திருப்பதி திருமலையில் பிரபலமான வெங்கடாசலபதி கோயில் உள்ளது. இந்தக் கோயிலின் தேவஸ்தான ஊழியர் ஒருவர் பெண் துப்புரவு தொழிலாளியுடன் கள்ளத்தனமாக சிற்றின்பம் துய்த்து பிடிபட்டுள்ளார்.
திருமலை ஏழுமலையான் கோயில் உள்ள தேவஸ்தானத்தின் எஸ்.எம்.சி. பக்தர்கள் ஓய்வறையில் சரக்குக் காப்பாளராகப் பணிபுரிந்துவரும் கோபி(40) என்பவரே இவ்வாறு பிடிபட்டுள்ளார். கோபியும், அதே தேவஸ்தான அலுலகத்தில் துப்புரவு தொழிலாளியாக பணிபுரியும் 30 வயது இளம்பெண்ணும் அடிக்கடி கள்ளத்தனமாக தனிமையில் சந்தித்து தகா உறவு கொண்டு இருப்பதாக கண்காணிப்பு அதிகாரிகளுக்கு இரகசிய தகவல் கிடைத்தது.
காவல் கண்காணிப்பு பிரிவு மாவட்ட துணை கண்காணிப்பாளர் நஞ்சுண்டப்பா, துணை ஆய்வாளர் மல்லிகார்ஜூனா மற்றும் காவலணியினர் நேற்றிரவு அப்பகுதியில் சோதனை நடத்தியபோது அங்குள்ள ஒரு அறையில் கோபி, பெண் துப்புரவு தொழிலாளியுடன் தகா உறவு கொண்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து காவல் அதிகாரிகள் கோபியை கைது செய்து விசாரித்து வருகின்றனர
தேவஸ்தான ஊழியர் பாலியல் குற்றத்தில் கைது செய்யப்பட்ட செய்தி திருமலையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
காவல் கண்காணிப்பு பிரிவு மாவட்ட துணை கண்காணிப்பாளர் நஞ்சுண்டப்பா, துணை ஆய்வாளர் மல்லிகார்ஜூனா மற்றும் காவலணியினர் நேற்றிரவு அப்பகுதியில் சோதனை நடத்தியபோது அங்குள்ள ஒரு அறையில் கோபி, பெண் துப்புரவு தொழிலாளியுடன் தகா உறவு கொண்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து காவல் அதிகாரிகள் கோபியை கைது செய்து விசாரித்து வருகின்றனர
தேவஸ்தான ஊழியர் பாலியல் குற்றத்தில் கைது செய்யப்பட்ட செய்தி திருமலையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது