நெடுங்கேணி கீரிசுட்டான் சந்திப்பகுதியில் இளம் குடும்பப் பெண் ஒருவர் இராணுவ சிப்பாய் ஒருவரினால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த முற்பட்ட சம்பவம் ஒன்று நேற்று முற்பகல் நடந்துள்ளது.
வீட்டில் தனியாக இருந்த 22வயதுடைய இளம் குடும்பப் பெண் ஒருவர் மீதே இராணுவச் சிப்பாய் இச் செயற்பாட்டினை மேற்கொள்ள முற்பட்டதாகத் தெரியவந்திருக்கின்றது.இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
கணவர் தோட்டத்துக்கு சென்றவுடன் குறித்த பெண்ணும் அவரின் ஆறு மாதக் குழந்தையும் தனித்திருக்கையில், கீரிசுட்டான் சந்திப் பகுதியில் உள்ள காவலரணில் இருக்கும் சிப்பாய் ஒருவர் அப் பெண்ணின் வீட்டிற்கு சென்றுள்ளார்.
அவரை விசாரித்த சிப்பாய் முதலில் குடும்ப அட்டை மற்றும் இராணுவப் பதிவுப் பத்திரங்களை எடுத்து வரும்படி கூற அவர் உள்ளே சென்றிருக்கின்றார். அவருக்கு தெரியாமல் வீட்டுக்குள் நுழைந்த சிப்பாய் பெண்ணின் வாயைப்பொத்தி பலாத்காரம் செய்ய முற்பட்டுள்ளார்.
இதிலிருந்து தப்பிக்க அந்தப் பெண் கூக்குரலிடவே அயலில் உள்ளமக்கள் திரண்டனர். இராணுவத்தினன் காட்டுக்குள் ஓடி தலைமறைவாகிவிட்டார்.
வீட்டில் தனியாக இருந்த 22வயதுடைய இளம் குடும்பப் பெண் ஒருவர் மீதே இராணுவச் சிப்பாய் இச் செயற்பாட்டினை மேற்கொள்ள முற்பட்டதாகத் தெரியவந்திருக்கின்றது.இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
கணவர் தோட்டத்துக்கு சென்றவுடன் குறித்த பெண்ணும் அவரின் ஆறு மாதக் குழந்தையும் தனித்திருக்கையில், கீரிசுட்டான் சந்திப் பகுதியில் உள்ள காவலரணில் இருக்கும் சிப்பாய் ஒருவர் அப் பெண்ணின் வீட்டிற்கு சென்றுள்ளார்.
அவரை விசாரித்த சிப்பாய் முதலில் குடும்ப அட்டை மற்றும் இராணுவப் பதிவுப் பத்திரங்களை எடுத்து வரும்படி கூற அவர் உள்ளே சென்றிருக்கின்றார். அவருக்கு தெரியாமல் வீட்டுக்குள் நுழைந்த சிப்பாய் பெண்ணின் வாயைப்பொத்தி பலாத்காரம் செய்ய முற்பட்டுள்ளார்.
இதிலிருந்து தப்பிக்க அந்தப் பெண் கூக்குரலிடவே அயலில் உள்ளமக்கள் திரண்டனர். இராணுவத்தினன் காட்டுக்குள் ஓடி தலைமறைவாகிவிட்டார்.