R News: 3
Headlines News :
Powered by Blogger.

Latest Post

Showing posts with label 3. Show all posts
Showing posts with label 3. Show all posts

தனுஷும், சுருதியும் மிகச் சிறப்பாக நடித்துள்ளனர்- ராதிகா

Written By Unknown on Thursday, April 5, 2012 | 4:26 PM

தனுஷ் - சுருதி நடித்து வெளியாகியுள்ள 3 படம் பார்த்தேன், அது என்னை மிகவும் பாதித்துவிட்டது. இதே போன்றதொரு இளைஞனின் கதை எனக்குத் தெரியும், என்று கூறியுள்ளார் ராதிகா சரத்குமார்.

இந்தப் படத்தை நேற்று பார்த்த ராதிகா, உடனடியாக படத்தின் இயக்குநர் ஐஸ்வர்யாவைப் பாராட்டினால்.

இதுகுறித்து அவர் கூறுகையில், "3 படத்தில் தனுஷின் கதாபாத்திரத்தைப் போன்று தான் என்னுடைய ஆடை அலங்கார நிபுணர் ஒருவருக்கு மன நோய் வந்துவிட்டது.

இந்த நோயிலிருந்து வெளிவர முடியாமல் அவர் பல ஆண்டுகளுக்கு முன்பே தற்கொலை செய்து கொண்டு இறந்துவிட்டார். தனுஷின் கதாபாத்திரத்தைப் பார்த்ததும் அந்த இளைஞனின் நினைவுதான் எனக்கு வந்தது. என்னை மிகவும் பாதித்த சம்பவம் அது.

மிகவும் உணர்வுப் பூர்வமான கதையை ஐஸ்வர்யா தேர்வு செய்து இயக்கியுள்ளார். பெரிய துணிச்சல் வேண்டும். காட்சிகளை மிக கச்சிதமாக அமைத்துள்ளார். தனுஷும், சுருதியும் மிகச் சிறப்பாக நடித்துள்ளனர்," என்றார்.

மேலும் படம் குறித்த தனது கருத்துக்கலை ட்விட்டரிலும் எழுதியுள்ளார்.

இயக்குநராக ஐஸ்வர்யாவின் திறமை குறித்து ரஜினியிடம் பேசியபோது, அவர் மிகவும் மகிழ்ந்ததாகவும் ராதிகா குறிப்பிட்டுள்ளார்.

'3'. கிட்டத்தட்ட ரஜினி படத்துக்கு அடுத்த ஓபனிங் கிடைத்துள்ளது

கிட்டத்தட்ட ரஜினி படத்துக்கு அடுத்த ஓபனிங் கிடைத்துள்ளது அவரது மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் வெளியாகியுள்ள '3'.

முதல் மூன்று நாட்களில் சென்னை நகரில் மட்டும் இந்த கொலவெறி புகழ் படத்துக்குக் கிடைத்துள்ள வசூல் ரூ 1,16,87240.

படத்தின் இயக்குநர் ஐஸ்வர்யாதான் படத்தை சென்னையில் விநியோகம் செய்துள்ளார். சென்னை நகருக்குள் மட்டும் 25 அரங்குகளில் கிட்டத்தட்ட 100 சதவீத பார்வையாளர்களுடன் இந்தப் படம் ஓடுகிறது.
படம் குறித்து சிலர் தவறாக பிரச்சாரம் செய்து வரும் நிலையில், படத்துக்கான வசூல் நல்ல நிலையில் இருப்பது ஐஸ்வர்யாவை மிகுந்த மகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

சென்னை தவிர்த்து செங்கல்பட்டு ஏரியாவில் மட்டும் 50 அரங்குகளில் 3 வெளியாகியுள்ளது. அனைத்திலுமே நல்ல வசூல். மூன்று நாட்களும் 95 சதவீத பார்வையாளர்கள் வந்துள்ளனர். பல அரங்குகளில் ஹவுஸ்புல் போர்டுகள்!

மதுரையில் இந்தப் படத்தை அன்பு வெளியிட்டுள்ளார். வசூல் குறித்து அன்பு கூறுகையில், "மதுரையில் இதுவரை தனுஷ் படம் எதுவும் இந்த அளவு அதிக கலெக்ஷன் குவித்ததில்லை. இந்த நிலை இன்னும் சில வாரங்கள் தொடரும் என நம்புகிறேன்,' என்றார்.

ஆனால் இந்த போக்கு நீடிக்குமா? முதல் மூன்று நாள் வசூலை வைத்து படத்தின் வெற்றியைக் கணிக்க முடியுமா?

இதுகுறித்து நம்மிடம் பேசிய அன்பு, "கொலவெறி பாட்டுக்கு கிடைத்த பாப்புலாரிட்டி, படத்துக்கான அதிகபட்ச எதிர்ப்பார்ப்பு போன்றவைதான் இந்த பெரிய ஓபனிங்குக்கு காரணம். இதே காரணங்கள்தான் படம் குறித்த சில எதிர்மறை விமர்சனங்களைக் கிளப்பிவிட்டுள்ளன. சிலர் விஷமத்தனமாக பிரச்சாரம் செய்கின்றனர். என்னைப் பொறுத்தவரை இந்தப் படம் இப்போதே லாபகரமான ஒன்றுதான். இன்னும் ஒரு வாரம் 70 சதவீத பார்வையாளர்களுடன் ஓடினாலே போதும்... 3 சூப்பர் ஹிட் என்று சொல்லிவிடலாம்," என்றார்.

படத்தின் தயாரிப்பாளரான கஸ்தூரி ராஜா கூறுகையில், "விநியோகஸ்தர்கள் ஸ்வீட் கொடுத்து இந்தப் பட வெற்றியைக் கொண்டாடி வருகிறார்கள். இந்த வார முடிவிலேயே அவர்களுக்கு போட்ட முதலுக்கு மேல் லாபம் கிடைத்துவிடும். மதுரை அன்பு போன்றவர்கள் வெளிப்படையாகவே படத்தின் வசூல், லாபம் போன்ற விவரங்களைக் கூறி வருகின்றனர். வேறென்ன வேண்டும்?," என்றார்.

சத்யம் திரையரங்கில் இந்தப் படம் இன்று வரை 100 சதவீத பார்வையாளர்களுடன் ஓடுகிறது. இதுகுறித்து சத்யம் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், "சமீபத்தில் வெளியான படங்களில் அசாதாரணமான துவக்கம் என்றால் அது ஐஸ்வர்யா இயக்கியுள்ள 3 படத்துக்குத்தான். வணிக ரீதியில் இது ஒரு நல்ல படம்," என்றார்.

இயக்குபவர் மனைவி என்பதையெல்லாம் கண்டுகொள்ளாமல் அநியாயத்துக்கு ஸ்ருதியுடன் நெருக்கம் காட்டியுள்ளார் தனுஷ். இதான் அந்த கெமிஸ்ட்ரியா!

நடிகர்கள்: தனுஷ், ஸ்ருதிஹாஸன், பிரபு, பானுப்ரியா, சிவகார்த்திகேயன், சுந்தர் ராமு

இசை: அனிருத்

ஒளிப்பதிவு: வேல்ராஜ்

எழுத்து - இயக்கம்: ஐஸ்வர்யா ஆர் தனுஷ்

தயாரிப்பு: ஆர் கே புரொடக்ஷன்ஸ் & வுண்டர்பார் பிலிம்ஸ்

பிஆர்ஓ: ரியாஸ்

பெரும் எதிர்ப்பார்ப்பைக் கிளப்பிவிட்டு வரும் படங்கள் பொதுவாகவே படுத்துவிடுவது வழக்கம். காரணம், அந்த எதிர்ப்பார்ப்பின் சுமையைத் தாங்க முடியாது. பெரிய இயக்குநர்கள், நாயகர்கள் படங்களுக்கே அந்தக் கதி என்றால், முதல் பட இயக்குநர் ஐஸ்வர்யாவின் '3' என்னவாகப் போகிறதோ.. என்பதுதான் 3 ரிலீசுக்கு முன்பு வரை இருந்த பேச்சு.

ஆனால் ஐஸ்வர்யா தப்பித்துவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். துள்ளுவதோ இளமை, மயக்கம் என்ன படங்களின் சாயல் லேசாகத் தெரிந்தாலும் (செல்வராகவன் உதவியாளர் அல்லவா... இருக்கத்தானே செய்யும்!), இடைவேளைக்குப் பிறகு கொஞ்சம் சோதித்தாலும் படத்தைப் பார்க்க முடிகிறது!

இன்னொன்று, அறிமுக இயக்குநர்களின் படங்களுக்கே உரிய அமெச்சூர்த்தனம், பெண் இயக்குநர்கள் வழக்கமாக செய்யும் தவறுகள் எதுவும் இல்லாமல், ஒரு பக்குவமான காட்சிப்படுத்தலை 3-ல் பார்க்க முடிகிறது. அந்த வகையில் இயக்குநர் ஐஸ்வர்யாவுக்கு ஒரு பூச்செண்டு கொடுத்து வரவேற்கலாம்!

ஒரு இளைஞனின் மூன்று கட்ட வாழ்க்கை நிலைகளின் சம்பவங்களின் தொகுப்பு இந்தப் படம்.

ப்ளஸ்டூ படிக்கும் தனுஷுக்கும் ஸ்ருதிக்கும் காதல் (ரெண்டு பேருமே மாணவ வேடம் அத்தனை கச்சிதம்). ரொம்ப அழகான காதல். கல்லூரி படிப்பு முடிந்த பிறகு திருமணம் நடக்கிறது. திருமணத்துக்குப் பிறகுதான் தனுஷுக்கு சோதனை ஆரம்பமாகிறது. ஒரு ஆள் பல பரிமாணமெடுக்கும் மனநோய். இதனால் பல பிரச்சினைகள். அதிலிருந்து அவர் மீண்டாரா என்பது மீதிக் கதை.

எல்லோரும் ஏகத்துக்கும் ஏற்றிவிட்ட கொலவெறி பாடலைத் தாண்டி இந்தப் படம் மனதில் நிற்பதற்குக் காரணம், இளமை துள்ளும் அந்த முதல் பாதி.

கொலவெறி '3' - சினிமா விமர்சனம்




ட்யூஷன் சென்டரில் ஸ்ருதியைக் கவர தனுஷ் செய்யும் முயற்சிகள் செம. தனுஷ் - ஸ்ருதி திருமணம் நடக்கும் இடம், அந்த திருமணத்தை எதிர்க்கும் ஸ்ருதி பெற்றோரிடம் தனுஷ் பேசும் வசனங்கள், அதற்கு ஸ்ருதியின் அம்மா ரோகிணியின் அடுத்த ரியாக்ஷன் போன்றவை சற்றும் எதிர்பாராத திருப்பக் காட்சிகள்.

அதென்னமோ தொடர்ந்து தனுஷு்ககு சைக்கோ கேரக்டர்களாக அமைகின்றன. இது எதேச்சையானதா திட்டமிட்டதா தெரியவில்லை. ஆனால் இந்தப் படத்தில் நடிப்பில் தனுஷ் மிரட்டியிருக்கிறார். இதுவரை பார்க்காத வேறுமுகம் அது. அதிலும் மனைவிக்குத் தெரியாமல் தன் நோயை மறைக்க அவர் படும் பாடு... வாவ்!

நடிப்பா இயக்கமா... யார் பெஸ்ட் பார்ப்போம் என கணவனுக்கும் மனைவிக்கும் பெரிய போட்டியே நடந்திருக்கும் போல!

ஏழாம் அறிவில் எல்கேஜி லெவலுக்கு இருந்த ஸ்ருதி ஹாஸன் நடிப்பு இந்தப் படத்தில் டிகிரி வாங்கிவிட்டது. இந்தப் பொண்ணு இந்த அளவு நடிக்குமா என கேட்க வைக்கிறது. ஆனால் அவர் அழ ஆரம்பித்தால் நாம் தலை கவிழ வேண்டியுள்ளது. அதைக் கொஞ்சம் கவனியுங்கள் அம்மணி!

இயக்குபவர் மனைவி என்பதையெல்லாம் கண்டுகொள்ளாமல் அநியாயத்துக்கு ஸ்ருதியுடன் நெருக்கம் காட்டியுள்ளார் தனுஷ். இதான் அந்த கெமிஸ்ட்ரியா!

சந்தானத்துக்கு போட்டியாக வந்துவிடுவார் போலிருக்கிறது சிவகார்த்திகேயன். சுந்தர் ராமு, பிரபு, பானுப்ரியா, ரோகிணி என எல்லோருமே படத்துக்கு பலம் சேர்த்துள்ளனர்.

இடைவேளை வரை அழகாகப் பயணிக்கும் படம், தனுஷ் மனநோயாளியாக மாறியதும் பார்வையாளர்களைப் பொறுமையிழக்க வைக்கிறது. தனுஷின் இந்த மனநோய் அவருக்கு மட்டும் தெரிந்து, மற்ற யாருக்குமே தெரியாமல் போவது எப்படி என்று புரியவில்லை (நண்பன் ஒருவனைத் தவிர).

அடுத்தடுத்த படங்களில் மனநோயாளியாகவே தனுஷைப் பார்க்க நமக்கே ஒரு மாதிரியாகத்தான் இருக்கிறது!

அனிருத்தின் இசையில் எல்லாப் பாடல்களுமே கேட்கும்படி உள்ளது. உலகமகா கொலவெறிப் பாட்டை இப்படி சுமாராகத்தான் எடுத்திருப்பார்கள் என நினைத்தது சரியாகத்தான் இருக்கிறது.

வேல்ராஜின் கேமரா அருமை. கோலா பாஸ்கர் கத்தரி இடைவேளைக்குப் பிறகு கோளாறாகிவிட்டது போலிருக்கிறது.

ரஜினியின் பொண்ணு என்ற சிறப்புப் பட்டம் இனி ஐஸ்வர்யாவுக்கு தேவையில்லை. கம்பீரமாக 'நான் இயக்குநர் ஐஸ்வர்யா' என்று சொல்லிக் கொள்ளலாம்!

துணிச்சலான பெண் இயக்குநர், இதுவரை எந்த பெண் இயக்குநரும் இந்த மாதிரி முயன்றதில்லை-கமல்


3 படத்தில் மகளின் நடிப்பைப் பார்த்து மகிழ்ச்சியடைந்திருக்கிறார் நடிகர் கமல்ஹாஸன். 

லாஸ் ஏஞ்சல்ஸுக்குப் புறப்படும் முன் இந்தப் படத்தை கமலுக்கு போட்டுக் காட்டினார்களாம் தனுஷும் ஐஸ்வர்யாவும். 

படம் பார்த்துவிட்டு, மகளை பாசத்துடனும் பெருமையுடனும் தழுவி உச்சிமுகர்ந்த கமல், யாருடைய பயிற்சியும் அறிவுரையும் இன்றி தன் சுய முயற்சியில் இத்தனை தூரம் நடிப்பில் ஸ்ருதி முன்னேறியிருப்பதை ஒரு பேட்டியில் பகிர்ந்து கொண்டுள்ளார் கமல்.

அவர் கூறுகையில், "பொதுவாக ஸ்ருதி அவரது அம்மா போல இருப்பதாக சொல்வார்கள். ஆனால் இந்தப் படத்தில் ஸ்ருதி உருவில் என்னைப் பார்த்தேன். இதை ஒரு தந்தையாக இருந்து சொல்லவில்லை. ஒரு நடிகையாக இப்போது அவர் வந்திருக்கும் இடம் மகிழ்ச்சியளிக்கிறது," என்றார்.

துணிச்சலான பெண் இயக்குநர், இதுவரை எந்த பெண் இயக்குநரும் இந்த மாதிரி முயன்றதில்லை என ஐஸ்வர்யாவையும் பாராட்டியுள்ளார் கமல். 

இந்தப் படம் மே மாதம் இந்தியில் வெளியாகிறது.

இந்திப் பதிப்பில் சில மாறுதல்களைச் செய்யுமாறு அட்வைஸும் கொடுத்துள்ளார் கமல். தமிழ்ப் படம் என்பதைக் காட்டும் சில காட்சிகளை மட்டும் இந்திக் கேற்ப மாற்றச் சொன்னாராம்.

இப்படி ஒரு முதலிரவுக் காட்சியை தமிழ் சினிமா இதுவரை பார்த்திருக்காது. தனுஷுக்கும் ஸ்ருதிக்கும் அப்படி ஒரு நெருக்கம்.

Written By Unknown on Sunday, April 1, 2012 | 10:20 AM

இந்திய சினிமாவின் இரு பிரபல நட்சத்திரங்களின் வாரிசுகள் இணைந்துள்ள படம் 3. ரஜினியின் மகளான ஐஷ்வர்யா தனுஷ் இயக்கியுள்ள இந்த படத்தில் தனுஷ், கமல்ஹாஸன் மகள் ஸ்ருதிஹாஸன் ஹீரோ, ஹீரோயினாக நடித்துள்ளனர். 

ஐஷ்வர்யாவின் முதல் படம் என்பதால் சாதாரணமாக படப்பிடிப்பை ஆரம்பித்தனர். ஆனால் அவர்களுக்கே தெரியாமல் செய்த ஒரு காரியத்தால் இந்த படத்தை இந்தியா முழுவதும் திரும்பிப் பார்த்தது. கொலவெறிப் பாடலை யூ டியூபில் போட்டதன் மூலம் படம் தானாக விளம்பரமானது. இந்தி, தெலுங்கு என மற்ற மொழிகளிலும் வெளியாக இருக்கிறது.

ஸ்ருதியும் தனுஷும் பள்ளியில் படிக்கும் போதே காதலிக்கிறார்கள். ஸ்ருதியை துரத்தித் துரத்திக் காதலிக்கும் ஒரு சின்ஸியரான மாணவராக இருக்கிறார் தனுஷ். 


பள்ளியில் படிக்கும் போதே, இருவரும் யாருக்கும் தெரியாமல் வீட்டு மொட்டைமாடியில் சந்திப்பது, வீட்டில் யாரும் இல்லாதபோது இருவரும் குஜாலாக இருப்பது போன்ற நல்ல காரியங்கள் தொடர்கிறது. 

பள்ளிப்படிப்பு முடிந்தபிறகும் காதல் தொடர்கிறது. பல எதிர்ப்புகளைத் தாண்டி திருமணாம் செய்துகொள்கிறார்கள். திருமணாத்திற்கு பின் பெற்றோர்களின் சம்மதம் கிடைக்கிறது. மகிழ்ச்சியான சூழலில் வாழ்கின்றனர். 

ஆனால், தன் மனைவி ஸ்ருதிஹாசனுக்கும் தெரியாமல் தனுஷுக்கு ஒரு வியாதி இருப்பதாக படத்தின் இரண்டாம் பாதியில் சொல்லப்படுகிறது. அதாவது அதிகமாக கோபப்படுவதும், அதிகமாக சந்தோஷப்படுவதும். சிம்பிளா சொன்னா, ஒருவர் மேல் கோபம் வரும்போது, அவங்க மண்டைய ரெண்டா பொளந்து ரத்தகாயமாக்கிட்டு, அப்புறம், அய்யோ... நானா இப்படி பண்ண, எனக்கு ஏன் தான் இப்படியெல்லாம் தோணுதோ என்று தலைமேல அடிச்சுக்கிட்டு அழுவது!
காதல் கொண்டேன், மயக்கம் என்ன இரண்டு தனுஷையும் ஒன்னா பார்த்தா எப்படி இருக்கும். அதே சைக்கோத் தனமான கேரக்டர். இந்த வியாதி முத்திப்போக, கடைசியில் ஸ்ருதிஹாசனை தனுஷ் கொன்றுவிடுகிறாரா? அல்லது தற்கொலை செய்துகொள்கிறாரா? என்பது படத்தின் முடிவு. ஆனால் அது ரசிகர்களுக்கு கொடுமையான முடிவுதான் எனபதில் எந்த சந்தேகமும் இல்லை. 

கதை இதுதான் என்றாலும் அதை திரைக்கதை மூலம் ரொம்ப நல்லாவே குழப்பி இருக்கிறார் இயக்குனர் ஐஸ்வர்யா தனுஷ். 

முதல் பாதியில் சிவகார்த்திகேயன் சிரிக்க வைக்கிறார். இப்படி ஒரு எதார்த்தமான முதலிரவுக் காட்சியை தமிழ் சினிமா இதுவரை பார்த்திருக்காது போல. தனுஷுக்கும் ஸ்ருதிக்கும் அப்படி ஒரு நெருக்கம். தனுஷ் நடித்திருக்கிறார் என்று சொல்வதைவிட, வாழ்ந்திருக்கிறார் என்றே சொல்லலாம். 

குழப்பம் கதையில் மட்டுமே! நடிப்பை பொருத்தவரை இந்த கேரக்டரை தனுஷைத் தவிர வேறு யாரும் நடிக்க முடியாது. உண்மையான சைக்கோ மாதிரியே நடித்திருக்கிறார். ஸ்ருதிஹாசன், பார்ப்பதற்கு ’கும்’முன்னு இருந்தாலும் பல நேரங்களில் ’கம்’முன்னே இருக்காங்க. ஆனாவொன்னா அழுவது எரிச்சல்! 

பாடல்கள் ஏற்கனவே ஹிட்டானவை தான். பாடல்களின் விஷுவல் காட்சிகளும் ஏமாற்றமில்லாமல் அமைந்திருக்கின்றன. கொலவெறி பாடல் அதிரடியான அலட்டல்கள் இல்லாமல் எதார்த்தமாக இருந்தது ஆறுதல். நீ பார்த்த விழிகள்... இதமான மெலடி. 

பொல்லாதவன், ஆடுகளம், சிறுத்தை என பல பரிமாணங்களில் சிறந்த ஒளிப்பதிவாளராக நிரூபித்தவர் வேல்ராஜ். இந்த படத்தில் சாதாரண காட்சிகளையும் கூட பிரம்மிக்கும் வகையில் பதிவு செய்திருக்கிறார்.   

தனுஷுக்கு வியாதி என்பதை ஏற்க முடிந்தாலும், அது எதனால் வந்தது, அதற்கான காரணங்கள் என்ன என்பதை கதையில் சொல்லி இருந்தால், கொஞ்சம் தெளிவா குழம்பி இருக்கலாம். என்ன காரணம்னு கடைசி வரைக்கும் சொல்லாமல், ஹீரோவோடு சேர்த்து பார்வையாளர்களையும் சாகடிப்பது எந்த விதத்தில் நியாயம்? (எப்படி இருந்தாலும், ஐஸ்வர்யா தனுஷ் செல்வராகவனின் உதவியாளர் என்பதை நிரூபித்துவிட்டார் )

படத்தை எடுத்தவருக்கு பைத்தியமா? படத்தில் நடிப்பவருக்கு பைத்தியமா? இல்ல படத்தை பார்ப்பவர்களுக்கு பைத்தியமான்னு?  ஒரு பெரிய கேள்வியே வருகிறது.அடிக்கிற வெயில்ல ஏற்கெனவே தலைவலி, இதுல இதுவேறவா? 

3 - மண்ட காயுது! ஒரே தலைவலி, ஏன் இந்த கொலவெறி?

ரஜினி-கமல் இணைந்து நடிப்பதை விட மறுபடியும் தனுஷ்-ஸ்ருதி எப்போது இணைவார்கள் என்ற கேள்விகளே அதிகம்

Written By Unknown on Saturday, March 31, 2012 | 7:26 AM


தமிழ் திரையுலகில் ரசிகர்கள் மத்தியில் பெரும்எதிர்பார்ப்பிற்கு பின்பு தனுசின் “3“ திரைப்படம் திரைக்கு வந்துள்ளது.
திரைக்கதை தனுஷின் வாழ்க்கை பள்ளிப் பருவத்திலிருந்து ஆரம்பமாகிறது. பள்ளிப் பருவத்தில் காணப்படும் நாயகன் தனுஷ் தன்னுடைய பள்ளிப் பருவத்திற்கே திரும்பியுள்ளார்.
நாயகன் தனுசும், நாயகி ஸ்ருதியும் பிளஸ் டூ படிக்கும் மாணவர்களாக வருகிறார்கள். இவர்கள் இரண்டு பேருக்கும் இடையே காதல் ஆரம்பமாகிறது.
பள்ளிப் பருவத்தில் நாயகி ஸ்ருதியை கவர நாயகன் தனுஷ் செய்யும் விளையாட்டுகள் ரசிகர்களை கை தட்ட வைக்கிறது.
பின்னர் கல்லூரி வரை செல்லும் இந்த காதலர்கள் வழக்கம் போல திருமணம் செய்ய முடிவெடுக்கிறார்கள். திருமணத்திற்கு பெற்றோரிடம் சம்மதம் கேட்க, ஆரம்பத்தில் எதிர்ப்பு தெரிவித்தாலும் பின்னர் திருமணத்திற்கு ஒப்புக்கொண்டு, இவர்களது திருமணம் நடைபெறுகிறது.
திருமணத்திற்கு பின்பு நாயகன் தனுஷ், நாயகி அம்மாவாக நடித்துள்ள ரோகிணியிடம் பேசும் காட்சிகள் எதார்த்தமாக அமைந்துள்ளது.
இதற்கிடையில் சிவாகார்த்திகேயன் தன்னுடைய டைமிங் நகைச்சுவையால் கலக்குகிறார்.
இந்நிலையில் தனுஷின் “கொலைவெறி” கிறுக்குத்தனம் ஆரம்பமாகிறது.
அதாவது தனுஷ் “பை போலார் டிஸ் ஆர்டர்” என்ற மனநோயால் பாதிக்கப்படுகிறார். இந்த வியாதியை திருமணத்திற்கு பின்பு தன் மனைவி ஸ்ருதியிடமிருந்து மறைக்கிறார். இதற்கு பின்பு என்ன நடக்கிறது என்பது தான் “3” திரைப்படத்தின் திரைக்கதை.
”கொலைவெறி” பாடல் மூலம் பெரும் எதிர்ப்பார்ப்பைக் கிளப்பிவிட்டதால் திரையரங்குகளில் கூட்டம் அலைமோதுகிறது.
அறிமுக இயக்குநர்களின் படங்களுக்கே உரிய காட்சிப் பிழைகள், பெண் இயக்குநர்கள் வழக்கமாக செய்யும் தவறுகள் எதுவும் இல்லாமல், ஒரு பக்குவமான காட்சிப்படுத்தலை “3” ல் பார்க்க முடிகிறது. அந்த வகையில் இயக்குநர் ஐஸ்வர்யாவை புகழ்வதில் தவறில்லை.
இருப்பினும் செல்வராகவனின் உதவியாளர் என்பதால் துள்ளுவதோ இளமை, மயக்கம் என்ன போன்ற படங்களின் சாயல்களை “3” திரைப்படத்தில் காணமுடிகிறது.
ஆனால் இப்படத்தின் மூலம் ரஜினியின் பொண்ணு என்ற சிறப்புப் பட்டம் இனி ஐஸ்வர்யாவுக்கு தேவையில்லை என்ற நிலை உறுதியாக வந்துவிட்டது. திரையுலகில் “3” படம் அவருக்கென்று தனி மதிப்பை பெற்றுத்தரும் என்பதில் சந்தேகமில்லை.
3_movie_2
நாயகன் தனுஷ் சாதரணமாக நடிப்பதை விட கிறுக்கனாக நடிப்பதில் திறமையாக செயற்படுகிறார். ஆனால் இனி அடுத்து வரும் படங்களில் ரசிகர்கள் தனுஷை சைக்கோவாக பார்ப்பதை விரும்ப மாட்டார்கள்.
நாயகி ஸ்ருதியின் நடிப்பு ஏழாம் அறிவில் இருந்து ஒரு படி முன்னேறியே உள்ளது. ஆனால் அவர் அழ ஆரம்பித்தால் ரசிகர்களால் சகிச்ச முடியவில்லை.
இயக்குனர் ஐஸ்வர்யா என்பதை மறந்து தனுசும், ஸ்ருதியும் படத்தில் அநியாயத்துக்கு நெருக்கம் காட்டியுள்ளனர். சிவகார்த்திகேயன் காமெடி கலட்டா மிகப் பிரமாதம், சந்தானத்துக்கு போட்டியாக வந்துவிடுவார் போலிருக்கிறது. சந்தானம் ஏதோ வந்து போகிறார். சுந்தர் ராமு, பிரபு, பானுப்ரியா, ரோகிணி என எல்லோருமே படத்துக்கு பலம் சேர்த்துள்ளனர்.
இடைவேளை வரை அழகாகப் பயணிக்கும் படம், தனுஷ் மனநோயாளியாக மாறியதும் பார்வையாளர்களைப் பொறுமையிழக்க வைக்கிறது. தனுஷின் இந்த மனநோய் அவருக்கு மட்டும் தெரிந்து(நண்பன் ஒருவனைத் தவிர), மற்ற யாருக்குமே தெரியாமல் போவது எப்படி. லாஜிக் மீறல் கொஞ்சம் அதிகம்.
அனிருத்தின் இசையில் எல்லாப் பாடல்களுமே கேட்கும் படியாக உள்ளது. உலகமெங்கும் ஹிட்டான ”கொலவெறி” பாடலே இதற்கு சாட்சி. வேல்ராஜின் ஒளிப்பதிவு அருமை.
இளைஞர் பட்டாளத்திற்கு “3” திரைப்படம் நிச்சயம் பிடிக்கும் என்பதில் சந்தேகமில்லை. “3” படத்தின் மூலம் ஐஸ்வர்யாவுக்கு திரையுலகில் மதிப்பு இனி அதிகரிக்கும் என்பதிலும் சந்தேகமில்லை.
நடிகர்கள்: தனுஷ், ஸ்ருதி ஹாசன், இளையதிலகம் பிரபு, பானுப்பிரியா, ரோஹிணி, சந்தானம், சிவகார்த்திகேயன், சுந்தர் ராமு
இசை: அனிருத்
ஒளிப்பதிவு: வேல்ராஜ்
எழுத்து, இயக்கம்: ஐஸ்வர்யா தனுஷ்
3_movie_3

தனுஷ்-ஸ்ருதி ஜோடிக்கு ரஜினி-கமல் பாராட்டு!

Written By Unknown on Thursday, March 29, 2012 | 1:20 PM


தனது விஸ்வரூபம் படத்தின் கடைசிகட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டிருக்கும் கமல் ஒவ்வொரு நிமிடத்தையும் வீணாக்காமல் செலவு செய்து கொண்டிருக்கிறார். இருந்தாலும் ஸ்ருதிஹாஸனுக்காக அவர் நடித்த ’3’ படத்தின் ப்ரீமியர் ஷோ பார்த்திருக்கிறார். 

கமல் படத்தை ரசித்து பார்த்தாராம். படம் பார்த்து முடித்த பின் 3 படக்குழுவையும் படத்தின் இயக்குனரான ஐஸ்வர்யாவையும் பாராட்டியிருக்கிறார்.தனுஷ்-ஸ்ருதி இடையேயான கெமிஸ்டிரி அற்புதமாக இருப்பதாக கூறினாராம். 
படத்தின் ஹீரோவான தனுஷை தனியே அழைத்து நன்றாக நடித்துள்ளதாக பாராட்டியுள்ளார். சில வாரங்களுக்கு முன்பே ரஜினி படத்தை பார்த்துவிட்டார். அப்போது ரஜினி தனுஷையும்-ஸ்ருதிஹாஸனையும் பாராட்டினார். அப்படிப்பட்ட ஜோடிப் பொருத்தமா!(படத்தில்) இருவருக்கும்.....

‘3’ படத்தின் எதிர்பார்ப்பும் ரசிகர்களுக்கிடையே பெருகிக் கொண்டே வருகிறது. “ஊர்ல இப்ப 3-னு ஒரு காய்ச்சல் பரவிடுச்சு. இதுக்கு மருந்து 30-தேதி தான் மார்க்கெட்ல வருதாம்” என்று ரசிகர்கள் தங்களது எதிர்பார்ப்பை கலப்பாக சமூக இணையதளங்களில் பதிவு செய்து வருகின்றனர். ரஜினி-கமல் இணைந்து நடிப்பதை விட மறுபடியும் தனுஷ்-ஸ்ருதி எப்போது இணைவார்கள் என்ற கேள்விகளே அதிகம் பறக்கின்றன. 

தனுஷின் '3' படம் ஒரு ஏரியா மட்டுமே ரூ.3 கோடிக்கு விற்பனை - ஆந்திராவில் சாதனை!

Written By Unknown on Sunday, March 18, 2012 | 3:54 PM

தனுஷின் '3' படம் ஒரு ஏரியா மட்டுமே ரூ.3 கோடிக்கு விற்பனை - ஆந்திராவில் சாதனை!தனுஷே எதிர்ப்பார்க்காத அளவுக்கு 3 படம் அவருக்கு புகழையும் பணத்தையும் கூரையைப் பிய்த்துக் கொண்டு கொட்ட வைக்கிறது.

மனைவி ஐஸ்வர்யா இயக்கத்தில் அவர் நடித்துள்ள இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள 'கொலை வெறி' பாடல் மூலம் அவருக்கு உலக புகழ் கிடைத்தது. நாடு முழுவதும் விருந்துகள், விழாக்கள், பிரதமர் வீட்டில் விருந்து என இந்தப் பாடலால் தனுஷ் பெற்றது ஏராளம். இந்திப் பட வாய்ப்புகளும் வந்துள்ளன அவருக்கு.

கொலை வெறி பாடல், `3' படத்தின் வியாபார அந்தஸ்தை தூக்கி நிறுத்தி இருக்கிறது. இந்த படத்தின் தெலுங்கு உரிமையை ஒரு பிரபல வினியோகஸ்தர் வாங்கியிருக்கிறார். இவரிடமிருந்து நிஜாம் ஏரியாவின் வினியோக உரிமையை மட்டும் ரூ.3 கோடிக்கு வாங்கியிருக்கிறார், இன்னொரு வினியோகஸ்தர்.

ஆந்திராவில் மொத்தம் 9 வினியோக ஏரியாக்கள் உள்ளன. ஆக, `3' படம், ஆந்திராவில் மட்டும் குறைந்த பட்சம் ரூ.10 கோடிக்கு வியாபாரம் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது!

சூப்பர் ஸ்டார் ரஜினி தவிர வேறு எந்த தமிழ் நடிகரின் படத்துக்கும் இந்த விலை அங்கு கொடுக்கப்பட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மாமனாரால் பிழைத்துக்கொண்ட மாப்பிள்ளை

Written By Unknown on Saturday, March 3, 2012 | 3:35 PM

3 படத்தின் கிளைமாக்ஸில் தனுஷ் இறப்பது போன்று படமாக்கப்பட்டதை ஐஸ்வர்யா மாற்றியமைத்துள்ளாராம்.

ரஜினிகாந்தின் மூத்த மகளும், தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா 3 படத்தின் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்துள்ளார். தான் எடுக்கும் முதல் படத்தில் கணவர் தனுஷை ஹீரோவாக போட்டு, ஸ்ருதி ஹாசனை ஹீரோயினாக்கியுள்ளார். இந்த படத்தில் தனுஷ் எழுதி, பாடிய ஒய் திஸ் கொலவெறி, கொலவெறி டி பாடல் உலகப் புகழ்பெற்றுள்ளது.

 இப் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் தனுஷ் இறந்துபோவது போல் ஐஸ்வர்யா காட்சியமைத்திருந்தார். படத்தைப் பார்த்த ரஜினி, படம் நன்றாக இருப்பதாக கூறியுள்ளார். அதேசமயம், படத்தின் கிளைமாக்ஸ் சோகமாக இருப்பதை அவர் விரும்பவில்லை. அதை மாற்றி சந்தோஷமாக முடிவது போல் எடுக்கலாமே என்று ஐடியா கொடுத்தார்.

சூப்பர் ஸ்டார் பேச்சுக்கு மறு பேச்சு உண்டா என்ன. இதையடுத்து தற்போது படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை மாற்றி தனுஷ் உயிருடன் இருப்பது போன்று மாற்றி விட்டாராம் ஐஸ்வர்யா.

ரசிகர்களும் சோகமான முடிவை விரும்பமாட்டார்கள் என்பதால் அவர் கிளைமாக்ஸை சந்தோஷமாக மாற்றியுள்ளார் என்று கூறப்படுகின்றது. இந்த படம் இந்த மாத இறுதியில் ரிலீஸ் ஆகிறது.

கொலவெறி புகழ் 3 படத்தை ஏலத்தில் விட கஸ்தூரி ராஜா முடிவு

Written By Unknown on Tuesday, February 28, 2012 | 2:28 PM


கொலவெறி டி பாடல் புகழ் 3 படத்தை ஏலத்தில் விற்க படத்தின் தயாரிப்பாளர் கஸ்தூரி ராஜா முடிவு செய்துள்ளார்.3 படம் மூலம் ரஜினிகாந்தின் மூத்த மகளும் தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா இயக்குனராகியிருக்கிறார். இந்த படத்தில் தனது கணவனை நாயகனாகவும், தோழி ஸ்ருதி ஹாசனை நாயகியாகவும் நடிக்க வைத்திருக்கிறார். படத்தை தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா தயாரித்திருக்கிறார். படத்திற்கு புதுமுகம் அனிருத் இசையமைத்திருக்கிறார். இதில் தனுஷ் பாடிய ஒய் திஸ் கொலவெறி டி பாடல் இந்தியா மட்டும் இன்றி உலகப் புகழ் பெற்றுள்ளது. இந்த பாட்டைக் கேட்ட பிரதமர் மன்மோகன் சிங் தனுஷ், ஸ்ருதியை அழைத்து விருந்து கொடுத்தார். இதனால் படத்தின் புகழ் மேலும் பரவியது. தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய 3 மொழிகளில் வெளியாகும் இந்த படத்தை ரூ.50 கோடிக்கு வாங்க வினியோகஸ்தர்கள் தயாராக உள்ளனர்.தனுஷின் திருடா திருடி படத்தின் `என்.எஸ்.சி.' வினியோக உரிமையை ஏலத்தில் விட்டது போன்று 3 படத்தையும் ஏலத்தில் விட கஸ்தூரி ராஜா முடிவு செய்துள்ளார்.
 

3 படத்தில் 3வது முக்கிய நடிகர் ரஜினி

Written By Unknown on Saturday, February 25, 2012 | 8:05 PM

   தனுஷ் நடிப்பி  ல் அடுத்து வெளிவரும் படத்து வைக்கப்பட்டு '3' என்ற தலைப்புக்கு அர்த்தம் என்ன என்ற 'ஆராய்ச்சி' ஆரம்பமாகிவிட்டது.  

கொலைவெறி என்ற பாடல் மூலம் உலகம் முழுக்க பேசப்படும் படமாகிவிட்ட, 3-ல் தனுஷ் - ஸ்ருதி ஜோடியாக நடித்துள்ளனர்.  
 படத்தில் முக்கியமான ஒரு பாத்திரத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி தோன்றுவார் என்று முதலில் கூறப்பட்டது. ஆனால் பின்னர் படத்தின் இயக்குநர் ஐஸ்வர்யாவே அதை மறுத்திருந்தார்.

இப்போது படம் முடிந்து வெளியீட்டு உரிமை பேரங்கள் நடக்கும் நிலையில் மீண்டும் படத்தில் ரஜினி நடித்திருக்கிறார் என்ற செய்திகள் மீண்டும் கிளம்பியுள்ளன.

இந்த முறை செய்தியை யாரும் மறுக்கவில்லை. மாறாக படத்தின் தயாரிப்பாளரான கஸ்தூரி ராஜா, படத்தில் இடம்பெற்றுள்ள 3வது முக்கிய நடிகர் குறித்து எதுவும் சொல்ல மாட்டோம். அது சஸ்பென்ஸ் என்று கூறியுள்ளார்.

நல்ல பிஸினெஸ் டெக்னிக் சாரே... ரஜினியே உங்ககிட்ட ட்யூஷன் கத்துக்கணும் போங்க!தனுஷ் நடிப்பில் அடுத்து வெளிவரும் படத்து வைக்கப்பட்டு '3' என்ற தலைப்புக்கு அர்த்தம் என்ன என்ற 'ஆராய்ச்சி' ஆரம்பமாகிவிட்டது.

கொலைவெறி என்ற பாடல் மூலம் உலகம் முழுக்க பேசப்படும் படமாகிவிட்ட, 3-ல் தனுஷ் - ஸ்ருதி ஜோடியாக நடித்துள்ளனர்.

படத்தில் முக்கியமான ஒரு பாத்திரத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி தோன்றுவார் என்று முதலில் கூறப்பட்டது. ஆனால் பின்னர் படத்தின் இயக்குநர் ஐஸ்வர்யாவே அதை மறுத்திருந்தார்.

இப்போது படம் முடிந்து வெளியீட்டு உரிமை பேரங்கள் நடக்கும் நிலையில் மீண்டும் படத்தில் ரஜினி நடித்திருக்கிறார் என்ற செய்திகள் மீண்டும் கிளம்பியுள்ளன.

இந்த முறை செய்தியை யாரும் மறுக்கவில்லை. மாறாக படத்தின் தயாரிப்பாளரான கஸ்தூரி ராஜா, படத்தில் இடம்பெற்றுள்ள 3வது முக்கிய நடிகர் குறித்து எதுவும் சொல்ல மாட்டோம். அது சஸ்பென்ஸ் என்று கூறியுள்ளார்.

நல்ல பிஸினெஸ் டெக்னிக் சாரே... ரஜினியே உங்ககிட்ட ட்யூஷன் கத்துக்கணும் போங்க!

பிரதமரின் விருந்துக்கு 'கொலவெறி' நாயகி ஸ்ருதிக்கும் அழைப்பு

Written By Unknown on Friday, February 10, 2012 | 1:45 PM

Shruti Hassanசில தினங்களுக்கு முன் கொலவெறி பாடலுக்காக, அதை எழுதிப் பாடிய நடிகர் தனுஷுக்கு பிரதமர் இல்லத்தில் நடந்த விருந்தில் கலந்து கொள்ள அழைப்பு வந்ததும், அதில் கலந்து கொண்ட பிறகு தனுஷுக்கு கிடைத்த கூடுதல் பப்ளிசிட்டியும் நாடறிந்த சமாச்சாரம்.

இந்த கொலவெறி விருந்துகள் இப்போதைக்கு ஒய்வது போலத் தெரியவில்லை. ஹீரோ தனுஷுக்கு அடுத்து, அந்தப் படத்தின் ஹீரோயின் ஸ்ருதிக்கும் அழைப்பு வந்துள்ளதாம், பிரதமர் விருந்தில் கலந்துகொள்ளுமாறு.

தனுஷ் கலந்து கொண்ட விருந்தில் சிறப்பு விருந்தினராக வந்திருந்தவர் ஜப்பான் பிரதமர்.

இந்த முறை மொரீசியஸ் பிரதமர் நவின் ராம்கூலத்துக்கு டெல்லி ரேஸ்கோர்சில் உள்ள தனது வீட்டில் மன்மோகன்சிங் விருந்து அளிக்கிறார். இந்த விருந்துக்குதான் ஸ்ருதிக்கும் அழைப்பு வந்துள்ளது.

இதுகுறித்து ஸ்ருதி கூறும்போது, "பிரதமர் விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்க எனக்கு வாய்ப்பு கிட்டியதை கவுரவமாக நினைக்கிறேன். இது எனக்கு பெரிய மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த இளம் வயதில் எனக்கு இதுபோன்ற வாய்ப்பு கிடைத்திருப்பது என் அதிர்ஷ்டம்தான்," என்றார்.

தனுஷுடன் கிசுகிசு: குமுதம் பத்திரிகைக்கு நோட்டீஸ் அனுப்பினார் ஸ்ருதி!

Written By Unknown on Sunday, January 22, 2012 | 11:58 AM

Shruti Haasanநடிகர் தனுஷுடன் இணைத்து செய்தி வெளியிட்டதற்காக குமுதம் வார இதழுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார் நடிகை ஸ்ருதி.

ஐஸ்வர்யா தனுஷ் இயக்கி வரும் 3 என்ற படத்தில் நாயகியாக நடிக்கிறார் ஸ்ருதி. இதில் ஐஸ்வர்யாவின் கணவர் தனுஷ் நாயகனாக நடிக்கிறார். படத்தில் நடிக்கும்போது தனுஷுக்கும் ஸ்ருதிக்கும் காதல் அரும்பியதாகவும், இருவரும் ஜோடியாக சுற்றுவதாகவும் செய்திகள் வெளியாகின. 

ஆங்கிலப் பத்திரிகைகளிலும் இந்த செய்தி வெளியானது.

ஆரம்பத்தில் அமைதி காத்த தனுஷ் மற்றும் ஸ்ருதி தரப்பு, விவகாரம் ஓயாமல் தொடர்ந்ததால், இப்போது மறுப்பு தெரிவித்து வருகிறது.

இந்த செய்திகளை முதலில் ஐஸ்வர்யா மறுத்திருந்தார். இப்போது ஸ்ருதி ஹாஸனும் மறுத்துள்ளார். அத்துடன் செய்தியை வெளியிட்டதற்காக குமுதம் பத்திரிகைக்கு அவர் வக்கீல் நோட்டீசும் அனுப்பியுள்ளார்.  

இதுகுறித்து அவர் கூறுகையில், "என்னையும் தனுசையும் இணைத்து வெளியான கட்டுரை முற்றிலும் கற்பனையானது. ஆதாரம் இல்லாதது. இதற்காக குமுதத்துக்கு நான் வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளேன். பதில் அளிக்காவிட்டால் அடுத்த கட்டமாக சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன். குறிப்பிட்ட  ஆங்கில நாளிதழுக்கும் நோட்டீஸ் அனுப்பவிருக்கிறேன்.  

சக நடிகர் என்ற முறையில் தனுஷ் படப்பிடிப்பில் தொழில் ரீதியாக எனக்கு உதவிகள் செய்தார். தொழில் ரீதியாகவே எங்கள் தொடர்புகள் இருந்தது. இதை வைத்து தவறான வதந்திகளை பரப்புவது வருத்தம் அளிக்கிறது.

தனுஷ் மனைவி ஐஸ்வர்யா வும் நானும் நண்பர்களாக இருக்கிறோம். இந்த வதந்தி எங்கள் நட்பை பாதிக்காது," என்றார்.

ரஜினியை வைத்து விளம்பரம் தேடுகிறோமா? - ஐஸ்வர்யா மறுப்பு

Written By Unknown on Thursday, January 19, 2012 | 9:00 AM

அப்பா ரஜினி பெயரை வைத்து விளம்பரம் தேடுவதில் மகள்கள் ஐஸ்வர்யாவும் சௌந்தர்யாவும் போட்டி போடுவதாக வந்த செய்திகளை மறுத்துள்ளார் ஐஸ்வர்யா.ஐஸ்வர்யா தனது கணவர் தனுஷை வைத்து '3' என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் 'கொலவெறி...' பாடல் உலகப் புகழ் பெற்றுவிட்டது. அதே நேரம், இந்தப் படத்தில் ரஜினி நடிப்பதாகவும், இசை வெளியீட்டுக்கு வருவார் என்றெல்லாம் யூகங்களின் அடிப்படையில் செய்திகள் வெளியாகின. ஆனால் ரஜினி நடிக்கவுமில்லை, அந்தப் படம் தொடர்பான எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளவுமில்லை. இந்தப் படம் குறித்து அவர் வெளிப்படையாக ஒரு வார்த்தை கூட பேசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இன்னொரு பக்கம் இளையமகள் சௌந்தர்யா, அப்பா ரஜினியை வைத்து படங்கள் தயாரிப்பதில் முனைப்பு காட்டி வருகிறார். ஆரம்பத்தில் ரஜினியை வைத்து சுல்தான் என்ற படத்தை ஆரம்பித்தார். அந்தப் படம் இப்போது கைவிடப்பட்டு, கோச்சடையான் படத்துக்கான ஆயத்த வேலைகள் நடந்து வருகின்றன.

இடையில் தொடங்கப்பட்ட ராணா படம், ரஜினி உடல்நிலை காரணமாக தள்ளிப் போடப்பட்டுள்ளது. இந்தப் படத்துக்கு இணை தயாரிப்பாளர், தொழில்நுட்ப இயக்குநர் சௌந்தர்யாதான்.

இரண்டு மகள்களும் அப்பாவின் சூப்பர் ஸ்டார் இமேஜ் மற்றும் புகழை வைத்து முடிந்தவரை விளம்பரம் தேடிக் கொள்வதாக சர்ச்சை கிளம்பியுள்ளது. மேலும் இருவருக்கும் இடையே இந்த விஷயத்தில் பெரும் போட்டியே நடப்பதாகவும், அதில் ஐஸ்வர்யாவின் கை ஓங்கியிருப்பதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டிருந்தது.ய

இதற்கு ஐஸ்வர்யா மறுப்பு தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், "ரஜினி பெயரை நானும், என் தங்கை சௌந்தர்யாவும் விளம்பரத்துக்கு பயன்படுத்துவதாகவும், எங்கள் இருவர் இடையே போட்டி நிலவுவதாகவும் வெளியான செய்தி வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.

தங்கைக்கும் எனக்கும் மோதல் வர அவசியம் இல்லை. அவர் அனிமேஷன் படத்தை இயக்குகிறார். நான் சினிமா படமொன்றை இயக்கி வருகிறேன். எங்களுக்குள் எப்படி போட்டி வரும். சூர்யாவும் கார்த்தியும் ஒரே துறையில் உள்ளனர். அவர்களுக்குள் போட்டியா இருக்கிறது. என் கணவர் தனுஷ் கூட சூப்பர் ஸ்டார் ரஜினி பெயரை விளம்பரத்துக்காக பயன்படுத்தியது இல்லை. எங்களுக்கு திருமணமாகி 8 வருடம் ஆகிறது. இந்த எட்டு ஆண்டுகளில் எப்போதாவது அப்பா பெயரை எங்கள் சுய விளம்பரத்துக்காக பயன்படுத்தினோம் என்று சொல்ல முடியுமா...

தனுஷின் எந்த பட விழாவிலும் அப்பா பங்கேற்றது இல்லை. அப்பா உடல் நலம் குன்றி மருத்துவமனையில் இருந்தபோது மட்டும் ஒரு பொறுப்புள்ள மருமகனாக இருந்து அவரது உடல்நிலை பற்றிய விவரங்களை ரசிகர்களுக்கு தெரிவித்தார். இதில் எங்களுக்கு என்ன விளம்பரம்? செய்திகளை தார்மீக பொறுப்போடு வெளியிட வேண்டும்.

எங்களைப் பற்றிய செய்தியை என்னிடமோ தனுஷிடமோ தொடர்பு கொண்டு விளக்கம் பெற்று வெளியிடலாமே... நாங்கள் தொடர்பு கொள்ள முடியாத தூரத்தில் இல்லையே. யார் கேட்டாலும் விளக்கம் சொல்கிறோமே. ஆனால் எதையுமே கேட்காமல் இஷ்டப்படி எழுதுவது சரியா?," என்று கேட்டுள்ளார்.

தனுஷின் கொலைவெறி கொண்டாட்டம்

Written By Unknown on Thursday, January 12, 2012 | 10:33 AM


தமிழில் இயக்குனராக களமிறங்கியுள்ள ஐஸ்வர்யாவுக்கு ஊடகத்தினர் ஆதரவும், ஒத்துழைப்பும் தர வேண்டுமென்று நாயகன் தனுஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கொலிவுட்டில் நடிகர் தனுஷ் தன்னுடைய கொலைவெறி பாடல் வெற்றி பெற்றதற்கு படக்குழுவினருடன் விருந்து வைத்து கொண்டாடியுள்ளார்.
சென்னை தி.நகரில் உள்ள ஐந்து நட்சத்திர விடுதியில் 3 படத்தின் இயக்குனர் ஐஸ்வர்யா தனுஷ், இசையமைப்பாளர் அனிருத் மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
மொழி தெரியாத ரசிகர்கள் மத்தியில் முணு முணுக்கப்படும் பாடலாக கொலைவெறி பாடல் மாறியுள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபர் ரத்தன் டாட்டா, பிரதமர் மன்மோகன் சிங் ஆகிய பிரபலங்கள் அளித்த விருந்தில் கலந்து கொண்ட மகிழ்ச்சியை ஊடகத்தினரிடம் பகிர்ந்துள்ளார்.
நான் பத்து ஆண்டுகளுக்கு மேலாக சினிமாவில் நடித்து வருகிறேன். என்னுடைய மனைவி ஐஸ்வர்யா ''3'' படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குனராக களமிறங்கியுள்ளார்.
அவருக்கு ஊடகத்தினர் ஆதரவும், ஒத்துழைப்பும் தர வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

'கொலவெறி'யாகப்போகும் டிசம்பர் 23!

Written By Unknown on Saturday, December 17, 2011 | 7:21 PM


  இளசுகள் முதல் பெரியவர்கள் வரை பட்டிதொட்டியெங்கும் கொலைவெறியைக் கிளப்பும் வை திஸ் கொலவெறிடி பாடலின் வரவேற்பால் இப்பாடல் இடம்பெற்றுள்ள '3' படத்தின் பாடல் வெளியீடு எப்போது என பலரும் ஆர்வமாகவுள்ளனர். 

இப்படத்தின் பாடல் உரிமையை தன்வசம் கொண்டுள்ள சொனி நிறுவனம் இம்மாதம் 23ஆம் திகதி சென்னையில் கொலைவெறியாக்கலாம் என தீர்மானித்துள்ளர். இதன் படி டிசம்பர் 23ஆம் திகதி '3' படத்தின் பாடல்களை வெளியிட படக்குழுவினர் தீவிரமாக பணியாற்றி வருகிறார்களாம். 

இது குறித்து ஜஸ்வர்யா தனுஷ் தனது இணையத்தளத்தில் 'வை திஸ் கொலவெறி பாடலினைப் போன்றே வித்தியாசமான முறையில் வெளியீட்டு விழாவினை நடத்தவுள்ளோம் அதற்காக தற்போது தீவிரமாக பணியாற்றி வருகிறோம்' என குறிப்பிட்டுள்ளா
 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. R News - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger