சிறுவர் விவகாரங்களில் அரசு அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும்; யுனிசெப் - R News
Headlines News :
Home » » சிறுவர் விவகாரங்களில் அரசு அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும்; யுனிசெப்

சிறுவர் விவகாரங்களில் அரசு அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும்; யுனிசெப்

Written By Unknown on Saturday, October 13, 2012 | 5:20 PM

newsநாட்டின் சிறுவர் விவகாரங்களில் இலங்கை அரசு முன்னெடுத்துவரும் செயற்பாடுகள் வரவேற்கத்தக்கதாகவுள்ள போதிலும் குறித்த விடயத்தில் மேலும் அர்ப்பணிப்பு தேவை என ஐ.நா சிறுவர் அமைப்பான யுனிசெப் தெரிவித்துள்ளது.

தெற்காசிய நாடுகளில் முன்னெடுக்கப்பட்டு வரும் சிறார்களுக்கான வேலைத்திட்டங்கள் மற்றும் சுகாதார முன்னெடுப்புகளை ஆராயும் விதமான விஜயங்களை மேற்கொண்டுள்ள, யுனிசெப் அமைப்பின் தெற்காசிய வலய பணிப்பாளர் கெரீன் ஹல்ஷொப, நேற்று அலரிமாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் இடம்பெற்ற சந்திப்பின் போது இந்த விடயத்தை குறிப்பிட்டார்.

இலங்கை மக்களுக்கு சிறந்த சுகாதார நிலைமைகளை ஏற்படுத்திக் கொடுக்கவும், சிறார்களுக்கான போஷாக்கின்மையை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதன்பொருட்டு தமது அமைப்பும் பல வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Share this article :
 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. R News - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger