 26 வயது அப்பே கிளான்சி உள்ளிட்டோருடன் இணைந்து கேட் வாக் போட்டு அனைவரையும் கதி கலக்கினார். சும்மா சொல்லக் கூடாது, இளசுகளுக்கு இணையான கட்டழகுடன் மேரி நடந்து வந்ததால் அனைவரும் வியந்து போய் பார்த்தனர்.
இதுகுறித்து அவர் கூறுகையில், நான் முன்பு நிறைய மது அருந்தினேன். எட்டு மாதங்களுக்கு முன்புதான் அதை விட்டேன். இப்போது சுத்தமாக குடிப்பதில்லை. இதனால்தான் என்னுடைய அழகு என்னை விட்டுப் போகவில்லை. கட்டுக்குலையாமல் இருக்கிறேன்.
6 வருடத்திற்குப் பிறகு இப்போதுதான் முதல் முறையாக கேட் வாக் செய்துள்ளேன். எனக்கு இப்போது 60 வயதாகிறது. இதுவரை ஒருபோதும் என்னை செக்ஸியான பெண் என்றோ, நல்ல ஷேப்புடன் இருப்பதாகவோ நினைத்ததில்லை. ஆனால் இப்போது அப்படி நினைக்கத் தோன்றுகிறது என்றார் சிரித்தபடி.
மேலும் அவர் கூறுகையில், எனது கட்டழகை மேலும் பொலிவாக்க நான் கடுமையாக ஜிம்மில் உழைத்து வந்தேன். இதனால்தான் என்னால் இளம் பெண்களுக்கு இணையாக நடைபோட முடிந்தது என்றார்.
இளம் மாடல்களுக்கு போட்டியாக மேரியும் கருப்பு நிற பிரா மற்றும் பேண்டீஸ் அணிந்து வந்தபோது அனைவரும் கைத்தட்டல் மழை பொழிந்து விட்டனர்.
70களில் அட்டகாசமான சூப்பர் மாடலாக திகழ்ந்தவர் இந்த மேரி. ஹவாயில் பிறந்து வளர்ந்தவர். பலருடன் இணைத்து அந்தக் காலத்தில் கிசுகிசுக்கப்பட்டவர். ஆனால் ஒரே ஒரு கல்யாணம்தான் செய்தார் என்பதுதான் சுவாரஸ்யமானது.

தாயின் மடியே சொர்க்கம்:கலக்கும் விஜய் - ஷோபா விளம்பரம்!

Written By Unknown on Thursday, October 25, 2012 | 2:37 PM

அம்மா சென்டிமென்ட் என்றால் சினிமாவில் ஒர்க் அவுட் ஆகும் என்பார்கள். அதை இப்போது விளம்பரங்களிலும் கொண்டு வந்து விட்டார்கள். நடிகர் விஜய் தன்னுடைய அம்மா ஷோபாவுடன் சேர்ந்து நகைக்கடை விளம்பரத்தில் நடித்திருப்பது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

அனைவருக்குமே அம்மாவின் மடியில் படுத்துக்கொள்வது என்பது பிடித்தமான விசயம். ஆண் குழந்தைகள் பெரும்பாலும் அம்மா செல்லமாகத்தான் இருப்பார்கள். இதைக் கருத்தில் கொண்டு புதிதாக நகை விளம்பரம் ஒன்று வந்துள்ளது. தாய் - மகன் சென்டிமென்ட் கலந்த இந்த விளம்பரம் சூப்பர் ஹிட். அந்த வகையில் தனது தாயார் ஷோபாவுடன் இணைந்து விளம்பரப் படம் ஒன்றில் கலக்கியிருக்கிறார் விஜய். அம்மாவின் மடியில் படுத்துக்கொண்டு விஜய் பேசுவது போல அந்த விளம்பரம் அமைந்திருக்கிறது.

சூப்பர் ஹிட்

தனது தாயாருடன் இணைந்து விஜய் நடித்துள்ள இந்த விளம்பரப் படம் சூப்பர் ஹிட் ஆகியுள்ளது டிவிகளில். விளம்பரம் பார்க்க பிடிக்காதவர்கள் கூட ஒரு நிமிடம் ரிமோட்டை மாற்றாமல் அதனை பார்க்கின்றனராம்.

தங்கமான நேரம்

அம்மாவின் மடியில் படுத்துக்கொண்டு தனக்கு நேர்ந்த ஒரு அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறார் விஜய். அம்மாவின் காதில் ஆடும் ஜிமிக்கி. அதை தொட்டுக்கொண்டு பேசும் விஜய் என கவிதையாய் காட்சி அமைந்துள்ளது.


குழந்தைக்கு அம்மாவின் பெயர்

ஷூட்டிங் முடிந்து வரும்போது ஒரு குழந்தையின் சிரிப்பில் கவரப்படும் விஜய் அக்குழந்தையிடம் செல்கிறார். அப்போது குழந்தையின் தாயார், என் பொண்ணுக்கு பேரு வைங்கண்ணா என்று விஜய்யைக் கேட்க, நெகிழ்ந்து போகும் விஜய், ஷோபா, என்னோட அம்மாவின் பெயர் என்று கூறி பெயர் வைக்கிறார். இதை தனது மடியில் படுத்தபடி சொல்லும் விஜய்யைப் பார்த்து பூரித்துப் போகும் தாயார் ஷோபா, மகன் நெற்றியில் பாசத்தோடு முத்தம் வைக்கிறார்.
தாயும், மகனுமாக ஒரு விளம்பரத்தில் நடிப்பது என்பது இதுவே முதல் முறை என்பதால், விஜய்,ஷோபா விளம்பரத்திற்கு செம வரவேற்பாம்.


 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. R News - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger