விமானப்படையின் போர் ஹெலிகாப்டர்களை பயன்படுத்துவது தொடர்பாக இந்திய விமானப் படைக்கும், ராணுவத்துக்கும் இடையே உரிமை பிரச்சினை இருந்து வருகிறது. ராணுவ மந்திரி ஏ.கே.அந்தோணி இதனை குடும்ப பிரச்சினை என்று ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்.
கடந்த மூன்று வருடங்களாக நிலவி வரும் இப்பிரச்சினையில் ராணுவ மந்திரி ஏ.கே. அந்தோணி சார்பாக இந்தியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் கலந்துகொண்டு ராணுவம் மற்றும் விமானப்படை தளபதிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
அப்போது ராணுவத்திற்கு என்று தனியாக நடுத்தர வகை தாக்கும் ஹெலிகாப்டர்கள் தேவை என்று அரசுக்கு பரிந்துரை செய்தார். இதனைத் தொடர்ந்து அரசு அதற்கான அனுமதியை வழங்கியுள்ளது. முதலாவதாக அமெரிக்காவிடம் இருந்து வாங்கவுள்ள அப்பச்சி வகை ஹெலிகாப்டர்கள் இந்திய ராணுவத்தின் கட்டுப்பாட்டிற்குள் வரும். இதனால் இந்தியத் தரைப்படையினர் விமானப்படையை சார்ந்திராமல், பிரச்சினை காலங்களில் உடனடியாக நடவடிக்கை எடுக்க மிக உதவியாக இருக்கும்.
முன்னாள் ராணுவத் தளபதி வி.கே. சிங், இந்திய ராணுவத்தை பலம் வாய்ந்ததாக மாற்ற அதற்கென தனிப்பட்ட தாக்கும் ஹெலிகாப்டர்கள் தேவை என்று ஏற்கனவே வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.
கடந்த மூன்று வருடங்களாக நிலவி வரும் இப்பிரச்சினையில் ராணுவ மந்திரி ஏ.கே. அந்தோணி சார்பாக இந்தியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் கலந்துகொண்டு ராணுவம் மற்றும் விமானப்படை தளபதிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
அப்போது ராணுவத்திற்கு என்று தனியாக நடுத்தர வகை தாக்கும் ஹெலிகாப்டர்கள் தேவை என்று அரசுக்கு பரிந்துரை செய்தார். இதனைத் தொடர்ந்து அரசு அதற்கான அனுமதியை வழங்கியுள்ளது. முதலாவதாக அமெரிக்காவிடம் இருந்து வாங்கவுள்ள அப்பச்சி வகை ஹெலிகாப்டர்கள் இந்திய ராணுவத்தின் கட்டுப்பாட்டிற்குள் வரும். இதனால் இந்தியத் தரைப்படையினர் விமானப்படையை சார்ந்திராமல், பிரச்சினை காலங்களில் உடனடியாக நடவடிக்கை எடுக்க மிக உதவியாக இருக்கும்.
முன்னாள் ராணுவத் தளபதி வி.கே. சிங், இந்திய ராணுவத்தை பலம் வாய்ந்ததாக மாற்ற அதற்கென தனிப்பட்ட தாக்கும் ஹெலிகாப்டர்கள் தேவை என்று ஏற்கனவே வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.